search icon
என் மலர்tooltip icon
    TNLGanesh

    About author
    அச்சு ஊடக துறையில் 12 வதுஆண்டு பயணம். மலை பயணமும்,மழையில் பயணமும் பிடித்தமான ஒன்று. படைப்பியலில் அதிக ஆர்வம் . இயற்கையின் அழகை தனிமையில் ரசிக்க பிடிக்கும். நகர்வுகளை கண்டறிய பிடிக்கும். நான் தமிழின் மூத்த மகன் என்பதில் பெருமை.
      • ஜெயபாலன் தனது சொந்த செலவில் நகராட்சியில் பணிபுரியும் ஊழியர்கள் மற்றும் துப்புரவு பணியாளர்களுக்கு புத்தாடைகள் வழங்கி வாழ்த்துக்கள் தெரிவித்தார்.
      • நிகழ்ச்சியில் கவுன்சிலர்கள் பரமசிவன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

      சுரண்டை:

      தீபாவளியை முன்னிட்டு சுரண்டை நகராட்சி பணி யாளர்களுக்கு புத்தாடைகள் வழங்கும் விழா நடைபெற்றது. சேர்மன் வள்ளி முருகன் தலைமை தாங்கினார். பொறியாளர் முகைதீன், மேலாளர் வெங்கட சுப்பிரமணியன், கணக்காளர் முருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

      இதில் தென்காசி தெற்கு மாவட்ட தி.மு.க. சார்பில் மாவட்ட பொறுப்பாளர் ஜெயபாலன் தனது சொந்த செலவில் நகராட்சியில் பணிபுரியும் ஊழியர்கள் மற்றும் துப்புரவு பணியா ளர்களுக்கு புத்தாடைகள் வழங்கி வாழ்த்துக்கள் தெரிவித்தார்.

      நிகழ்ச்சியில் கவுன்சிலர்கள் பரமசிவன், வைகை கணேசன், அமுதா சந்திரன்,ஜேம்ஸ்,செல்வி, கூட்டுறவு சங்க துணை தலைவர் கணேசன், சங்கரநயினார், சசிகுமார், கோமதிநாயகம், டான் கணேசன், முத்துக்குமார், ஜோதிடர் தங்க இசக்கி, மோகன், ராஜன், ரஹீம், பவுல், கஸ்பா செல்வம் மற்றும் ஏராளமான தி.மு.க., காங்கிரஸ் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

      • மருதம்புத்தூர் ஊராட்சியில் சுமார் 10-க்கும் மேற்பட்ட குளங்கள் உள்ளன.
      • பருவமழையால் குளங்களுக்கு தண்ணீர் வரத்து ஏற்பட்டுள்ளது.

      நெல்லை:

      ஆலங்குளம் யூனியன் மருதம்புத்தூர் ஊராட்சியில் சுமார் 10-க்கும் மேற்பட்ட குளங்கள் உள்ளன. இந்த குளங்கள் மற்றும் கிணறுகள் மூலமாக இங்கு பாசனம் நடைபெற்று வருகிறது. சமீப காலமாக குளங்களுக்கு தண்ணீர் வரும் ஓடைகள் தூர்ந்து போன காரணத்தினால் தண்ணீர் ஓட்டம் தடைபட்டு கடந்த 2 ஆண்டுகளாகவே குளங்கள் வறண்டு காணப்படுகிறது.

      இந்நிலையில் இந்த ஆண்டு பெய்துவரும் வடகிழக்கு பருவமழையால் குளங்களுக்கு தண்ணீர் வரத்து ஏற்பட்டுள்ளது. ஊருக்கு மிக அருகாமையில் அமைந்துள்ள ஊரடி குளம் என்றழைக்கப்படும் உருண்டைகுளத்திற்கும் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. இந்த குளத்தின் வழியாக மின்கம்பங்கள் செல்கிறது.

      இதில் ஒரு மின்கம்பம் சரிந்த நிலையில், எப்போது வேண்டுமானாலும் சாய்ந்து விழும் நிலையில் இருந்து வருகிறது. அதனை சரிசெய்ய வேண்டும் என்று கடந்த சில மாதங்களாக பஞ்சாயத்து தலைவர் பூசத்துரை, ஒன்றிய கவுன்சிலர் சங்கீதா சுதாகர், உறுப்பினர் சேர்மன்ராஜா ஆகியோர் மின்வாரி யத்திற்கு கோரிக்கை வைத்து வருகின்றனர்.

      ஆனால் இதுவரையிலும் மின்கம்பம் சரி செய்யப்படாத நிலையில், தற்போது குளத்தில் நீர்மட்டம் அதிகரித்து வருகிறது. இதனால் மின்கம்பம் சரிந்து நீருக்குள் விழும் நிலை இருக்கிறது. அவ்வாறு சாய்ந்தால் குளத்தின் நீரில் மின்சாரம் பரவி விவசாயிகள், பொதுமக்கள், கால்நடைகளுக்கு பெரிய ஆபத்து நேரிடும் என்று அப்பகுதியினர் புகார் கூறுகின்றனர்.

      எனவே மின்வாரிய அதிகாரிகள் உடனடியாக அந்த குளத்திற்கு சென்று ஆய்வு செய்து, மின்கம்பத்தை மாற்றி அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது. இதுதொடர்பாக தென்காசி மாவட்ட கலெக்டர் ரவிச்சந்திரனிடம் அந்த கிராம மக்கள் புகார் மனு அளிக்க முடிவு செய்துள்ளனர்.

      • கிளாங்காடு ஊராட்சியில் 3-ம் ஆண்டு தொடக்க விழா நிகழ்ச்சி நடைபெற்றது.
      • ஊராட்சியில் பணிபுரிந்து வரும் தூய்மை பணியாளர்களுக்கும், அலுவலர்களுக்கும் புத்தாடைகள், இனிப்பு வழங்கப்பட்டது.

      தென்காசி:

      தென்காசி அருகே உள்ள கிளாங்காடு ஊராட்சியில் 3-ம் ஆண்டு தொடக்க விழா மற்றும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கேக் வெட்டி பணியாளர்களுக்கு புத்தாடை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியில் ஊராட்சி மன்ற தலைவர் சந்திரசேகரன் துணைத் தலைவர் பாலகிருஷ்ணன் மற்றும் கால்நடை மருத்துவர் சிவக்குமார், ஊராட்சி செயலர் இசக்கிமுத்து, வார்டு உறுப்பினர்கள், பணித்தள பொறுப்பாளர்கள், மக்கள் நலப் பணியாளர்கள்,தூய்மை காவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். கிளாங்காடு ஊராட்சியில் பணிபுரிந்து வரும் அனைத்து தூய்மை பணியாளர்களுக்கும், அலுவலர்களுக்கும் தீபாவளி பண்டி கைக்கான புத்தாடைகள் மற்றும் இனிப்புகள் வழங்கப்பட்டது.

      • கனமழையால் சிவகிரி தாலுகா பகுதியில் 6 வீடுகள் இடிந்து விழுந்தது.
      • இடிந்து விழுந்த வீடுகளில் உரிமையாளர்களுக்கு தலைமையிடத்து துணை தாசில்தார் சரவணன் காசோலைகளை வழங்கினார்.

      சிவகிரி:

      சிவகிரி தாலுகா பகுதிகளிலும், சிவகிரிக்கு மேற்கே மேற்கு தொடர்ச்சி மலையடிவாரப் பகுதியிலும் கடந்த 10 நாட்களாக பெய்த கனமழையால் சிவகிரி தாலுகா பகுதியில் 6 வீடுகள் இடிந்து விழுந்தது.

      சிவகிரி அண்ணா தெற்கு தெருவை சேர்ந்த சேர்வாரன் மகன் மாரியப்பன், சிவகிரி அருகே தாருகாபுரம் மடத்து தெருவை சேர்ந்த கோபி மகன் குருசாமி, தேசியம்பட்டி என்ற நாரணாபுரம் கலைஞர் புது காலனி தெருவை சேர்ந்த பிள்ளையார் மகன் கருப்பசாமி, தென்மலை பஞ்சாயத்து ஏ.சுப்பிரமணியாபுரம் தெற்கு தெருவை சேர்ந்த செல்லையா மகன் சாலமன், ராமநாதபுரம் பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்த அம்மையப்பன் மனைவி ராமலட்சுமி, சிவகிரி பாலகணேசன் தெருவை சேர்ந்த இசக்கி ராஜ் மனைவி ஆறுமுகத்தாள் ஆகிய 6 வீடுகள் கனமழையால் இடிந்து விழுந்து சேதமாயின.

      இதுகுறித்து தகவல் அறிந்தவுடன் சிவகிரி தாசில்தார் ஆனந்த், மண்டல துணைத் தாசில்தார் வெங்கடசேகர், தலை மையிடத்து துணை தாசில்தார் சரவணன், வருவாய் ஆய்வாளர்கள் சிவகிரி சுந்தரி, வாசுதேவநல்லூர் ராசாத்தி, கூடலூர் கோபால கிருஷ்ணன், கிராம நிர்வாக அலுவலர் வீரசேகரன் மற்றும் உதவியாளர் அழகராஜா ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கனமழையால் இடிந்து விழுந்து சேதமடைந்த வீடுகளை பார்வையிட்டு சம்பந்தப்பட்டவர்களுக்கு ஆறுதல் கூறினர்.

      மழையால் இடிந்து விழுந்து சேதம் ஏற்பட்ட வீடுகளுக்கு முழு நிவாரண உதவி தொகையாக ரூ.5 ஆயிரம், பகுதி நிவாரணத் தொகையாக ரூ.4ஆயிரம், இதற்கான தொகைக்கு காசோலையாக சம்பந்தப்பட்டவர்களிடம் தாலுகா அலுவலகத்தில் தலைமையிடத்து துணை தாசில்தார் சரவணன் காசோலைகளை வழங்கினார். அப்போது சிவகிரி வருவாய் ஆய்வாளர் சுந்தரி கிராம நிர்வாக அலுவலர் வீரசேகரன் ஆகியோர் உடன இருந்தனர்.

      • விழாவில் ஆண்களுக்கு வேட்டி, சட்டைகளும், பெண்களுக்கு சேலைகளையும் பேரூராட்சி தலைவர் லாவண்யா ராமேஸ்வரன் வழங்கினார்.
      • நிகழ்ச்சியில் பத்மஸ்ரீ சிவந்தி ஆதித்தனார் சிறப்புப் பள்ளி தலைமை ஆசிரியர் சங்கரசுப்பிரமணியன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

      சிவகிரி:

      வாசுதேவநல்லூர் மகாத்மா காந்திஜி சேவா சங்க அலுவலகத்தில் வறுமைகோட்டிற்கு கீழ் உள்ள பெண்களுக்கும், பேரூராட்சி அலுவலகத்தில் பணிபுரியும் தூய்மை காவலர்களுக்கும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சென்னை நங்கநல்லூர் சித்தானந்தம், பத்மாவதி அம்மாள் குடும்பத்தின் சார்பாகவும், சுப்பிரமணியபுரம் இசக்கிசெல்வம் குடும்பத்தின் சார்பாகவும், புத்தாடைகள் வழங்கும் விழா நடைபெற்றது.

      விழாவிற்கு பேரூராட்சி தலைவர் லாவண்யா ராமேஸ்வரன் தலைமை தாங்கி ஆண்களுக்கு வேட்டி, சட்டைகளும், பெண்களுக்கு சேலைகளும் வழங்கினார். சங்கத்தலைவர் தவமணி, பொருளாளர் தமிழரசன், பத்மஸ்ரீ சிவந்தி ஆதித்தனார் சிறப்புப் பள்ளி தலைமை ஆசிரியர் சங்கரசுப்பிரமணியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

      விழாவில் பள்ளியின் ஆசிரியர்கள் சாந்தி, ஹெலன் இவாஞ்சலின், இயன்முறை மருத்துவர் புனிதா, மாணவ - மாணவியர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

      • புதிய கட்டிடத்திற்கு தேவைப்படும் மின்சாரத்திற்கான மின்மாற்றி உடனடியாக அமைக்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டது.
      • நிகழ்ச்சியில ராஜா எம்.எல்.ஏ. கலந்து கொண்டு மின் மாற்றியை கல்லூரி பயன்பாட்டிற்கு தொடங்கி வைத்தார்.

      சங்கரன்கோவில்:

      சங்கரன்கோவிலில் அரசு கலை மற்றும் அறிவி யல் கல்லூரி புதிய கட்டிட பணிகள் முடிவுற்று தற்போது திறக்கப்படும் சூழ்நிலையில் உள்ளது.

      மின்மாற்றி

      இந்நிலையில் புதிய கட்டிடத்திற்கு தேவைப்படும் மின்சாரத்திற்கான மின்மாற்றி உடனடியாக அமைக்க வேண்டும் என கல்லூரி நிர்வாகம் சார்பில் தென்காசி வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் ராஜா எம்.எல்.ஏ.விடம் கோரிக்கை வைக்கப்பட்டது.

      இது குறித்து உடனடியாக நடவடிக்கை எடுத்த ராஜா எம்.எல்.ஏ. புதிய மின்மாற்றி அமைக்க ஏற்பாடு செய்தார். இந்நிலையில் இந்த மின் மாற்றி கல்லூரியின் பயன்பாட்டிற்கு தொடங்கி வைக்கும் நிகழ்ச்சி நடந்தது.

      சங்கரன்கோவில் மின்சார வாரிய செயற் பொறியாளர் பாலசுப்பிர மணியன் தலைமை தாங்கினார்.. அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதல்வர் விக்டோரியா தங்கம், சங்கரன்கோவில் யூனியன் சேர்மன் லாலா சங்கர பாண்டியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

      இதில் வடக்கு தி.மு.க. மாவட்ட செயலாளர் ராஜா எம்.எல்.ஏ. கலந்து கொண்டு இந்த மின் மாற்றியை கல்லூரி பயன்பாட்டிற்கு தொடங்கி வைத்தார்.

      இதில் மின்வாரிய இளநிலை செயற்பொறி யாளர் கணேஷ் ராம கிருஷ்ணன், உதவி செயற்பொறியாளர்கள் ரவி ராமதாஸ், முஜ்பின் ரகுமான், கல்லூரி பேராசிரியர்கள் வேணு கோபால், பாலமுருகன், தி.மு.க. மாவட்ட மாணவர் அணி அமைப்பாளர் உதய குமார், மின்வாரிய தொ.மு.ச. திட்டச் செய லாளர் மகாராஜன், அரசு ஒப்பந்ததாரர் ஜலால் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

      • இந்தோ-நேபாள சர்வதேச யோகா சாம்பியன்ஷிப் போட்டி பொக்ராவில் நடைபெற்றது.
      • போட்டியில் கலந்து கொண்ட பாலந்த ரத்திஷ் வெள்ளிப் பதக்கம் பெற்றார்.

      தென்காசி:

      நேபாள நாட்டில் உள்ள பொக்ராவில் இந்தோ-நேபாள சர்வதேச யோகா சாம்பியன்ஷிப் போட்டி நடைபெற்றது. சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியால் அங்கீகரிக்கப்பட்ட தபிசா மற்றும் ஐ.சி.எஸ்.எஸ்.பி.இ.- மூலம் ஏற்பாடு செய்யப்பட்ட இப்போட்டியில் தென்காசி குத்துக்கல்வலசை ஆக்ஸ்போர்டு பப்ளிக் பள்ளி மாணவர் பாலந்த ரத்திஷ் கலந்து கொண்டு வெள்ளிப் பதக்கம் பெற்றார்.

      இம்மாணவர் சிங்கப்பூரில் நடைபெற இருக்கும் தெற்காசிய யோகா சாம்பியன்ஷிப் போட்டிக்கு தேர்வு செய்யப்பட்டார்.

      வெள்ளிப் பதக்கம் பெற்ற மாணவரை ஆக்ஸ்போர்டு கல்வி குழும சட்ட ஆலோசகரும், உச்சநீதிமன்ற வழக்கறிஞருமான கே.திருமலை, பள்ளி தாளாளர் அன்பரசி திருமலை, பள்ளி சட்ட ஆலோசகரும், உச்சநீதிமன்ற வழக்கறிஞருமான தி.மிராக்ளின் பால் சுசி மற்றும் ஆசிரிய, ஆசிரியைகள், பெற்றோர்கள் பாராட்டினர்.

      • ஆலங்குளத்தில் பிரதான சாலையில் போக்குவரத்து நெரிசல் எப்போதும் அதிகரித்து காணப்படும்.
      • போக்குவரத்து நெரிசல் மிகுந்த பகுதிகளில் பேரிகார்டுகள் உடனடியாக வைக்கப்பட்டன.

      ஆலங்குளம்:

      தென்காசி மாவட்டம் ஆலங்குளத்தில் பிரதான சாலையில் போக்குவரத்து நெரிசல் எப்போதும் அதிகரித்து காணப்படும். இதன்காரணமாக அங்கு ஏற்படும் விபத்துகள் மற்றும் போக்குவரத்து நெரிசலை தவிர்க்கும் வகையில் ஆங்காங்கே பேரிகார்டுகள் வைக்க போலீசார் முடிவு செய்தனர்.

      இதையடுத்து போலீசாரின் முயற்சிக்கு ஒத்துழைப்பு அளிக்கும் வகையில் ஆலங்குளத்தில் உள்ள தனியார் ஜவுளி நிறுவனம் சார்பில் பேரிகார்டுகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு கார்த்திகா ஸ்டோர்ஸ் உரிமையாளர் எஸ்.எம்.டி. ரத்தினசாமி தலைமை தாங்கினார்.

      வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தென்காசி மாவட்டத் தலைவர் டி.பி.வி. வைகுண்டராஜா, செயலாளர் வி.கணேசன், பொருளாளர் ஐ.வி.என்.கலைவாணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட ஆலங் குளம் துணை போலீஸ் சூப்பிரண்டு ஜெயபால் பர்ணபாஸ், இன்ஸ்பெக்டர் சாகுல் ஹமீது ஆகியோரிடம் 8 பேரிகார்டுகள் ஒப்படைக்கப்பட்டன.

      இதைத் தொடர்ந்து, ஆலங்குளம் பிரதான சாலை மற்றும் அம்பாசமுத்திரம் சாலை ஆகியவற்றில் போக்குவரத்து நெரிசல் மிகுந்த பகுதிகளில் பேரிகார்டுகள் உடனடியாக வைக்கப்பட்டன.

      • கூட்டத்தில் 6 முதல் 8-ம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.
      • மாணவி சிவானி கிராமசபை கூட்டத்தின் செயலாளராக கலந்து கொண்டார்.

      தென்காசி:

      இலஞ்சி பாரத் மாண்டிசோரி பள்ளியில் பஞ்சாயத்து ராஜ் கிராம சபை விழிப்புணர்வு கூட்டம் பள்ளியின் வளாகத்தில் பாரம்பரிய முறையில் நடைபெற்றது. இதில் 6-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் 8-ம் வகுப்பு மாணவன் தேவேஷ் விவசாயி போல பாரம்பரிய ஆடையினை அணிந்து வேளாண்மை தொழிலில் உள்ள பிரச்சினைகள், சுற்றுப் புறத்தினை தூய்மையாக வைத்திருக்கும் முறை குறித்து எடுத்துரைத்தான்.

      6-ம் வகுப்பு மாணவி மிருதுளா ஜனனி கிராம பகுதியினை தூய்மையாகவும், பாதுகாப்பாகவும் வைப்பது பற்றி விளக்கி கூறினார். கிராம சபை கூட்டத்தின் தலைவராக மாணவி காளிபிரியா கலந்து கொண்டு வேளாண்மை தொழிலை திறம்பட செய்வதற்க்கான ஆலோசனைகளை வழங்கி, சுற்றுபுறத் தூய்மையின் முக்கியத்துவத்தினை எடுத்துரைத்தார். மாணவி சிவானி கிராமசபை கூட்டத்தின் செயலாளராக கலந்து கொண்டார். மேலும் சுற்று புறதூய்மையை பாதுகாக்கும் விதமாக மாணவ, மாணவிகள் குழுவாக இணைந்து பள்ளியின் வளாகத்தை தூய்மைபடுத்தினர்.

      • விடுதியில் வழங்கப்படும் உணவுகள் தரமற்றதாக இருக்கிறது என மாணவர்கள் புகார் கூறி வந்தனர்.
      • மாணவர்களின் போராட்டத்தால் கல்லூரி நிர்வாகிகள் தலைமறைவாகி விட்டனர்.

      ஆலங்குளம்:

      ஆலங்குளம் அருகே உள்ள புதூரில் கேரள மாநிலத்தை சேர்ந்த தம்பி என்பவர் நர்சிங், பாலிடெக்னிக் கல்லூரிகள் நடத்தி வருகிறார். இங்கு பயிலும் சுமார் 500 மாணவ-மாணவிகளில் 400-க்கும் மேற்பட்டோர் கேரள மாநிலத்தை சேர்ந்தவர்கள்.

      இவர்களுக்கு ஆலங்குளம் பாலிடெக்னிக் கல்லூரி வளாகத்தில் தங்கும் விடுதி செயல்பட்டு வருகிறது. இந்த விடுதியில் வழங்கப்படும் உணவுகள் தரமற்றதாக இருக்கிறது. நர்சிங் கல்லூரிக்கும் அவர்கள் தங்கும் விடுதிக்கும் சுமார் 10 கிலோமீட்டர் தொலைவு உள்ளதால் செல்வதற்கு சிரமமாக இருப்பதாகவும் மாணவர்கள் புகார் கூறி வந்தனர்.

      மேலும் பெண்கள் விடுதி காப்பாளர் இரவு நேரத்தில் பெண்களை போட்டோ எடுத்து ஆண் விடுதி காப்பாளருக்கு அனுப்புகின்றனர் என்றும் அவர்கள் புகார் கூறிவந்த நிலையில், நேற்று மாணவ, மாணவிகள் அவர்களுடைய பெற்றோருடன் இணைந்து ஆலங்குளத்தில் உள்ள பாலிடெக்னிக் கல்லூரியை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். மாணவர்களின் போராட்டத்தால் கல்லூரி நிர்வாகிகள் தலைமறைவாகி விட்டனர்.

      தகவல் அறிந்த ஆலங்குளம் துணை போலீஸ் சூப்பிரண்டு ஜெயபால் பர்ணபாஸ் மற்றும் ஆலங்குளம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சாகுல் ஹமீது போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வந்தனர். இப்போராட்டத்தை தொடர்ந்து நர்சிங் கல்லூரிக்கு விடுமுறை அளிக்கப்பட்டது.

      • நாட்டு நலப்பணித் திட்ட சிறப்பு முகாமின் 5 -வது நாளில் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
      • பேரணியை வெங்காடம்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் ஸாருகலா ரவி தொடங்கி வைத்தார்.

      கடையம்:

      தென்காசி மாவட்டம் கடையம் அருகே உள்ள மாதா பட்டணம் ச.ச.வி. மேல்நிலைப்பள்ளி நாட்டு நலப்பணித் திட்ட சிறப்பு முகாமின் 5 -வது நாளில் பிளாஸ்டிக் ஒழிப்பு (நெகிழி) விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. உதவி தலைமை ஆசிரியர் தங்கராஜன் வரவேற்று பேசினார். ஆசிரியை தமிழரசி தலைமை தாங்கினார். இளஞ் செஞ்சிலுவை சங்கம் மற்றும் ஆசிரியை ஜெயராணி, தேசிய பசுமைப்படை சாந்தி மோசஸ் சாரண சாரணியர் இயக்கம் மோசஸ் முன்னிலை வகித்தனர்.

      இதில் தலைமை ஆசிரியர் அமிர்த சிபியா மற்றும் உதவி தலைமை ஆசிரியைகள் வெங்கடலட்சுமி, ரெஜினா தெரசாள் உள்பட பலர் கலந்து கொண்டனர். பேரணியை வெங்காடம்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் ஸாருகலா ரவி தொடங்கி வைத்தார். பேரணி கோவிலூற்று, மாதாபட்டணம் பகுதியில் நடைபெற்றது. துணிப்பையை பாளை மறைமாவட்ட பொருளாளர் அந்தோணி சாமி வழங்க வார்டு உறுப்பினர் குருசாமி பெற்றுகொண்டார். உதவி திட்ட அலுவலர் அருள் பீட்டர் ராஜ் நன்றி கூறினார் . நிகழ்ச்சியை திட்ட அலுவலர் அந்தோணி துரைராஜ் , நாட்டு நலப்பணித் திட்ட மாணவர்கள் செய்திருந்தனர்.

      • கலெக்டர் ரவிச்சந்திரன் கால்நடை நல அட்டைகளை கால்நடை வளர்ப்போருக்கு வழங்கினார்.
      • முகாமில் தென்காசி கோட்ட உதவி இயக்குநர் மகேஷ்வரி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

      தென்காசி:

      தென்காசி மாவட்டத்தில் தேசிய கால்நடை நோய்த்தடுப்பு திட்டத்தின் கீழ் மாடுகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி முகாம் நடைபெற்றது. இதனை மாவட்ட கலெக்டர் ரவிச்சந்திரன் இலஞ்சி பேரூராட்சிக்குட்பட்ட முதலாளி குடியிருப்பில் தொடங்கி வைத்து கோமாரி பற்றிய விழிப்புணர்வு துண்டு பிரதிகளை வெளியிட்டு வழங்கினார்.

      கால்நடை நல அட்டைகளை கால்நடை வளர்ப்போருக்கு வழங்கினார். மேலும் தென்காசி மாவட்டம் முழுவதும் சுமார் 135 லட்சம் கால்நடைகளுக்கு கோமாரி நோய்த்தடுப்பூசி போடுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கு 46 குழுக்கள் கால்நடை பராமரிப்புத்துறை மூலம் ஏற்படுத்தப்பட்டு உள்ளாட்சித்துறை, பால்வளம் மற்றும் ஆவின் உடன் இணைந்து செயலாற்ற உள்ளது.

      எனவே பொதுமக்கள் தங்கள் ஊரில் தடுப்பூசி போட குழுவினர் வரும்போது அனைத்து மாடுகளுக்கும் தடுப்பூசி போட்டு பயனடையுமாறு மாவட்ட கலெக்டர் ரவிச்சந்திரன் கேட்டுக் கொண்டார்.

      முகாமில் தென்காசி கோட்ட உதவி இயக்குநர் மகேஷ்வரி, கால்நடை உதவி மருத்துவர்கள், வெள்ளைப்பாண்டி,செல்வகுத்தாலிங்கம், சிவகுமார், புனிதா, அருண்பாண்டியன், கால்நடை ஆய்வாளர்கள் அருண்குமார், பூமாரிசெல்வம், கால்நடை பராமரிப்பு உதவியாளர்கள், மாடசாமி, அந்தோணியம்மாள், இலஞ்சி பேரூராட்சித் தலைவர் சின்னத்தாய், துணை ஊராட்சி மன்றத்தலைவர் முத்தையா, வார்டு உறுப்பினர் ராஜேஸ்வரி, வல்லம் ஊராட்சிமன்றத்தலைவர் ஜமீன் பாத்திமா, உதவி மக்கள் தொடர்பு அலுவலர் (செய்தி) ராமசுப்பிரமணியன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

      ×