தமிழ்நாடு
சிஏஏ, இந்தி திணிப்பு, நிதி நெருக்கடி என மத்திய அரசு தொடர்ந்து வஞ்சிக்கிறது - மு.க.ஸ்டாலின்

சிஏஏ, இந்தி திணிப்பு, நிதி நெருக்கடி என மத்திய அரசு தொடர்ந்து வஞ்சிக்கிறது - மு.க.ஸ்டாலின்

Published On 2025-03-27 11:15 IST   |   Update On 2025-03-27 11:16:00 IST
  • ஒன்றிய பா.ஜ.க. அரசு, குடியுரிமை திருத்தச் சட்டம் மூலம் சிறுபான்மையினர், இலங்கை தமிழர்களை வஞ்சித்தது.
  • இந்தியை திணித்து இந்தி பேசாத மாநிலங்களை வஞ்சிக்கிறது.

தமிழக சட்டசபையில் வக்பு வாரிய சட்டத்திருத்த மசோதாவை மத்திய அரசு முழுமையாக திரும்பப்பெற வலியுறுத்தி தனித்தீர்மானம் கொண்டுவரப்பட்டது. சட்டசபையில் கொண்டுவரப்பட்ட தீர்மானத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்மொழிந்தார்.

இதையடுத்து தீர்மானம் மீது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:

* மத்தியில் ஆளும் பா.ஜ.க. அரசு எதைச்செய்தாலும் குறிப்பிட்ட பிரிவினரை வஞ்சிக்கும் விதமாகவே செயல்படுகிறது.

* ஒன்றிய பா.ஜ.க. அரசு, குடியுரிமை திருத்தச் சட்டம் மூலம் சிறுபான்மையினர், இலங்கை தமிழர்களை வஞ்சித்தது.

* இந்தியை திணித்து இந்தி பேசாத மாநிலங்களை வஞ்சிக்கிறது.

* பா.ஜ.க. ஆளாத மாநிலங்களை நிதி நெருக்கடி மூலம் வஞ்சிக்கிறது.

* அந்த வகையில் தற்போது வக்பு வாரிய சட்டத்திருத்தம் மூலம் சிறுபான்மையின மக்களை வஞ்சிக்கிறது.

* சிறுபான்மையின மக்களுக்கு எதிரான, மத சுதந்திரத்தை நிராகரிக்கிற, அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிரான, வக்பு நோக்கத்திற்கு எதிரான, நீதிமன்றத் தீர்ப்புகளுக்கு முரணான குழப்பமான, தேவையற்ற பல்வேறு பிரிவுகள் வக்பு சட்டத்திருத்தத்தில் உள்ளன. எனவே இதனை நாம் எதிர்க்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News