உலகம்

சட்டவிரோத குடியேற்றத்தை தடுக்க மெக்சிகோ எல்லைக்கு பென்டகன் அனுப்பிய 3,000 வீரர்கள்

Published On 2025-03-02 01:54 IST   |   Update On 2025-03-02 01:56:00 IST
  • சட்டவிரோத குடியேற்றத்தை தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார் அதிபர் டிரம்ப்
  • அமெரிக்கா-மெக்சிகோ எல்லையில் பாதுகாப்பு பலப்படுத்தப்படும் என்றார்.

வாஷிங்டன்:

அமெரிக்க அதிபராக பதவியேற்ற டொனால்டு டிரம்ப் சட்டவிரோத குடியேற்றத்தை தடுக்க உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும் என தெரிவித்தார்.

இதற்கிடையே, அமெரிக்கா-மெக்சிகோ எல்லை பாதுகாப்புக்காக 10,000 ராணுவ வீரர்கள் அனுப்பப்பட்டனர். ஏற்கனவே பணியில் உள்ள வீரர்களுடன் இணைந்து எல்லையில் ரோந்து உள்ளிட்ட பணிகளில் ஈடுபடுவார்கள் என பென்டகன் தெரிவித்துள்ளது.

இந்நிலையில், அதிபர் டொனால்டு டிரம்ப் சட்டவிரோத குடியேற்றத்தைத் தடுக்கவும், தனது பிரச்சாரத்தின் முக்கிய வாக்குறுதியை நிறைவேற்றவும் முயல்வதால் அமெரிக்க-மெக்சிகோ எல்லைக்கு சுமார் 3,000 ராணுவ வீரர்களை அனுப்ப உள்ளதாக பென்டகன்

தெரிவித்துள்ளது.

Tags:    

Similar News