தமிழ்நாடு

தமிழ்நாட்டில் இருமொழிக் கொள்கை தொடர வேண்டும்- அன்புமணி ராமதாஸ்

Published On 2025-02-26 15:56 IST   |   Update On 2025-02-26 15:56:00 IST
  • பாமகவை பொறுத்தவரையில் இது ஒரு தவறான போக்கு.
  • எந்த மாநிலத்திற்கும் மத்திய கொள்கையை திணிக்க கூடாது.

பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.

அப்போது அவர் கூறியதாவது:-

இந்தியாவுடைய கொள்கை நம்முடைய மக்கள் தொகையை குறைக்க வேண்டும் என்ற கொள்கை அதற்கேற்ப நடவடிக்கைகள் தென் மாநிலங்கள் கூடுதல் கவனம் செலுத்தி கடந்த 30, 40 ஆண்டு காலமாக அந்த டோட்டல் ஃபெர்ட்டிலிட்டி ரேட்(டிஎப்ஆர்) இந்தியாவில் தமிழ்நாடு, கேரள மாநிலங்களில் டிஆர்எப் குறைந்துள்ளது. இதுவே நமக்கு பாதகமாக இருக்கக்கூடாது.

இதுதொடர்பாக முதலமைச்சர் வரும் 5ம் தேதி அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்ட இருக்கின்றார். அதில் பாமக சார்பில் கலந்துக் கொண்டு கருத்துகளை தெரிவிக்கும்.

மத்திய அரசு புதிய கல்விக் கொள்கையை தமிழ்நாடு அரசு ஏற்றால்தான் நாங்கள் கல்வி துறையிலேயே தமிழ்நாட்டிற்கு நிதி வழங்குவோம் என்று கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்.

பாமகவை பொறுத்தவரையில் இது ஒரு தவறான போக்கு. எந்த மாநிலத்திற்கும் மத்திய கொள்கையை திணிக்க கூடாது.

குறிப்பாக கல்வி என்பது பொது பட்டியலில் இருக்கிறது. மத்திய அரசு சட்டம் கொண்டு வந்தால் அது ஏற்பதும் ஏற்காததும் மாநில அரசின் உரிமை.

நீங்கள் மும்மொழிக் கொள்கையை ஏற்றுத்தான் ஆக வேண்டும். இல்லை என்றால் நாங்கள் நிதி கொடுக்க மாட்டோம் என்பது தவறான உதாரணம். அதை வலியுறுத்த கூடாது.

தமிழ்நாட்டில் இருமொழிக் கொள்கைகள் கடந்த 60 ஆண்டு காலமாக கடைப்பிடித்து வருகிறார்கள். இது தொடர வேண்டும்.

எந்த மொழியையும் திணிக்கக்கூடாது. எல்லாம் மொழியையும் கற்றுக்கொள்ளலாம். ஆனால், இந்த மொழியை கற்று தான் ஆக வேண்டும் என்று சொல்வது தவறு.

தமிழ்நாட்டிற்கென கொள்கை இருக்கிறது. அந்த கொள்கையை மாற்ற சொல்வது மத்திய அரசுக்கு உரிமை கிடையாது.

இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

Tags:    

Similar News