தமிழ்நாடு
மீனவர்களுக்கான நிவாரணத்தை உயர்த்தி வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு
- 6 லட்சம் ரூபாயிலிருந்து இருந்து 8 லட்சமாக உயர்த்தி வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆணை பிறப்பித்துள்ளார்.
- தின உதவி தொகை ரூ.350-ல் இருந்து ரூ.500 ஆக உயர்த்தி வழங்கவும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
சென்னை:
இலங்கை கடற்படையால் பறிமுதல் செய்யப்பட்ட விசைப்படகு உரிமையாளர்களுக்கான நிவாரணத் தொகையை உயர்த்தி முதலமைச்சர்.மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
6 லட்சம் ரூபாயிலிருந்து இருந்து 8 லட்சமாக உயர்த்தி வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆணை பிறப்பித்துள்ளார்.
மேலும் இலங்கை சிறையில் வாடும் மீனவர்களின் குடும்பங்களுக்கு வழங்கப்படும் தின உதவி தொகை ரூ.350-ல் இருந்து ரூ.500 ஆக உயர்த்தி வழங்கவும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.