தமிழ்நாடு

21-ந்தேதி நடைபெறும் இப்தார் நிகழ்ச்சியில் எடப்பாடி பழனிசாமி பங்கேற்கிறார்

Published On 2025-03-18 10:48 IST   |   Update On 2025-03-18 10:48:00 IST
  • அ.தி.மு.க. சார்பில் ஆண்டுதோறும் இப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது.
  • சென்னை எழும்பூர் புகார் சிராஜ் ஹாலில் இப்தார் விருந்து வழங்க உள்ளார்.

சென்னை:

அ.தி.மு.க. தலைமைக் கழகம் சார்பில் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:-

அ.தி.மு.க. சார்பில் ஆண்டுதோறும் இப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. இதன்படி, பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வருகிற 21-ந்தேதி மாலை 5.30 மணியளவில் சென்னை எழும்பூர் புகார் சிராஜ் ஹாலில் இப்தார் விருந்து வழங்க உள்ளார்.

இந்நிகழ்ச்சியில், இஸ்லாமிய சமுதாய மக்கள், கழகத்தில் மாநில அளவிலும், மாவட்ட அளவிலும் பணியாற்றி வரும் இஸ்லாமிய சகோதர, சகோதரிகள், தலைமைக் கழகச் செயலாளர்கள், மாவட்டக் கழகச் செயலாளர்கள், கழக பாராளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் பாராளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டு சிறப்பிக்க உள்ளார்கள்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News