ரூ.10 ஆயிரம் கோடி கொடுத்தாலும் தேசிய கல்விக்கொள்கைக்கு கையெழுத்திட மாட்டோம்- மு.க.ஸ்டாலின்
- தேசிய கல்விக்கொள்கை என்பது தமிழுக்கும் தமிழர்களுக்கும் வேட்டு வைக்கும் கொள்கை.
- ரூ.2000 கோடிக்காக கையெழுத்திட்டால் 2000 ஆண்டுகளுக்கு பின்னோக்கி சென்று விடுவோம்.
கடலூர்:
கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகே திருப்பெயரில் 'பெற்றோர்களைக் கொண்டாடுவோம்' மாநாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது.
'பெற்றோரை கொண்டாடுவோம்' மாநாட்டில் 'அப்பா' என்ற செயலியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார். பெற்றோர் ஆசிரியர் கழகத்தின் செயலி மற்றும் விழா மலரையும் அவர் வெளியிட்டார். இதைத்தொடர்ந்து உரையாற்றிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியதாவது:
* தமிழ்நாடு கல்வி துறையில் உலகத்தரத்திலான சாதனைகளை செய்து வருகிறது.
* அன்பில் மகேஷ் அமைச்சராக இருக்கும் இக்காலம் தமிழக பள்ளிக்கல்வித்துறையில் பொற்காலம்.
* இல்லம் தேடி கல்வி உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை சிறப்பாக செயல்படுத்தி உள்ளோம்.
* தமிழ்நாட்டில் உள்ள பெற்றோர் ஆசிரியர் கழகங்கள் சிறப்பாக செயல்படுகிறது.
* அரசு பள்ளிகளுக்கு முன்னாள் மாணவர்கள், பெற்றோர்கள், பொதுமக்கள் நன்கொடை, பொருட்கள் வழங்குகிறார்கள்.
* 234 தொகுதிகளிலும் உள்ள பள்ளிக்கூடங்களை ஆய்வு செய்துள்ளார் அன்பில் மகேஷ்.
* தேசிய கல்வி கொள்கையை ஏற்காததால் கல்வி நிதியை தர மறுக்கின்றனர்.
* மாணவர்களின் கல்விக்கான நிதியை தர மத்திய அரசு தர மறுக்கிறது.
* தமிழக மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்க வேண்டும் என்றால் தேசிய கல்விக்கொள்கையை ஏற்காமல் இருப்பதே சரி.
* தமிழக மாணவர்களின் கல்விக்கு மத்திய அரசு வைக்கும் வேட்டு புதிய கல்விக்கொள்கை.
* தேசிய கல்விக்கொள்கை என்பது தமிழுக்கும் தமிழர்களுக்கும் வேட்டு வைக்கும் கொள்கை.
* மாணவர்களை பள்ளிக்கூடத்தில் இருந்து துரத்தும் கொள்கை என்பதால் தான் தேசிய கல்விக்கொள்கையை எதிர்க்கிறோம்.
* ரூ.10,000 கோடி தருகிறேன் என்று கூறினாலும் தேசிய கல்விக்கொள்கைக்கு கையெழுத்திட மாட்டேன்.
* ரூ.2000 கோடி அல்ல ரூ.10,000 கோடியே கொடுத்தாலும் புதிய கல்விக்கொள்கையை ஏற்கமாட்டோம்.
* ரூ.2000 கோடிக்காக கையெழுத்திட்டால் 2000 ஆண்டுகளுக்கு பின்னோக்கி சென்று விடுவோம்.
* குலத்தொழில், சாதி தொழில் என மனுநீதி சொல்கின்ற திட்டத்தை ஏற்க மாட்டோம்.
* குலக்கல்வி முறையை எதிர்க்க வேண்டும் என்பதால் தான் தேசிய கல்விக்கொள்கையை எதிர்க்கிறோம்.
* 6-ம் வகுப்பு முதல் தொழில்கல்வி கற்றுக்கொடுக்கிறோம் என குலக்கல்வியை திணிக்க முயற்சி செய்கிறார்கள்.
* 6-ம் வகுப்பு முதல் பொதுத்தேர்வு வைத்து பள்ளிகளில் மாணவர்களை வடிகட்ட நினைக்கிறார்கள்.
* 3, 5, 8-ம் வகுப்பு முதல் பொதுத்தேர்வை வைத்து மாணவர்கள் கற்பதை தடுக்க பார்க்கிறார்கள்.
* 12-ம் வகுப்பு முடித்து மாணவர்கள் எளிதாக கல்லூரிகளில் சேர முடியாமல் தேசிய கல்விக்கொள்கை தடுக்கும் என்று கூறினார்.