தமிழ்நாடு

அமைச்சர் செந்தில் பாலாஜி நண்பர் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை

Published On 2025-03-06 09:18 IST   |   Update On 2025-03-06 09:41:00 IST
  • கரூரில் அமலாக்கத்துறை சோதனை நடைபெற்று வருகிறது.
  • துப்பாக்கி ஏந்திய வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

அமைச்சர் செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர் சங்கர் ஆனந்த் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை நடைபெற்று வருகிறது. கரூரில் உள்ள மூன்று இடங்களில் அமலாக்கத்துறை சோதனை நடைபெற்று வருகிறது. சங்கர் ஆனந்த் அரசு ஒப்பந்ததாரராக உள்ளார் என்று தகவல்.

சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் சோதனை நடைபெற்று வருகிறது. சோதனை நடைபெறும் இடங்களில் துப்பாக்கி ஏந்திய வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். ராயனூர் பகுதியில் உள்ள கொங்குமெஸ் மணி இல்லம், கோதை நகர் பகுதியில் ஒருவர் இல்லம் என இரண்டு இடங்களிலும் அமலாக்கத்துறை சோதனை நடைபெற்று வருகிறது.  

Tags:    

Similar News