தமிழ்நாடு

'இந்தி' என்ற வார்த்தையை கூட உச்சரிக்காமல் மொழி திணிப்புக்கு எதிராக பேசிய விஜய்

Published On 2025-02-26 14:50 IST   |   Update On 2025-02-26 15:41:00 IST
  • தமிழ் மண் சுயமரியாதை கொண்ட மண். ஒரு மொழியை திணித்தால் எப்படி?
  • மாநில மொழி மீது வேறு ஒரு மொழியை அரசியல் ரீதியாக திணித்தால் எப்படி Bro?

த.வெ.க. இரண்டாம் ஆண்டு தொடக்க விழா இன்று நடைபெற்றது. இவ்விழாவில் மொழி திணிப்புக்கு எதிராக பேசிய விஜய் ஒரு வார்த்தைக்கு கூட 'இந்தி' என்ற வார்த்தையைக் உச்சரிக்காமல் பேசி முடித்தார்.

த.வெ.க. விழாவில் பேசிய விஜய், "மும்மொழி கொள்கை என்ற புதிய பிரச்சனை கிளப்புகின்றனர். கல்வி நிதியை மாநில அரசுக்கு தரமாட்டோம் என கூறுகின்றனர். எல்கேஜி, யூகேஜி பிள்ளைகள் போல் சண்டை போடுகின்றனர். நிதியை கொடுக்க வேண்டியது மத்திய அரசின் கடமை. நிதிய பெற வேண்டியது தமிழக அரசின் கடமை.

என்ன பிரச்சனை என்று தெரியாமல் சண்டையிடுவது போல் சண்டையிட்டு ஹேஷ்டேக் போட்டு விளையாடுகின்றனர்.இவங்க இரண்டு பேரும் அடித்துக் கொள்வது போன்று அடித்துக்கொள்வார்களாம். இதை நாங்க நம்பணுமாம்

What bro, its very wrong bro என தி.மு.க., பா.ஜ.க. கட்சிகளை கிண்டலடித்த விஜய், தமிழ் மண் சுயமரியாதை கொண்ட மண். ஒரு மொழியை திணித்தால் எப்படி? என கேள்வி எழுப்பினார். மேலும், மாநில தன்னாட்சி உரிமைக்கு எதிராக மொழிக்கொள்கையை கேள்விக்குறியாக்கி வேறு மொழியை வலுக்கட்டாயமாக்க திணிப்பதா?

மாநில மொழி மீது வேறு ஒரு மொழியை அரசியல் ரீதியாக திணித்தால் எப்படி Bro? எந்த மொழி வேண்டுமானாலும் கற்றுக் கொள்ளலாம்; அது தனிப்பட்ட உரிமை. பொய் பிரசாரங்களை புறந்தள்ளிவிட்டு மும்மொழிக்கொள்கையை எதிர்ப்போம்" என்று தெரிவித்தார். 

Tags:    

Similar News