search icon
என் மலர்tooltip icon

    கிரிக்கெட் (Cricket)

    மகளிர் பிரீமியர் லீக் கிரிக்கெட்: மும்பை அணிக்கு எதிரான ஆட்டத்தில் டாஸ் வென்ற உ.பி. வாரியர்ஸ் பேட்டிங் தேர்வு
    X

    மகளிர் பிரீமியர் லீக் கிரிக்கெட்: மும்பை அணிக்கு எதிரான ஆட்டத்தில் டாஸ் வென்ற உ.பி. வாரியர்ஸ் பேட்டிங் தேர்வு

    • குஜராத், பெங்களுரூ, டெல்லி ஆகிய அணிகளை வீழ்த்தியது. மும்பை 4-வது வெற்றி ஆர்வத்தில் உள்ளது.
    • உ.பி. வாரியர்ஸ் அணி 3 ஆட்டத்தில் இரண்டு வெற்றி, ஒரு தோல்வி பெற்று உள்ளது.

    5 அணிகள் பங்கேற்றுள்ள மகளிர் பிரீமியர் லீக் 20 ஓவர் கிரிக்கெட் போட்டி தொடர் மும்பையில் நடந்து வருகிறது. இன்று இரவு 7.30 மணிக்கு நடக்கும் 10-வது லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ்-உ.பி. வாரியர்ஸ் அணிகள் மோதுகின்றன.

    இந்த போட்டிக்கான டாஸ் போடப்பட்டது. இதில், டாஸ் வென்ற உ.பி.வாரியர்ஸ் அணி பேட்டிங் தேர்வு செய்துள்ளது. இந்நிலையில், உ.பி வாரியர்ஸ் அணி பேட்டிங் செய்ய களமிறங்கியுள்ளது.

    மும்பை அணி தான் விளையாடிய 3 ஆட்டத்திலும் வெற்றி பெற்றுள்ளது. குஜராத், பெங்களுரூ, டெல்லி ஆகிய அணிகளை வீழ்த்தியது. மும்பை 4-வது வெற்றி ஆர்வத்தில் உள்ளது.

    அந்த அணி பேட்டிங், பந்துவீச்சில் சம பலத்துடன் உள்ளது. மேத்யூஸ், ஹர்மன் பிரீத் கவூர், ஸ்கிவர் பிரண்ட், அமெலியா கெர், வாங், பூஜா வஸ்த்ரகர் ஆகிய வீராங்கனைகள் உள்ளனர்.

    உ.பி. வாரியர்ஸ் அணி 3 ஆட்டத்தில் இரண்டு வெற்றி, ஒரு தோல்வி பெற்று உள்ளது. அந்த அணியில் அலிசா ஹுலி, தகலியா மெக்ராத், தீப்தி சர்மா, கிரேஸ் ஹாரிஸ், சோபி எக்பெஸ்டோன், ராஜேஸ்வரி கெய்க்வாட், தேவிகா வைதியா ஆகிய வீராங்கனைகள் உள்ளனர்.

    Next Story
    ×