தமிழ்நாடு

தமிழ்நாட்டில் 7 இடங்களில் சதம் அடித்த வெயில்- வரும் நாட்களில் கடுமையாக இருக்கும் என எச்சரிக்கை

Published On 2025-03-07 08:02 IST   |   Update On 2025-03-07 08:02:00 IST
  • பகல் நேரங்களில் வெளியில் தலைகாட்ட முடியாத அளவுக்கு சூரியன் சுட்டெரித்தது.
  • 7 இடங்களில் வெயில் 100 டிகிரியை தாண்டி சதம் அடித்துள்ளது.

சென்னை :

தமிழ்நாட்டில் இந்த ஆண்டு கோடை வெப்பம் முன் கூட்டியே பதிவாகத் தொடங்கிவிட்டது. பல இடங்களில் வெயில் சுட்டெரித்து வருகிறது. நேற்று முன்தினம் 4 இடங்களில் 100 டிகிரியை தாண்டி வெப்பம் பதிவானது. இயல்பைவிட 2 டிகிரி செல்சியஸ் முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் அதிகரித்து காணப்படுகிறது.

அதன் தொடர்ச்சியாக நேற்றும் தமிழகத்தில் வெயிலின் தாக்கம் சற்று அதிகமாகவே இருந்தது. பகல் நேரங்களில் வெளியில் தலைகாட்ட முடியாத அளவுக்கு சூரியன் சுட்டெரித்தது. அந்தவகையில் ஈரோட்டில் 102.56 டிகிரி (39.2 செல்சியஸ்), கரூர் 102.2 டிகிரி (39 செல்சியஸ்), மதுரை 101.48 டிகிரி (38.6 செல்சியஸ்), சேலம் 100.04 டிகிரி (37.8 செல்சியஸ்), திருப்பத்தூர் 100.58 டிகிரி (38.1 செல்சியஸ்), திருச்சி 100.04 டிகிரி (37.8 செல்சியஸ்), வேலூர் 100.58 டிகிரி (38.1 செல்சியஸ்) என மொத்தம் 7 இடங்களில் வெயில் 100 டிகிரியை தாண்டி சதம் அடித்துள்ளது.

இதன் தொடர்ச்சியாக வரக்கூடிய நாட்களில் வெப்பத்தின் தாக்கம் கடுமையாக இருக்கும் என்றும், அடுத்த மாதம் (ஏப்ரல்) 15-ந்தேதி வரை இதே நிலைதான் நீடிக்கும் என்றும் வானிலை ஆய்வாளர்கள் தெரிவித்தனர். 

Tags:    

Similar News