உலகம்

பொலிவியாவில் பஸ்கள் நேருக்கு நேர் மோதல்- 37 பேர் பலி

Published On 2025-03-02 12:55 IST   |   Update On 2025-03-02 12:55:00 IST
  • விபத்தில் 2 பஸ்களும் கவிழ்ந்து நொறுங்கியது.
  • சம்பவ இடத்துக்கு மீட்புப்படையினர் விரைந்து சென்று மீட்புப்பணியில் ஈடுபட்டனர்.

பொலிவியா நாட்டின் மேற்கு போடோசி பிராந்தியத்தில் உள்ள உயுனி-கோல்சானி நகரங்களுக்கு இடையே நெடுஞ்சாலையில் பஸ் ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது கட்டுப்பாட்டை இழந்த பஸ் தாறுமாறாக ஓடி எதிர் திசையில் பாய்ந்தது. இதில் மற்றொரு பஸ் மீது நேருக்கு நேர் மோதியது.

இந்த விபத்தில் 2 பஸ்களும் கவிழ்ந்து நொறுங்கியது. பஸ்சில் இருந்த பயணிகள் படுகாயம் அடைந்தனர். சம்பவ இடத்துக்கு மீட்புப்படையினர் விரைந்து சென்று மீட்புப்பணியில் ஈடுபட்டனர்.

விபத்தில் 37 பேர் உயிரிழந்தனர். 39 பேர் காயம் அடைந்தனர். அவர்களை மீட்டு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

Tags:    

Similar News