முதலமைச்சர் பேச்சுக்கு ஆதரவாக தனது சேமிப்பில் இருந்து ரூ.10 ஆயிரம் நிதி அனுப்பிய சிறுமி
- மத்திய அரசு தேசிய கல்விக் கொள்கையை ஆதரித்தால் மட்டுமே தமிழக அரசுக்கு வழங்கக் கூடிய 2 ஆயிரம் கோடி வழங்கப்படும்.
- சிறுமி நிதி வழங்கிய தொடர்பாக வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது.
கடலூர்:
கடலூர் மாவட்டம் வேப்பூரில் பெற்றோர்களை கொண்டாடுவோம் என்ற விழாவில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு மாணவர்களுக்கு சீர்வரிசை கொண்டு வந்து வழங்கி சிறப்புரை ஆற்றினார்.
அப்போது மத்திய அரசு தேசிய கல்விக் கொள்கையை ஆதரித்தால் மட்டுமே தமிழக அரசுக்கு வழங்கக் கூடிய 2 ஆயிரம் கோடி வழங்கப்படும். இதன் மூலம் பல லட்சம் மாணவர்கள் பாதிக்கப்படும் நிலையில், தமிழக அரசு நிதி மூலம் யாருக்கும் பாதிப்பு ஏற்படாமல் பாதுகாக்கப்படும் என தெரிவித்தார்.
இந்த நிலையில் கடலூரை சேர்ந்த எல்.கே.ஜி படித்து வரும் நன்முகை என்ற சிறுமி தான் சேர்த்து வைத்திருந்த பணத்திலிருந்து ரூபாய் 10 ஆயிரத்தை தமிழ்நாடு முதலமைச்சர் சிறப்பு திட்டத்திற்காக நிதி வழங்கி உள்ளார்.
மேலும் சிறுமி நிதி வழங்கிய தொடர்பாக வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது.
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதற்கு ஆதரவாக கடலூரை சேர்ந்த எல்.கே.ஜி படிக்கும் சிறுமி 10 ஆயிரம் ரூபாய் வழங்கிய சம்பவம் நெகழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.