தமிழ்நாடு

கோழைகள் தான் பெண்களுக்கு பின்னால் ஒளிந்து கொள்வர்- சீமான்

Published On 2025-02-28 17:47 IST   |   Update On 2025-02-28 17:47:00 IST
  • சில காவல்துறையினரின் நடவடிக்கையால் ஒட்டுமொத்த காவல்துறைக்கும் களங்கம்.
  • சம்மனை ஒட்டிச் சென்ற பின்னர் அதை படம் எடுத்து பூஜை அறையிலா வைக்க முடியும் ?

சில காவல்துறையினரின் நடவடிக்கையால் ஒட்டுமொத்த காவல்துறைக்கும் களங்கம் என்று நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.

சென்னை வளசரவாக்கம் காவல் நிலையத்தில் இன்று ஆஜராவதற்காக சென்னை வந்துள்ள சீமான் விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.

அப்போது, தனது வீட்டில் சம்மனை ஒட்டியது, அதனை தொடர்ந்து நடந்த சம்பவங்களை குறிிப்பிட்டு சீமான் பேசினார்.

அவர் மேலும் கூறியதாவது:-

சில காவல்துறையினரின் நடவடிக்கையால் ஒட்டுமொத்த காவல்துறைக்கும் களங்கம்.

இன்று மாலை ஆஜராவதாகக் கூறினேன். காவல்துறையினர் தான் இரவு 8 மணிக்கு வருமறு கூறினர். எனக்கான சம்மன் குறித்த தகவல் எனக்கு தெரிந்தால் போதும், மற்றவர்களுக்கு தெரிய வேண்டிய அவசியம் இல்லை.

சம்மனை ஒட்டிச் சென்ற பின்னர் அதை படம் எடுத்து பூஜை அறையிலா வைக்க முடியும் ?

கோழைகள் தான் பெண்களுக்கு பின்னால் ஒளிந்துகொள்வர், வீரர்கள் நேருக்கு நேர் நிற்பர். திமுக ஆட்சிக்கு வரும்போதெல்லாம் இவ்விவகாரம் வருகிறது. அதிமுக ஆட்சியில் இதுபோன்ற அநாகரீகம் இல்லை.

நான் கருத்து கூறுகிறேன் என்றால் எனக்கு பதில் கூறுங்கள். திமுகவில் உள்ள பேச்சாளர்களை வைத்து நேருக்கு நேர் பேசுங்கள். திமுகவில் பேச்சாளர்கள் இல்லை என்றால் வாயை வாடகைக்கு விடும் சிலரை வைத்தாவது பதில் கூறுங்கள்.

15 ஆண்டாக ஒரு பெண்ணை வைத்து என்னை, என் குடும்பத்தை வன்கொடுமை செய்கிறீர்கள்.

இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

Tags:    

Similar News