தமிழ்நாடு
'தமிழ்த்தாத்தா' உ.வே.சா.வின் செம்பணி தமிழுள்ளமட்டும் நன்றியோடு போற்றப்படும்!- மு.க.ஸ்டாலின்
- தமிழின் தொன்மையையும் பண்டைத் தமிழரின் வாழ்வியலையும் இலக்கியங்கள் வழியே வெளிக்கொணர்ந்தவர் ‘தமிழ்த்தாத்தா’.
- மண்ணிலும் தீயிலும் மறைந்து போக இருந்த தமிழர் வரலாற்றுச் சுவடிகளைப் பதிப்பித்தவர் உ.வே.சா.
சென்னை:
'தமிழ்த்தாத்தா' உ.வே.சா.வின் பிறந்தநாளையொட்டி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவில் கூறியிருப்பதாவது:-
தொல்லியல் சான்றுகளால் இன்று நாம் மெய்ப்பித்து வரும் தமிழின் தொன்மையையும் பண்டைத் தமிழரின் வாழ்வியலையும்-பழந்தமிழ் இலக்கியங்கள் வழியே வெளிக்கொணர்ந்த 'தமிழ்த்தாத்தா' உ.வே.சா.வின் பிறந்தநாள் இன்று! மண்ணிலும் தீயிலும் மறைந்து போக இருந்த தமிழர் வரலாற்றுச் சுவடிகளைப் பதிப்பித்த அவரது செம்பணி தமிழுள்ளமட்டும் நன்றியோடு போற்றப்படும்!
இவ்வாறு அவர் வெளியிட்டுள்ளார்.