தமிழ்நாடு

பா.ஜ.க. அரசு சொல்வது பச்சைப்பொய்- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

Published On 2025-03-01 07:43 IST   |   Update On 2025-03-01 07:43:00 IST
  • தமிழ்நாடு காட்டுகின்ற பாதையே ஒவ்வொரு மாநிலமும் தன் தாய்மொழியை காப்பதற்கான பாதை.
  • மாநில மொழிகளை அழிக்கும் பா.ஜ.க.வின் மறைமுக கொள்கையை நேரடியாக தோலுரித்துக்காட்டியது தமிழ்நாடு.

சென்னை:

ஆதிக்க மொழித் திணிப்பை தடுத்து அன்னைத் தமிழை காப்பேன் என தி.மு.க. தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். மேலும் அவர் கூறியிருப்பதாவது:-

* இந்தி திணிப்பை என்றும் எதிர்ப்போம் என்று அன்னைத் தமிழே சூளுரைக்கிறேன். தமிழ்நாடு காட்டுகின்ற பாதையே ஒவ்வொரு மாநிலமும் தன் தாய்மொழியை காப்பதற்கான பாதை.

* இந்திய மொழிகளை ஒவ்வொரு முறையும் காத்து நிற்பது தமிழ்நாடும் தமிழர்களின் மொழியுணர்வும் தான்.

* மாநில மொழிகளை வளர்க்கவும் பரவச் செய்யவும் தேசிய கல்விக்கொள்கை அமல்படுத்துவதாக பா.ஜ.க. சொல்கிறது.

* மத்திய பா.ஜ.க. அரசு சொல்வது பச்சைப்பொய் என்பதை பஞ்சாப், தெலுங்கானா மாநிலங்கள் அமல்படுத்தியுள்ளன.

* இந்தி, சமஸ்கிருதத்தை திணிப்போம், மாநில மொழிகள் அனைத்தையும் வெறுப்போம் என்பதே பா.ஜ.க.வின் மொழிக்கொள்கை.

* பஞ்சாப், தெலுங்கானா மாநிலங்கள் தற்போது தாய்மொழியை கட்டாயம் படிக்க வேண்டும் என உணர்ந்து உத்தரவிட்டுள்ளது.

* மாநில மொழிகளை அழிக்கும் பா.ஜ.க.வின் மறைமுக கொள்கையை நேரடியாக தோலுரித்துக்காட்டியது தமிழ்நாடு என்று கூறியுள்ளார். 

Tags:    

Similar News