search icon
என் மலர்tooltip icon

    கிரிக்கெட் (Cricket)

    ஜெகதீசன் அரை சதம்: நெல்லை வெற்றிபெற 167 ரன்களை இலக்காக நிர்ணயித்தது சேப்பாக்
    X

    ஜெகதீசன் அரை சதம்: நெல்லை வெற்றிபெற 167 ரன்களை இலக்காக நிர்ணயித்தது சேப்பாக்

    • டாஸ் வென்ற நெல்லை ராயல் கிங்ஸ் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.
    • அதன்படி முதலில் ஆடிய சேப்பாக் அணி 166 ரன்களை எடுத்துள்ளது.

    சேலம்:

    டிஎன்பிஎல் டி20 கிரிக்கெட் தொடரின் 4வது லீக் ஆட்டத்தில் நெல்லை ராயல் கிங்ஸ், சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணிகள் மோதுகின்றன. டாஸ் வென்ற நெல்லை ராயல் கிங்ஸ் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி பேட்டிங் செய்ய களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களான சந்தோஷ் குமார், ஜெகதீசன் சிறப்பான தொடக்கம் கொடுத்தனர்.

    முதல் விக்கெட்டுக்கு இந்த ஜோடி 58 ரன்கள் எடுத்த நிலையில், சந்தோஷ் குமார் 41 ரன்னில் அவுட்டானார். தொடர்ந்து சிறப்பாக ஆடிய ஜெகதீசன் அரை சதம் கடந்தார். பாபா அபராஜித் 24 ரன்னும், சித்தார்த் 17 ரன்னும் எடுத்து ஆட்டமிழந்தனர்.

    இறுதியில், சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 166 ரன்கள் எடுத்துள்ளது. ஜெகதீசன் ஆட்டமிழக்காமல் 63 ரன்கள் எடுத்தார்.

    நெல்லை அணி சார்பில் சிலம்பரசன் 3 விக்கெட் வீழ்த்தினார்.

    இதையடுத்து, 167 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் நெல்லை அணி களமிறஙகுகிறது.

    Next Story
    ×