தமிழ்நாடு

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 425 கனஅடியாக அதிகரிப்பு

Published On 2025-03-16 10:10 IST   |   Update On 2025-03-16 10:10:00 IST
  • தமிழக நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழையின் காரணமாக மேட்டூர் அணைக்கு இன்று நீர்வரத்து அதிகரித்து காணப்பட்டது.
  • அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 1000 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.

சேலம்:

காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகள் மற்றும் தமிழக நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்யும் மழையை பொறுத்து மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்தும், குறைந்தும் வந்து கொண்டு இருக்கிறது. இந்த நிலையில் கடந்த சில நாட்களாக மழை இல்லாததால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து குறைந்து காணப்பட்டது.

அதே நேரம் குடிநீர் தேவைக்காக அணையில் இருந்து தொடர்ந்து தண்ணீர் திறக்கப்பட்டு வருவதால் நீர்மட்டமும் மெதுவாக குறைந்து வருகிறது.

இந்த நிலையில் தமிழக நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழையின் காரணமாக மேட்டூர் அணைக்கு இன்று நீர்வரத்து அதிகரித்து காணப்பட்டது. நேற்று வினாடிக்கு 263 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருந்த நிலையில் அது இன்று வினாடிக்கு 425 கனஅடியாக அதிகரித்து காணப்பட்டது. அணையின் நீர்மட்டம் 108.71 அடியாக இருந்தது. அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 1000 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.

Tags:    

Similar News