தமிழ்நாடு

மயிலாடுதுறை - செங்கோட்டை எக்ஸ்பிரஸ் ரெயில் சுவாமிமலையில் நின்று செல்லும்- தெற்கு ரெயில்வே அறிவிப்பு

Published On 2025-02-12 07:32 IST   |   Update On 2025-02-12 07:32:00 IST
  • சுவாமிமலை ரெயில் நிலையத்தில் ரெயில்கள் நின்று செல்லும் என தெற்கு ரெயில்வே தெரிவித்துள்ளது.
  • தற்காலிகமாக சுவாமிமலை ரெயில் நிலையத்தில் இன்று (புதன்கிழமை மட்டும்) ஒரு நிமிடம் நின்று செல்லும்.

சென்னை:

தைப்பூசத்தை முன்னிட்டு தஞ்சாவூர் மாவட்டம் சுவாமிமலை ரெயில் நிலையத்தில் ரெயில்கள் நின்று செல்லும் என தெற்கு ரெயில்வே தெரிவித்துள்ளது.

இதுகுறித்து, தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

மயிலாடுதுறையில் இருந்து புறப்பட்டு செங்கோட்டை செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயிலும் (16847), மறுமார்க்கமாக, செங்கோட்டையில் இருந்து மயிலாடுதுறை செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயிலும் (16848), தற்காலிகமாக சுவாமிமலை ரெயில் நிலையத்தில் இன்று (புதன்கிழமை மட்டும்) ஒரு நிமிடம் நின்று செல்லும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News