மொரிஷியஸ் அதிபர் மனைவிக்கு பனாரஸ் பட்டுப்புடவையை பரிசளித்த பிரதமர் மோடி
- அரசுமுறை பயணமாக தனி விமானம் மூலம் மொரிஷியஸ் புறப்பட்டுச் சென்றார்.
- பெண்கள், குழந்தைகள் கையில் இந்திய கொடியுடன் திரண்டு வந்து அவருக்கு வரவேற்பு கொடுத்தனர்.
போர்ட் லூயிஸ்:
மொரிஷியஸ் நாட்டின் 57-வது தேசிய தினவிழா நாளை (மார்ச் 12ம் தேதி ) நடைபெற உள்ளது. இதில் சிறப்பு விருந்தினராக பங்கேற்க அந்நாட்டு தலைநகர் போர்ட் லூயிஸ் விமான நிலையம் சென்றடைந்த பிரதமர் மோடியை தூதரக அதிகாரிகள் மற்றும் இந்திய வம்சாவளியை சேர்ந்தவர்கள் உற்சாகமாக வரவேற்றனர்.
பெண்கள் மற்றும் குழந்தைகள் கையில் இந்திய கொடியுடன் திரண்டு வந்து அவருக்கு வரவேற்பு கொடுத்தனர்.
மொரிஷியஸ் பிரதமர் நவீன் ராம்கூலம் விடுத்த அழைப்பை ஏற்று பிரதமர் மோடி இரண்டு நாட்கள் அரசுமுறை பயணமாக தனி விமானம் மூலம் மொரிஷியஸ் சென்றுள்ளார்.
மொரிஷியஸ் நாட்டில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் பிரதமர் மோடி கலந்து கொள்கிறார்.
இந்நிலையில், இன்று மாலை மொரிஷியஸ் அதிபர் தரம் கோகூலின் மனைவிக்கு சடேலி பெட்டியில் பனாரசி பட்டுப் புடவையை பிரதமர் நரேந்திர மோடி பரிசாக அளித்தார்.
வாரணாசியில் இருந்து வந்த பனாரசி புடவை, ஆடம்பர மற்றும் கலாசார பாரம்பரியத்தின் அடையாளமாகும். அதன் நேர்த்தியான பட்டு ஆடம்பரமான ஜரிகை வேலைப்பாடுகளுக்கு பெயர் பெற்றது.
இந்த நேர்த்தியான புடவை வெள்ளி ஜரிகை மையக்கருக்கள், ஒரு பரந்த ஜரிகை பார்டர் மற்றும் ஒரு விரிவான பல்லு ஆகியவற்றால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. இது திருமணங்கள், திருவிழாக்கள் மற்றும் பிரமாண்டமான கொண்டாட்டங்களுக்கு ஏற்றதாக அமைகிறது.
இந்தப் புடவைக்கு துணையாக குஜராத்தில் இருந்து வந்த சடேலி பெட்டி உள்ளது. இது விலைமதிப்பற்ற புடவைகள், நகைகள் அல்லது நினைவுப் பொருட்களை சேமிக்க வடிவமைக்கப்பட்ட சிக்கலான உள் வேலைப்பாடுகளைக் கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது.