search icon
என் மலர்tooltip icon
    TNLGanesh

    About author
    அச்சு ஊடக துறையில் 12 வதுஆண்டு பயணம். மலை பயணமும்,மழையில் பயணமும் பிடித்தமான ஒன்று. படைப்பியலில் அதிக ஆர்வம் . இயற்கையின் அழகை தனிமையில் ரசிக்க பிடிக்கும். நகர்வுகளை கண்டறிய பிடிக்கும். நான் தமிழின் மூத்த மகன் என்பதில் பெருமை.
      • யு.கே.ஜி. மாணவர் முகுந்தன் சுப பைரவ் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.
      • விழாவில் மாணவ, மாணவிகள் ஆசிரியர்களுக்கு குரு சமர்ப்பணம் செய்தனர்.

      தென்காசி:

      இலஞ்சி பாரத் மாண்டிசோரி பள்ளியில் ஆசிரியர் தினவிழாவினை முன்னிட்டு குரு சமர்ப்பணம் நிகழ்ச்சி நடைபெற்றது. கல்வி ஆலோசகர் உஷா ரமேஷ் தலைமை தாங்கினார். பள்ளி முதல்வர் பாலசுந்தர் முன்னிலை வகித்தார். முன்னதாக மாணவி அனுபாமா, ஹரிணி இறைவணக்கப் பாடல் பாடினர். ராபியாஸனா நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். ஐஸ்வர்யா வரவேற்று பேசினார். இதில் யு.கே.ஜி. மாணவர் முகுந்தன் சுப பைரவ் டாக்டர் ராதாகிருஷ்ணன் போல் வேடமணிந்து சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.

      மழலையர் பிரிவு முதல் 5-ம் வகுப்பு மாணவ, மாணவிகள் டாக்டர் ராதாகிருஷ்ணன் போல வேடமணிந்து வந்திருந்தனர். மேலும் 6 முதல் 9-ம் வகுப்பு மாணவர்கள் மகாபாரதம், ராமாயண கதாபாத்திரங்கள் வேடமணிந்து யாகசாலை அமைத்து இறைவழிபாடு நடத்தினர். தொடர்ந்து 10, 11 மற்றும் பிளஸ்-2 வகுப்பு மாணவ, மாணவிகள் ஆசிரியர்களுக்கு குரு சமர்ப்பணம் செய்தனர். முடிவில் மாணவி ரட்சனா நன்றி கூறினார். நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டினை பாரத் கல்விக் குழுமத்தின் தலைவர் மோகனகிருஷ்ணன், செயலாளர் காந்திமதி மோகன கிருஷ்ணன், ஆலோசகர் உஷா ரமேஷ், இயக்குனர் ராதாபிரியா மற்றும் பள்ளி முதல்வர் பாலசுந்தர் ஆகியோர் செய்திருந்தனர்.

      • கிருஷ்ணர் மண் உண்ட லீலையை மாணவ-மாணவிகள் தத்ரூபமாக நடித்து காட்டினர்.
      • மழலையர் பிரிவு மாணவ- மாணவிகள் கிருஷ்ணர், ராதை வேடமணிந்து உலா வந்தனர்.

      தென்காசி:

      இலஞ்சி பாரத் மாண்டிசோரி பள்ளியில் கிருஷ்ண ஜெயந்தி விழா நடைபெற்றது. மாணவி ஸ்வேதா நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கினார். கல்வி ஆலோசகர் உஷாரமேஷ் தலைமை தாங்கினார். பள்ளி முதல்வர் பாலசுந்தர் முன்னிலை வகித்தார். மாணவி ஐஸ்வர்யா வரவேற்று பேசினார். மாணவி காளிபிரியா பரதநாட்டிய நடனமாடினார்.

      நிகழ்ச்சியில் கிருஷ்ண லீலைகளில் ஒன்றான கிருஷ்ணர் மண் உண்ட லீலையை மாணவ-மாணவிகள் தத்ரூபமாக நடித்து காட்டினர். இதில் மழலையர் பிரிவு மாணவர் ரித்விக் விஸ்வா கிருஷ்ணராகவும், மாணவி குங்கும காயத்ரி யசோதாவாகவும் வேடமணிந்து தங்களின் திறமைகளை வெளிப்படுத்தினர். மாணவி மிருதுளா ஜெனனி குழுவினர் முகுந்தா முகுந்தா கிருஷ்ணா என்ற பாடலுக்கு நடனமாடினர். மழலையர் பிரிவு வகுப்பு மாணவ- மாணவிகள் கிருஷ்ணர் மற்றும் ராதை போல் வேடமணிந்து உலா வந்தனர்.

      நிகழ்ச்சியில் ஆசிரியைகள் மஞ்சுளா, பார்வதி ஆகியோர் மாகோலமிட்டு பள்ளியை அலங்கரித்தனர். மாணவி ரட்சனா நன்றிகூறினார். நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டினை பாரத் கல்விக் குழுமத்தின் தலைவர் மோகனகிருஷ்ணன், செயலாளர் காந்திமதி மோகன கிருஷ்ணன், ஆலோசகர் உஷாரமேஷ், இயக்குனர் ராதாபிரியா மற்றும் பள்ளி முதல்வர் பாலசுந்தர் ஆகியோர் செய்திருந்தனர்.

      • ரமேஷ் பால்துரைக்கு சொந்தமான நிலம் ஆலங்குளம்-நெல்லை சாலையில் உள்ளது.
      • சாலை அமைக்க வந்த ஊழியர்களை ரமேஷ் பால்துரை தடுத்து நிறுத்தினார்.

      ஆலங்குளம்:

      ஆலங்குளம் அருகே உள்ள கரும்புளியூத்து கிராமத்தை சேர்ந்தவர் ரமேஷ் பால்துரை(வயது 41). இவர் வக்கீல் தொழில் செய்து வருகிறார். இவருக்கு சொந்தமான நிலம் ஆலங்குளம்-நெல்லை சாலையில் உள்ளது.

      இதில் முகப்பு பகுதியில் உள்ள குறைந்த அளவு நிலத்தை நான்கு வழச்சாலை விரிவாக்க பணிக்கு கையகப்படுத்தப்பட்டதாகவும், இதுவரை நிலத்திற்கு உரிய இழப்பீடு வழங்காமல் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் காலம் தாழ்த்தி வருவதாகவும் கூறப்படுகிறது.

      இந்நிலையில் அந்த இடத்தில் சாலை அமைக்க வந்த ஊழியர்களை ரமேஷ் பால்துரை தடுத்து நிறுத்தினார். தொடர்ந்து அவர் தனது குடும்பத்தினருடன் கருப்புக் கொடியுடன் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டார்.

      உடனே ஆலங்குளம் தாசில்தார் கிருஷ்ணவேல், சப்-இன்ஸ்பெக்டர் சின்னதுரை மற்றும் நான்கு வழிச்சாலை திட்ட அலுவலர்கள் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தி, உரிய ஆவணங்கள் சமர்பிக்குமாறும், மறுநாளே இழப்பீடு வழங்கப்படும் எனவும் தெரிவித்தனர். இதையடுத்து அவர் தர்ணாவைக் கைவிட்டார்.

      • அண்ணாமலையின் 2-ம் கட்ட பாதயாத்திரை பொட்டல்புதூரில் தொடங்கியது.
      • விவசாயிகள் சார்பில் அண்ணாமலைக்கு ஏர் கலப்பை பரிசாக வழங்கப்பட்டது.

      தென்காசி:

      தமிழக பாரதீய ஜனதா மாநிலத் தலைவர் அண்ணாமலையின் என் மண் என் மக்கள் 2-ம் கட்ட பாதயாத்திரை நேற்று மாலையில் தென்காசி மாவட்டத்தில் உள்ள பொட்டல்புதூரில் தொடங்கியது. தொடர்ந்து திருமலையப்பபுரம், ரவனசமுத்திரம் விலக்கு, முதலியார்பட்டி வழியாக அண்ணாமலை நடை பயணம் மேற்கொண்டார்.

      உற்சாக வரவேற்பு

      சாலையில் வாகனங்கள் மற்றும் அரசு பஸ்களில் சென்ற பயணிகளிடம் கையசைத்தவாறு சுமார் 4 கிலோமீட்டர் நடை பயணம் செய்த அவருக்கு வழி நெடுகிலும் நின்ற பொதுமக்கள் மற்றும் பா.ஜ.க. தொண்டர்கள் மாலைகள் மற்றும் சால்வை அணிவித்து உற்சாகமாக வரவேற்றனர்.

      கடையம் பகுதிக்கு வந்தவுடன் அண்ணாமலைக்கு விவசாயிகள் சார்பில் ஏர் கலப்பை பரிசாக வழங்கப்பட்டது. பின்னர் கடையம் மெயின் பஜார் வழியாக லாலா கடை மூக்கு பகுதிக்கு சென்ற அண்ணாமலை அந்தப் பகுதியில் பா.ஜ.க. கொடியை ஏற்றி வைத்தார்.

      அதனை முடித்துக் கொண்டு இரவு தென் காசியில் உள்ள கீழப்புலியூர் ெசன்ற அண்ணாமலை கீழப்புலியூர் வாய்க்கால் பாலம் நீதிமன்ற கட்டிடம் பகுதி பழைய பஸ் நிலையம் மேம்பாலம் வழியாக தென்காசி புதிய பஸ் நிலையம் வரை சுமார் 6 கிலோமீட்டர் பாதயாத்திரை மேற்கொண்டார்.

      நீதிமன்ற கட்டிடம் அருகில் வந்த போது பெண்கள் சார்பில் முளைப்பாரி எடுத்து வரவேற்பு அளிக்க ப்பட்டது. இரவு 10 மணிக்கு மேல் பேசுவதற்கு அனுமதி இல்லை என்பதால் கூட்டத்தில் கலந்து கொண்ட வர்களிடம் தாமதம் ஆனதற்கு உங்களிடம் மன்னிப்பு கேட்பதாக அண்ணாமலை கூறினார்.

      மேலும் 2024 பாராளுமன்ற தேர்தலில் மீண்டும் பா.ஜ.க. உறுதியாக வெற்றி பெறும். இந்த மாதம் முடிவதற்குள் பயணத்தில் ஒரு நாள் விடுப்பு எடுத்து தென்காசியில் பொதுக் கூட்டம் நடத்தி அதில் நான் உங்களிடம் பேசுவேன் என்றும் தெரிவித்தார்.

      கலந்து கொண்டவர்கள்

      நிகழ்ச்சியில் நயினார் நாகேந்திரன் எம்.எல்.ஏ., பா.ஜ.க. மாவட்ட தலைவர் ராஜேஷ் ராஜா, தென்காசி பாராளுமன்ற தொகுதி பொறுப்பாளரும், வெளிநாடு மற்றும் அண்டை மாநில தமிழ் வளர்ச்சி பிரிவின் மாநில துணைத்தலைவருமான விஸ்வை ஆனந்தன், பா.ஜ.க. மாநில முன்னாள் பிரசார பிரிவு அணி துணைத் தலைவரும், அகில பாரத அய்யா வழி மக்கள் பேரியக்கத்தை சேர்ந்தவருமான சுவாமிதோப்பு ஸ்ரீவைகுண்ட வரகவி ஸ்ரீ குரு சிவச்சந்திரன், மாவட்ட பொதுச்செயலாளர்கள் பால குருநாதன், அருள்செல்வன், ராமநாதன், பொருளாளர் பாலகிருஷ்ணன், மாவட்ட பார்வையாளர் மகாராஜன், மாநில பொதுச்செயலாளர், மத்திய அரசு நலத்திட்ட பிரிவு மாநில துணைச் செயலாளர் மருதுபாண்டியன், பொன் பாலகணபதி, மாவட்ட துணைத் தலைவர் முத்துக்குமார், ஊடகப்பிரிவு மாவட்டத் தலைவர் செந்தூர்பாண்டியன், தமிழக மக்கள் முன்னேற்றக் கழக நிறுவனர் ஜான் பாண்டியன், புதிய தமிழகம் கட்சியின் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

      • அரியூர் கிராம ஊராட்சியில் புதிய ரேஷன் கடை அமைக்க பூமி பூஜை நடைபெற்றது.
      • நிகழ்ச்சியில் அரியூர் ஊராட்சி தலைவர் கலா ஜெயக்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

      சிவகிரி:

      வாசுதேவநல்லூர் ஊராட்சி ஒன்றியம் அரியூர் கிராம ஊராட்சியில், அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் ரூ.9.77 லட்சம் மதிப்பீட்டில் புதிய ரேஷன் கடை அமைக்கும் பணிக்கு பூமி பூஜை நடைபெற்றது.

      வாசுதேவநல்லூர் யூனியன் சேர்மனும், வடக்கு ஒன்றிய தி.மு.க. செயலாளருமான பொன் முத்தையா பாண்டியன் தலைமை தாங்கி பூமி பூஜை செய்து பணிகளை தொடங்கி வைத்தார்.

      நிகழ்ச்சியில் அரியூர் ஊராட்சி மன்ற தலைவர் கலா ஜெயக்குமார், துணைத்தலைவர் முருகையாபாண்டியன், ஒன்றிய கவுன்சிலர்கள் லில்லி புஷ்பம், விமலா மகேந்திரன், முனியராஜ், உதவி பொறியாளர் அருள் நாராயணன், கிளை செயலாளர் முருகையா, உள்ளார் மணிகண்டன், விக்கி மற்றும் ஊர் பொதுமக்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

      • வாசுதேவநல்லூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் சட்ட விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
      • சட்டக்கல்லூரி மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு இணைய தள குற்றங்கள் உள்ளிட்டவை குறித்து எடுத்துக் கூறினர்.

      சிவகிரி:

      வாசுதேவநல்லூர் எஸ்.தங்கப்பழம் சட்டக்கல்லூரி சார்பில் சட்ட விழிப்புணர்வு நிகழ்ச்சி வாசுதேவநல்லூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது.

      தங்கப்பழம் கல்விக் குழுமங்களின் செயலாளர் எஸ்.டி.முருகேசன் ஆலோசனையின் பேரிலும் சட்டக்கல்லூரி முதல்வர் ராஜலட்சுமி மற்றும் துணை முதல்வர் காளிச்செல்வி அறிவுறுத்தலின் பேரிலும் நடைபெற்ற இந்த சட்ட விழிப்புணர்வு நிகழ்ச்சியில் உதவிப் பேராசிரியர் தலைமையில் சட்டக் கல்லூரி மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு மோட்டார் வாகனச் சட்டம், நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம், கல்வி பெறும் உரிமை, பெண்களுக்கு எதிரான கொடுமைகள் மற்றும் இணைய தள குற்றங்கள் குறித்து, வாசுதேவநல்லூர் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவ மாணவிகளிடம் எடுத்துக் கூறினர்.

      முன்னதாக வாசுதேவநல்லூர் அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் ஜெயசீலன் வரவேற்று பேசினார். முடிவில் தங்கப்பழம் சட்டக்கல்லூரி நிர்வாகம் சார்பில் உதவி பேராசிரியர் வெங்கடேஷ் நன்றி கூறினார்.

      • பாதயாத்திரையின் போது வழிநெடுகிலும் பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
      • மின்சாரம் துண்டிக்கப்பட்டதனால் அப்பகுதி முழுவதும் இருளில் மூழ்கியது.

      தென்காசி:

      தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலையின் 2-ம் கட்ட பாதயாத்திரை தென்காசி மாவட்டத்தில் நேற்று தொடங்கிய நிலையில் கடையம் பகுதியில் பாதயாத்திரை முடித்துவிட்டு இரவில் தென்காசி கீழப்புலியூரில் இருந்து தென்காசி புதிய பஸ் நிலையம் வரை நடைபெற்ற பாதயாத்திரையின் போது வழிநெடுகிலும் பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

      தென்காசி ரெயில்வே மேம்பாலத்தில் பாத யாத்திரை சென்று கொண்டிருந்த போது திடீரென மின்சாரம் துண்டி க்கப்பட்டது. இதனால் அப்பகுதி முழுவதும் இருளில் மூழ்கியது. இருப்பினும் அதனை பொருட்படுத்தாமல் யாத்திரையில் கலந்து கொண்டவர்கள் அனைவரும் தங்களின் செல்போனில் உள்ள டார்ச் லைட்டை ஆன் செய்து ஒளிர விட்டவாறு உற்சாகமாக கையசைத்து பாதையாத்திரை மேற்கொண்டனர். இது அப்பகுதியில் இருந்த பொதுமக்களிடையே கவனத்தை ஈர்த்தது.

      • சாம்பவர் வடகரை உள்ளிட்ட பகுதிகளில் விவசாயிகள் அதிக அளவில் சூரியகாந்தி மலர்களை பயிரிட்டுள்ளனர்.
      • கேரளா சுற்றுலா பயணிகளின் வருகை எதிரொலி யாக ஆங்காங்கே உள்ளூர் பொதுமக்கள் சிறிய, சிறிய கடைகளையும் அமைத்துள்ளனர்.

      தென்காசி:

      தென்காசி மாவட்டத்தில் சுற்றுலா பயணிகளை அதிகம் கவர்ந்து வருவது குற்றால அருவிகள் என்பதை கடந்து விவசாயிகள் அதிகம் பயிரிட்டுள்ள சூரியகாந்தி மலர்களும் சுண்டி இழுத்து வருவது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தி உள்ளது.

      தென்காசி மாவட்டத்தில் ஆய்க்குடியில் இருந்து சுரண்டை செல்லும் பகுதி களான சுந்தர பாண்டியபுரம், சாம்பவர் வடகரை உள்ளிட்ட பகுதி களில் இருபுறமும் இருக்கும் வயல்வெளிகளில் விவசாயி கள் அதிக அளவில் சூரியகாந்தி மலர்களை பயிரிட்டுள்ளனர்.

      இதனை அவ்வழியே செல்லும் வாகன ஓட்டிகள் கண்டதும் வாகனங்களை சாலை ஓரம் நிறுத்திவிட்டு தன்னை அறியாமலேயே செல்பி எடுத்துக் கொள்ளும் ஆர்வத்தை தூண்டி வருகிறது.

      குறிப்பாக உள்ளூர் பகுதியில் மக்கள் ஆர்வம் காட்டி வரும் நிலையில் அண்டை மாநிலமான கேரளாவில் உள்ள சுற்றுலா பயணிகள் சூரியகாந்தி மலர்கள் பயிரிட்டுள்ளதை அறிந்து கார்கள் மூலம் குடும்பம், குடும்பமாக படை யெடுத்து வந்து புகைப் படங்கள் எடுத்துச் செல்கின்றனர்.

      அது மட்டுமின்றி கேரளாவில் திருமணமான தம்பதிகள் 'போட்டோ சூட்' எடுப்பதற்கும் சூரியகாந்தி மலர்கள் பயிரிட்டுள்ள விவசாய நிலங்களில் முகாமிட்டுள்ளனர்.

      விவசாயிகளும் சுற்றுலா பயணிகள் புகைப்படங்கள் எடுத்துக்கொள்ள எவ்வித தடையும் விதிப்பதில்லை.

      கேரளா சுற்றுலா பயணி களின் வருகை எதிரொலி யாக ஆங்காங்கே உள்ளூர் பொதுமக்கள் சிறிய, சிறிய கடைகளையும் அமைத்துள்ளனர். அவர்களிடம் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ள பழங்கள் மற்றும் உணவுப் பொருட்களை ஆர்வமுடன் சுற்றுலா பயணிகள் வாங்கி சுவைத்து செல்கின்றனர்.

      விபத்து ஏற்படும் அபாயம்

      சூரியகாந்தி மலர்களை பார்க்க செல்லும் சுற்றுலா பயணிகள் ஆய்க்குடி- சுரண்டை செல்லும் பிரதான சாலை ஓரங்களில் வாகனங்களை வரிசையாக நிறுத்துகின்றனர்.

      இதனால் அந்தச் சாலையில் பயணம் மேற்கொள்ளும் மற்ற வாகனங்கள் எதிரெதிரே வரும்பொழுது சிறிய, சிறிய விபத்துக்கள் ஏற்படுகின்றன. எனவே வாகனங்களை தனியாக நிறுத்துவதற்கு மாவட்ட நிர்வாகம் தனி ஏற்பாடுகளை செய்ய வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.


      சூரியகாந்தி மலர்களை பார்க்க படையெடுக்கும் சுற்றுலா பயணிகள்.

      சூரியகாந்தி மலர்களை பார்க்க படையெடுக்கும் சுற்றுலா பயணிகள்.


       


      • விநாயகருக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு விஷேச தீபாராதனை நடைபெற்றது.
      • விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு விநாயகரை தரிசனம் செய்தனர்.

      செங்கோட்டை:

      சங்கடஹர சதுர்த்தியை முன்னிட்டு செங்கோட்டை செக்கடி விநாயகர் கோவிலில் மாலையில் சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடைபெற்றது. மாலை விநாயகருக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு விஷேச தீபாராதனை நடைபெற்றது. தொடர்ந்து தேங்காய் மாலையால் விநாயகருக்கு சிறப்பு அலங்காரம் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு விநாயகரை தரிசனம் செய்து அருள்பிரசாதம் பெற்று சென்றனர். விழா ஏற்பாடுகளை கணேச பட்டர் செய்திருந்தார். இதேபோல் செங்கோட்டை சுற்றுப்பகுதிகளான வல்லம், இலஞ்சி, பிரானூர், புளியரை, புதூர், கேசவபுரம், கட்டளை குடியிருப்பு உள்ளிட்ட கிராமங்களில் உள்ள சிவபிள்ளையார், செல்வவிநாயகர் கோவில், சந்திவிநாயகர், முக்தி விநாயகர், வீரகேரள விநாயகர் உள்ளிட்ட விநாயகர் கோவில்களிலும் சங்கடஹர சதுர்த்தியை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடந்தது.

      • நிகழ்ச்சியில் 15 பார்வையற்றவர்கள், 25 மாற்றுத்திறனாளிகள் என மொத்தம் 45 பேர் கலந்து கொண்டனர்.
      • பேரணியை கே.ஆர்.பி.இளங்கோ கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

      தென்காசி:

      தமிழ்நாடு முழுவதும் 324கே மாவட்டத்தின் சார்பாக கண்தான விழிப்புணர்வு பிரசார பேரணி நடைபெற்றது. பாவூர்சத்திரத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு பாவூர்சத்திரம் சென்ட்ரல் அரிமா சங்கத் தலைவர் லட்சுமி சேகர் தலைமை தாங்கினார். சங்க செயலாளர் சசி ஞானசேகரன், சங்க முன்னாள் செயலாளர்கள் ரஜினி, சுரேஷ்,ஆனந்த், சங்க முன்னாள் பொருளாளர் பரமசிவன் ஜெயன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கண்தான விழிப்புணர்வு குழு தலைவர் முனைவர் அருணாச்சலம் வரவேற்றார். இதில் 15 பார்வையற்றவர்கள், 25 மாற்றுத்திறனாளிகள் என மொத்தம் 45 பேர் கலந்து கொண்டனர்.

      பேரணியை பாவூர்சத்திரம் கண் தான விழிப்புணர் குழு நிறுவனர், வட்டாரத் தலைவர் கே. ஆர். பி. இளங்கோ கொடியசைத்து தொடங்கி வைத்தார். பேரணி ஆய்க்குடி அமர்சேவா சங்கத்தில் அங்குள்ள நிறுவனர்களை சந்தித்த பின்னர் தமிழ்நாடு முழுவதும் புறப்பட்டு சென்றார்கள். பேரணியின் ஏற்பாடுகளை 324 கே கண்தான மாவட்ட தலைவர் சோபா ஸ்ரீகாந்த், கண்தான பேரணி மாவட்ட தலைவர் சுரேஷ் ஆகியோர் இணைந்து செய்திருந்தனர். முடிவில் பாவூர்சத்திரம் கண்தான விழிப்புணர்வு குழு துணை தலைவர் முருகன் நன்றி கூறினார்

      • அருவிகளில் குளிக்கும்போது பெண்கள் அணிந்து வரும் தங்க நகைகளை திருடிச்செல்லும் சம்பவங்கள் அடிக்கடி நடந்து வருகிறது.
      • ராஜகோபால் என்பவர் அருவியில் குளிக்கும் பெண்களிடம் நகையை திருடியது தெரிய வந்தது.

      தென்காசி:

      தென்காசி மாவட்டத்தில் முக்கிய சுற்றுலா தலமாக விளங்கிவரும் குற்றாலம் அருவிகளில் சீசன் காலத்தில் தமிழகம் மட்டுமல்லாது வெளி மாநிலங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் குளிக்க வருவார்கள்.

      நகை திருட்டு

      அவ்வாறு அருவிகளில் குளிக்கும்போது, கூட்ட நெரிசலை பயன்படுத்தி பெண்கள் பகுதியில் பெண்கள் அணிந்து வரும் தங்க நகைகளை திருடிச்செல்லும் சம்பவங்கள் அடிக்கடி நடந்து வருகிறது.

      கடந்த மாதம் 15-ந்தேதி அருவியில் குளித்த பல பெண்களின் தங்க நகைகள் திருட்டு போனது. இதுகுறித்து குற்றாலம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்திருந்த நிலையில் போலீசார் அங்குள்ள சி.சி.டி.வி. காமிரா உள்ளிட்டவற்றை ஆய்வு செய்தனர்.

      கைது

      தொடர்ந்து தனிப்படை அமைத்து திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட நபர்களை தீவிரமாக தேடி வந்த நிலையில் திருப்பத்தூர் மாவட்டத்தை சேர்ந்த ராஜகோபால்(வயது 45) என்பவர் அருவியில் குளிக்கும் பெண்களிடம் நகையை திருடியது தெரிய வந்தது.

      இதையடுத்து அவரை கைது செய்த குற்றாலம் போலீசார் அவரிடமிருந்து 64 பவுன் தங்க நகைகளை பறிமுதல் செய்தனர். குற்றவாளியை பிடிப்பதற்கு சிறப்பாக செயல்பட்ட இன்ஸ்பெக்டர் ராஜகுமாரி, சுந்தரி, சப்-இன்ஸ்பெக்டர் விஜய், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் காளிமுத்து ஆகியோரை தென்காசி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சாம்சன் மற்றும் துணை போலீஸ் சூப்பிரண்டு நாகசங்கர் ஆகியோர் பாராட்டினர்.

      • கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு சிறப்பு தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம் நடந்தது.
      • முகாமில் மாற்றுத்திறனாளிகளும் கலந்து கொண்டு பணி நியமன ஆணைகளை பெற்றனர்.

      சங்கரன்கோவில்:

      முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு தென்காசி மாவட்ட நிர்வாகம், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம், தமிழ்நாடு மாநில ஊரக நகர்ப்புற வாழ்வாதார இயக்கம் மற்றும் மாற்றுத் திறனாளிகள் நலத்துறை யினர் ஆகியோர் இணைந்து சங்கரன்கோவில் ராஜபாளையம் சாலையில் உள்ள தனியார் பள்ளியில் சிறப்பு தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம் நடத்தியது.

      முகாமிற்கு தென்காசி மாவட்ட கலெக்டர் ரவிச்சந்திரன் தலைமை தாங்கினார். தனுஷ்குமார் எம்.பி., தென்காசி வடக்கு மாவட்ட தி.மு.க. செய லாளர் ராஜா எம்.எல்.ஏ., டாக்டர் சதன் திருமலைக்கு மார் எம்.எல்.ஏ., மாவட்ட வருவாய் அலுவலர் பத்மா வதி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

      வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை ஆணையர் வீரராகவராவ் திட்ட விளக்க உரையாற்றினார். நெல்லை வேலைவாய்ப்பு மண்டல இணை இயக்குனர் டாக்டர் சண்முகசுந்தரம் வரவேற்றார். இதில் பல்வேறு முன்னணி நிறுவனங்கள் கலந்து கொண்டு தகுதி உடைய நபர்களை நேர்காணல் செய்து பணி நியமன ஆணைகளை வழங்கினர்.

      இதில் மாற்றுத்திறனாளிகளும் கலந்து கொண்டு பணி நியமன ஆணைகளை பெற்றனர். இதில் பள்ளி செயலாளர் டாக்டர் சுப்பாராஜ், பள்ளி முதல்வர் சுருளிநாதன், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் ரம்யா, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் ஜெயபிரகாஷ் மற்றும் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள், தனியார் நிறுவ னங்களின் அதிகாரி கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

      ×