தமிழ்நாடு
பாலிடெக்னிக் கல்லூரி மாணவி பாலியல் வன்கொடுமை- போக்சோவில் வழக்கு பதிவு

பாலிடெக்னிக் கல்லூரி மாணவி பாலியல் வன்கொடுமை- போக்சோவில் வழக்கு பதிவு

Published On 2025-03-26 12:47 IST   |   Update On 2025-03-26 12:47:00 IST
  • மாணவிக்கு போதைப்பொருள் கொடுத்து கூட்டு பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறப்பட்டது.
  • தரமணி காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

சென்னை:

சென்னை தரமணி அரசு மகளிர் பாலிடெக்னிக் கல்லூரி மாணவி பாலியல் வன்கொடுமைக்கு நேர்ந்ததாக நேற்று தகவல் வெளியானது. இன்ஸ்டாகிராம் மூலம் அறிமுகமான வாலிபர் நண்பர்களுடன் சேர்ந்து பாலிடெக்னிக் கல்லூரி மாணவிக்கு போதைப்பொருள் கொடுத்து கூட்டு பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறப்பட்டது.

மேலும் மாணவிக்கு நேர்ந்த கொடுமையை கல்லூரி நிர்வாகம் மூடி மறைக்க முயற்சி செய்ததாக SFI மாணவர் அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர் அமைப்பினரிடம் பேச்சுவார்த்தை நடத்த வந்த போலீசாருக்கும் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டது. இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

இந்த நிலையில், மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டது உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

16 வயது சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் தரமணி காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

Tags:    

Similar News