தமிழ்நாடு
மண் சரிந்து 7 பேர் பலியான செய்தியறிந்து வேதனை- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
- மண் சரிந்து பலியானோர் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல்.
- நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ரூ.5 லட்சம் நிதியுதவி.
சென்னை:
திருவண்ணாமலையில் மண் சரிந்து 7 பேர் பலியானார்கள் என்ற செய்தியறிந்து வேதனை அடைந்ததாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
மேலும், தொடர் மீட்பு பணி நடைபெற்ற போதும் துருதிஷ்டவசமாக 7 பேரும் மண்ணுக்கடியில் சிக்கி உயிரிழந்த செய்தியால் வேதனை அடைந்தேன். மண் சரிந்து பலியானோர் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல்.
நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ரூ.5 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என்றார்.