search icon
என் மலர்tooltip icon

    கிரிக்கெட் (Cricket)

    சி.எஸ்.கே. கேப்டனாக எம்.எஸ்.டோனியின் 200வது போட்டி - நினைவு பரிசு வழங்கிய சீனிவாசன்
    X

    சி.எஸ்.கே. கேப்டனாக எம்.எஸ்.டோனியின் 200வது போட்டி - நினைவு பரிசு வழங்கிய சீனிவாசன்

    • சி.எஸ்.கே. கேப்டனாக 200-வது போட்டியில் எம்.எஸ்.டோனி களமிறங்கினார்.
    • டோனிக்கு சி.எஸ்.கே. அணி உரிமையாளர் சீனிவாசன் நினைவு பரிசு வழங்கினார்.

    சென்னை:

    சென்னை அணியின் கேப்டன் மகேந்திர சிங் தோனி இன்று ஐபிஎல் கிரிக்கெட்டில் சிறப்பான மைல்கல்லை எட்யுயுள்ளார்.

    16-வது ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இன்று சென்னை சேப்பாக்கத்தில் நடக்கும் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதுகின்றன.

    இந்தப் போட்டி சென்னை அணியின் கேப்டனாக தோனிக்கு 200-வது போட்டியாகும். 2010, 2011, 2018 மற்றும் 2021 என 4 முறை டோனி தலைமையில் சென்னை சூப்பர் கிங்ஸ் சாம்பியன் பட்டம் வென்றுள்ளது சிஎஸ்கே.

    2010 மற்றும் 2014-ல் சாம்பியன்ஸ் லீக் பட்டத்தையும் வென்றுள்ளது.

    199 போட்டிகளில் தோனியின் தலைமையில் 120 வெற்றிகளை சென்னை அணி பெற்றுள்ளது. 78 போட்டிகளில் தோல்வி மற்றும் 1 போட்டியில் முடிவு எட்டப்படவில்லை.

    இந்நிலையில், சி.எஸ்.கே. கேப்டனாக 200-வது போட்டியில் களமிறங்கிய எம்.எஸ்.டோனிக்கு சி.எஸ்.கே. அணியின் உரிமையாளர் சீனிவாசன் நினைவு பரிசு வழங்கினார். அணி வீரர்களும் டோனிக்கு வாழ்த்து தெரிவித்தனர்.

    டாஸ் வென்ற சி.எஸ்.கே. முதலில் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது.

    Next Story
    ×