என் மலர்
கிரிக்கெட் (Cricket)

ஐபிஎல் தொடரில் டோனியின் ஓய்வு: ரோகித்தின் அடேங்கப்பா கமெண்ட்- நெகிழ்ந்த சிஎஸ்கே ரசிகர்கள்

- டோனியின் கடைசி சீசன் இதுவாக இருக்கும் என்று கடந்த 2-3 ஆண்டுகளாக நான் கேள்விப்பட்டு வருகிறேன்.
- இன்னும் சில சீசன்களில் விளையாடும் அளவுக்கு அவர் தகுதியானவர்.
2023 ஐபிஎல் போட்டிக்காக டோனி சென்னை சூப்பர் கிங்ஸ் அணியுடன் இணைந்து பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார். இந்தாண்டுதான் டோனியின் கடைசி ஐபிஎல் என பலரும் கூறிவருகின்றனர். வாட்சன் உள்பட சிஎஸ்கே அணியின் முன்னாள் வீரர்கள் மற்றும் தற்போதைய வீரர்கள் டோனியின் பயிற்சியை பார்த்துவிட்டு இவர் இன்னும் சில ஆண்டுகள் விளையாடுவார் என கூறினர்.
இந்நிலையில் எம்எஸ் டோனி இன்னும் 2-3 சீசன் வரை ஐபிஎல் தொடரில் விளையாடுவார் என இந்திய அணியின் கேப்டனும் மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனுமான ரோகித் சர்மா கூறியுள்ளார்.
இது குறித்து அவர் கூறியதாவது:-
டோனியின் கடைசி சீசன் இதுவாக இருக்கும் என்று கடந்த 2-3 ஆண்டுகளாக நான் கேள்விப்பட்டு வருகிறேன். இன்னும் சில சீசன்களில் விளையாடும் அளவுக்கு அவர் தகுதியானவர் என்று நான் நினைக்கிறேன். இதுதான் அவருக்கு கடைசி வருடம் என சொல்ல முடியாது.
அவர் ஓய்வு பெறுவதற்கு முன்பு இன்னும் சில சீசன்கள் விளையாட வேண்டும் என வலியுறுத்துகிறேன்.
என்று ரோகித் சர்மா கூறினார்.