தமிழ்நாடு

பாலியல் குற்றம் நிரூபிக்கப்பட்டிருக்கிறதா?: செய்தியாளர்களிடம் கொந்தளித்த சீமான்

Published On 2025-03-01 00:50 IST   |   Update On 2025-03-01 01:01:00 IST
  • சீமானிடம் சுமார் 75 நிமிடம் விசாரணை நடந்தது.
  • என்னிடம் அதே பழைய கேள்விகள் தான் கேட்கப்பட்டன என்றார்.

சென்னை:

நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் வளசரவாக்கம் காவல் நிலையத்தில் விசாரணைக்காக ஆஜரானார். அவரிடம் சுமார் 75 நிமிடம் விசாரணை நடந்தது. அதன்பின், சீமான் காவல் நிலையத்தில் இருந்து வெளியே வந்தார்.

அப்போது அங்கு காத்திருந்த செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:

வீட்டில் போலீசார் சம்மன் ஒட்டியது வேண்டாத வேலை. வீட்டில் ஒட்டிய சம்மனை கிழிக்கக் கூடாது என சட்டம் உள்ளதா?

கடந்த ஆண்டு 3 மணி நேரம் நடத்தப்பட்ட விசாரணையில் கேட்கப்பட்ட அதே கேள்விகள் இந்த முறையும் கேட்கப்பட்டது.

புதிய கேள்விகள் ஒன்றுமில்லை. என்னிடம் அதே பழைய கேள்விகள் தான் கேட்கப்பட்டன.

காவல் நிலையத்திற்கு தாமதமாக வர போலீசாரே காரணம்.

முதல்வர் உரையாற்றிக் கொண்டிருந்ததால் என்னை விசாரணைக்கு அழைக்க தாமதித்தனர்.

பெரியார் கொள்கைகளுக்கு எதிராக பேசுவதால் என்னை கைதுசெய்ய தி.க.விடம் இருந்து தமிழக அரசுக்கு அழுத்தம் சென்றுள்ளது.

என்னை முதல்வராக்காமல் ஓயமாட்டார்கள்.

பாலியல் குற்றம் நிரூபிக்கப்பட்டிருக்கிறதா? விரும்பி பாலியல் உறவு வைத்துக்கொண்டவர் நடிகை தான். நடிகையுடன் ஏற்பட்ட உறவு திருமணம் என்ற நிலைக்கு வரவில்லை. நடிகையுடன் 6 அல்லது 7 மாதங்கள் தான் பழக்கம் இருந்தது.

கஷ்டத்தில் இருந்த போது நடிகையால் எனக்கு எப்படி ரூ 60 லட்சம் தர முடியும்? நடிகை என்னை காதலித்திருந்தால் இப்படி முச்சந்திக்கு வந்திருக்க மாட்டார். நடிகை வைத்திருந்தது காதல் அல்ல, கண்றாவி.

விஜயகாந்த் போன்று எனக்கு சினிமா பின்புலம் இல்லை, ஆனால் மக்கள் என்னை அங்கீகரித்திருக்கிறார்கள்.

மாண்புமிகு ஸ்டாலின் அப்பாவுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன் என தெரிவித்தார்.

பேட்டி முடிந்ததும் காரில் வீடு புறப்பட்ட சீமான், தொண்டர்களுக்கு நன்றி தெரிவித்தபடி சென்றார்.

Tags:    

Similar News