தமிழ்நாடு

அரசு பேருந்து- லாரி மோதி விபத்து: உயிரிழந்த 4 பேரின் குடும்பத்தினருக்கு நிதியுதவி அறிவிப்பு

Published On 2025-03-07 20:51 IST   |   Update On 2025-03-07 20:51:00 IST
  • திருத்தணி அருகே அரசு பேருந்தும் , லாரியும் நேருக்கு நேர் மோதி பயங்கர விபத்து ஏற்பட்டது.
  • விபத்து தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொன்டு வருகின்றனர் .

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அருகே கேஜி கண்டிகை பகுதியில் அரசு பேருந்தும் , லாரியும் நேருக்கு நேர் மோதி பயங்கர விபத்து ஏற்பட்டது. இந்த கோர விபத்தில் 4 பேர் உயிரிழந்தனர்.

இந்த விபத்தில் 28 பேர் படுகாயமடைந்தனர். அவர்கள் உடனடியாக அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

விபத்து தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொன்டு வருகின்றனர் .

இந்நிலையில், இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.3 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

இதுதொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில், "விபத்தில் சிவானந்தம், மகேஷ், முரளி, பாண்டுரங்கன் ஆகியோர் உயிரிழந்தனர் என்ற செய்தியறிந்து வேதனை அடைந்தேன்.

காயமடைந்து திருத்தணி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறும் 28 பேருக்கும் சிறப்பு சிகிச்சை அளிக்க உத்தரவிட்டுள்ளேன்.

விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கல்.

உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.3 லட்சம் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்க உத்தரவிட்டுள்ளேன்" என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 

Tags:    

Similar News