படிப்பதற்காக சம்மனை கிழிக்கச் சொன்னேன் - சீமான் மனைவி கயல்விழி
- யாரும் வீட்டில் இல்லை என்பது போல சம்மனை ஒட்டி சென்றுள்ளனர்.
- நேர்மையான விசாரணைக்கு தயாராகவே இருக்கிறோம்.
நீலாங்கரை:
சென்னை நீலாங்கரையில் செய்தியாளர்களை சந்தித்த சீமானின் மனைவி கயல்விழி, பாலியல் குற்றச்சாட்டு மூலம் சீமானை அசிங்கப்படுத்த முயற்சிப்பதாக குற்றம்சாட்டினார். மேலும் அவர் கூறியதாவது:-
* சீமான் நேர்மையான தலைவர், மக்களுக்காக போராடும் தலைவர்.
* யாரும் வீட்டில் இல்லை என்பது போல சம்மனை ஒட்டி சென்றுள்ளனர்.
* என்னிடம் பேசிவிட்டு சம்மனை ஒட்டி விட்டு சென்றிருக்கலாம். சம்மனை படிப்பதற்காகவே கிழிக்க சொன்னேன். முடிந்தால் என்னை கைது செய்யுங்கள்.
* சம்மன் கொண்டு வரும் தகவல் ஏற்கனவே தெரிவிக்கப்பட்டது.
* காவல்துறையினரின் செயல்பாட்டை நான் எதிர்பார்க்கவேயில்லை. காவல்துறையினர் திட்டமிட்டே செயல்பட்டனர்.
* நாங்கள் எதற்கும் துணிந்து தான் இருக்கின்றோம். மனதளவில் எங்களை டிஸ்டர்ப் செய்வதே காவல்துறையின் நோக்கம்.
* நேர்மையான விசாரணைக்கு தயாராகவே இருக்கிறோம்.
* கைது நடவடிக்கை தொடர்பாக காவல் ஆய்வாளருக்கு எதிராக மனித உரிமை ஆணையத்தை நாட உள்ளதாக கூறினார்.
இதனிடையே, நேற்று போலீசார் ஒட்டிய சம்மன் கிழிக்கப்பட்டதை அடுத்து சீமான் வீட்டு வாசலில் பலகை வைக்கப்பட்டுள்ளது.