தமிழ்நாடு

த.வெ.க. சார்பில் இப்தார் நிகழ்ச்சி - நோன்பு கஞ்சி, பிரியாணி ரெடி

Published On 2025-03-07 13:00 IST   |   Update On 2025-03-07 13:19:00 IST
  • சுமார் 2000 பேருக்கு மட்டன் பிரியாணி, சிக்கன் 65, வெஜ் சமோசா, நோன்பு கஞ்சி தயாரிக்கும் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
  • நிகழ்ச்சி மாலை 6.20 மணிக்கு தொடங்கி ஒரு மணி நேரம் நீடிக்கும் என்று சொல்லப்படுகிறது.

சென்னை ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் தமிழக வெற்றிக்கழகம் சார்பில் இஃப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி இன்று மாலை நடைபெற உள்ளது. இந்நிகழ்ச்சியில் அக்கட்சியின் தலைவர் விஜய் பங்கேற்க உள்ளார். நோன்பு திறப்பு நிகழ்ச்சியில் மாவட்டத்திற்கு 5 இஸ்லாமிய நிர்வாகிகள் உட்பட மொத்தம் 1,500 பேர் பங்கேற்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

மாலை நோன்பு திறந்த பிறகு தமிழக வெற்றிக்கழகம் சார்பில் விருந்து ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்காக சுமார் 2000 பேருக்கு மட்டன் பிரியாணி, சிக்கன் 65, வெஜ் சமோசா, நோன்பு கஞ்சி தயாரிக்கும் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை த.வெ.க. பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த், தேர்தல் பிரச்சார மேலாண்மை பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனன் ஆகியோர் பார்வையிட்டனர்.

இதனிடையே, இந்த நிகழ்ச்சி மாலை 6.20 மணிக்கு தொடங்கி ஒரு மணி நேரம் நீடிக்கும் என்று சொல்லப்படுகிறது. இஸ்லாமியர்களின் வழிமுறைப்படி விஜய்யும் இன்று ஒரு நாள் முழுமையாக நோன்பு இருந்து தொழுகை செய்து இப்தார் விருந்தை எடுத்துக் கொள்ள உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 

Tags:    

Similar News