தமிழ்நாடு

திருநெல்வேலி இருட்டுக் கடையில் அல்வா சாப்பிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்

Published On 2025-02-07 01:40 IST   |   Update On 2025-02-07 01:40:00 IST
  • திருநெல்வேலியில் உள்ள பிரபல இருட்டுக் கடைக்கு சென்றார்.
  • அங்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அல்வா சாப்பிட்டார்.

நெல்லை:

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மாவட்டந்தோறும் சென்று கள ஆய்வு மேற்கொண்டு வருகிறார். அந்த வகையில் நேற்று நெல்லை மாவட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சுற்றுப்பயணம் மேற்கொண்டார்.

இந்நிலையில், திருநெல்வேலி டவுண் பகுதியில் நெல்லையப்பர் கோவில் அருகே அமைந்துள்ள பிரபல அல்வா கடையான இருட்டுக் கடைக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் அமைச்சர் துரைமுருகன் ஆகியோர் சென்றனர்.

அவர்களை கடை உரிமையாளர்கள் வரவேற்றனர். தொடர்ந்து அவர்கள் வழங்கிய அல்வாவை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சாப்பிட்டு, ருசியாக இருப்பதாக கூறினார்.

அதன்பின் இருட்டுக் கடை என பெயர் ஏற்பட்டதற்கான காரணம் குறித்து கடை உரிமையாளர்களிடம் கேட்டார்.

முந்தைய காலத்தில் லாந்தர் விளக்கு வெளிச்சத்தில் அல்வா விற்பனை நடைபெற்றது என்றும், அப்போது மக்கள் அந்தக் கடையை 'இருட்டாக இருக்கும் கடை' எனக்கூறி அழைத்ததால் 'இருட்டுக் கடை' என பெயர் ஏற்பட்டதாக அவர்கள் தெரிவித்தனர்.

மேலும், அல்வா தயாரிப்பு மற்றும் விற்பனை குறித்து கேட்டு தெரிந்துகொண்ட முதலமைச்சர் ஸ்டாலின் பணம் கொடுத்து அல்வா வாங்கிச் சென்றார்.

Tags:    

Similar News