என் மலர்
கோவா
- சுசனா சேத் அறையை காலி செய்தபோது அவருடன் வந்த மகன் மாயமாகி இருந்தது தெரியவந்தது.
- சுசனா சேத் பெங்களூரு செல்வதற்காக வாடகை கார் வேண்டும் என ஓட்டல் வரவேற்பாளர்களிடம் கேட்டுள்ளார்.
பனாஜி:
கர்நாடக மாநிலம் பெங்களூருவை சேர்ந்த உயர் தொழில்நுட்ப நிறுவனரும், மைண்ட்புல் ஏஐ லேப் நிறுவனத்தின் தலைமை நிர்வாகியாகவும் சுசனா சேத் (வயது39) என்ற பெண்மணி உள்ளார்.
இவர் கடந்த 6-ந்தேதி வடக்கு கோவாவில் உள்ள பிரபலமான அபார்ட்மெண்ட் ஓட்டல் ஒன்றில் தனது 4 வயது மகனுடன் அறை எடுத்து தங்கி உள்ளார். நேற்று அதிகாலை ஓட்டல் அறையை காலி செய்து விட்டு அவர் காரில் பெங்களூரு திரும்பினார்.
இந்நிலையில் அவர் தங்கி இருந்த ஓட்டல் அறையை பராமரிப்பு ஊழியர் சுத்தம் செய்தபோது அங்கு ரத்தக்கறைகள் படிந்திருந்ததும், கறைகள் படிந்த துணிகளை பார்த்தும் அதிர்ச்சியடைந்து ஓட்டல் நிர்வாகத்திற்கு தகவல் தெரிவித்தார்.
சந்தேகம் அடைந்த அவர்கள் சுசனா சேத் அறையை காலி செய்தபோது அவருடன் வந்த மகன் மாயமாகி இருந்தது தெரியவந்தது. இதனால் ஓட்டல் நிர்வாகத்தினருக்கு சந்தேகம் வலுத்தது. அவர்கள் போலீஸ் நிலையத்தில் விவரங்களை தெரிவித்தனர்.
உடனடியாக போலீசார் அங்கு விரைந்து சென்று ஓட்டல் அறையில் பதிவாகி இருந்த சி.சி.டி.வி. காட்சிகளை சேகரித்து விசாரணை நடத்தினர். அப்போது சுசனா சேத் தனது மகனுடன் ஓட்டலுக்கு வந்த நிலையில் திரும்பி செல்லும்போது மகனை அழைத்து செல்லவில்லை என்பது உறுதியானது. அதே நேரம் ஓட்டல் பணியாளர்களிடம் விசாரித்தபோது பல அதிர்ச்சி தகவல்கள் வெளியாகின.
சுசனா சேத் பெங்களூரு செல்வதற்காக வாடகை கார் வேண்டும் என ஓட்டல் வரவேற்பாளர்களிடம் கேட்டுள்ளார். அதற்கு வரவேற்பாளர் இங்கிருந்து விமான டிக்கெட் கட்டணம் மிகவும் குறைவுதான். எனவே அதில் முன்பதிவு செய்து பயணிக்கலாம் என அறிவுறுத்திய நிலையிலும் சுசனா சேத், டாக்சியில் தான் பயணம் செய்ய விரும்புவதாக கூறியுள்ளார்.
அதன்படி வந்த டாக்சியில் சுசனா சேத் பயணம் செய்துள்ளார். அப்போது அவர் கையில் ஒரு பேக்கை சுமக்க முடியாமல் எடுத்து சென்ற காட்சிகளையும் பார்த்து போலீசார் அதிர்ச்சியடைந்தனர். பெரிய நிறுவனத்தின் அதிகாரியாக திகழும் சுசனா சேத் யாருடைய உதவியையும் கேட்காமல் பெரிய பேக்கை எடுத்து சென்றது ஏன்? என போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. மேலும் அவருடன் வந்த மகன் எங்கே என்ற கேள்விக்கும் விடை தெரியாததால் போலீசார் திகைத்தனர்.
இவ்வாறாக அடுத்தடுத்து சந்தேகங்கள் வலுத்ததால் போலீசார் சுசனா சேத் செல்போனில் தொடர்பு கொண்டு உங்களது மகன் எங்கே? என விசாரித்தனர். அப்போது சுசனா சேத்தை தனது மகனை நண்பர் வீட்டில் விட்டு சென்றுள்ளதாக கூறினார்.
ஆனால் அவர் கூறிய முகவரியை போலீசார் சரிபார்த்தபோது அது போலி முகவரி என தெரிய வந்தது. இதனால் ஏதோ விபரீதம் நிகழ்ந்துள்ளது என்பதை போலீசார் உறுதி செய்தனர்.
இதைத்தொடர்ந்து போலீசார் அவர் பயணித்த டாக்சி டிரைவரை தொடர்பு கொண்டு பேசியபோது, கார் கர்நாடக மாநிலம் சித்ரதுர்கா மாவட்டத்தில் சென்று கொண்டிருப்பதும், காரில் சுசனா சேத்தின் மகன் இல்லை என்பதும் உறுதியானது.
இதைத்தொடர்ந்து கார் டிரைவரை அருகே உள்ள போலீஸ் நிலையத்திற்கு காரை கொண்டு செல்லுமாறு போலீசார் கூறினர். அதன்படி டிரைவர், ஜமங்கலா போலீஸ் நிலையத்திற்கு காரை ஓட்டி சென்றார். அங்கு கோவா போலீசார் கூறியபடி, காரை போலீஸ் அதிகாரிகள் சோதனை செய்தபோது காரில் இருந்த பையில் சுசனா சேத்தின் மகன் பிணமாக கிடப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
இதைத்தொடர்ந்து போலீசார் சுசனா சேத்தை பிடித்து விசாரணை நடத்தினர். அப்போது அவர் தனது மகனை கொன்றுவிட்டு உடலை பையில் அடைத்து காரில் எடுத்து சென்றது தெரியவந்தது. ஆனால் கொலைக்கான காரணங்கள் எதுவும் இதுவரை தெரியவில்லை.
இது தொடர்பாக போலீசார் சுசனா சேத்திடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
- தமிழ்நாடு 14 தங்கம், 15 வெள்ளி, 10 வெண்கலம் என 49 பதக்கங்களுடன் 8-வது இடத்தை பிடித்தது.
- வித்யா மூன்று தங்கப்பதக்கங்களை கைப்பற்றினார்.
கோவா:
37-வது தேசிய விளையாட்டு போட்டி கோவாவில் நடந்தது. இதில் தமிழ்நாடு 14 தங்கம், 15 வெள்ளி, 10 வெண்கலம் என 49 பதக்கங்களுடன் 8-வது இடத்தை பிடித்தது. இதில் தமிழக தடகள அணி 9 தங்கம், 4 வெள்ளி, 4 வெண்கலம் என 17 பதக்கங்களை பெற்றது. வித்யா மூன்று தங்கப்பதக்கங்களை கைப்பற்றினார்.
தமிழக அணி 114.5 புள்ளிகள் பெற்று 2-வது இடத்தை பிடித்தது. சர்வீசஸ் 117 புள்ளிகளுடன் முதல் இடத்தை பிடித்தது. தமிழக அணி 2.5 புள்ளிகள் வித்தியாசத்தில் முதலிடத்தை தவறவிட்டது. பதக்கம் வென்ற வீரர்-வீராங்கனைகளுக்கு தமிழ்நாடு தடகள சங்க செயலாளர் சி.லதா பாராட்டும் வாழ்த்தும் தெரிவித்தார்.
- தேசிய விளையாட்டு போட்டிக்கான நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பங்கேற்று உரையாற்றினார்.
- இதுதொடர்பான வீடியோவை எக்ஸ் பக்கத்தில் வெளியீடு.
கோவாவில் 37வது தேசிய விளையாட்டு போட்டியை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பங்கேற்று உரையாற்றினார்.
இதுதொடர்பான வீடியோவை பிரதமர் மோடி தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
- இந்த விமானம் அதிகாலை 02:15 மணிக்கு அபுதாபி சர்வதேச விமான நிலையத்தை சென்றடையும்.
- சேவை வாரத்திற்கு மூன்று முறை, திங்கள், வியாழன் மற்றும் சனிக்கிழமைகளில் செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
வடக்கு கோவாவில் உள்ள மனோகர் சர்வதேச விமான நிலையம், அபுதாபி சர்வதேச விமான நிலையத்திற்கு நேரடி இண்டிகோ விமான சேவையை வரும் செப்டம்பர் 2ம் தேதி முதல் வாரத்திற்கு மூன்று முறை அறிவித்துள்ளது.
மனோகர் சர்வதேச விமான நிலையத்திலிருந்து அபுதாபிக்கு இண்டிகோ விமானம் செப்டம்பர் 02, 2023 சனிக்கிழமை காலை 00:25 மணிக்குத் திட்டமிடப்பட்டுள்ளதாக விமான நிலைய ஆபரேட்டர் ஜிஎம்ஆர் கோவா சர்வதேச விமான நிலைய நிர்வாகத்தின் மூத்த அதிகாரி தெரிவித்தார்.
இந்த விமானம் அதிகாலை 02:15 மணிக்கு அபுதாபி சர்வதேச விமான நிலையத்தை சென்றடையும்.
மேலும் அவர், "அபுதாபியில் இருந்து திரும்பும் இண்டிகோ விமானம் காலை 03:15க்கு புறப்பட்டு மனோகர் சர்வதேச விமான நிலையத்திற்கு காலை 08:10 மணிக்கு வந்துவிடும். இந்த குறிப்பிடத்தக்க சேவை வாரத்திற்கு மூன்று முறை, திங்கள், வியாழன் மற்றும் சனிக்கிழமைகளில் செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது" என்றார்.
- விபத்தை ஏற்படுத்திய கார் உள்ளிட்ட 6 வாகனங்களும் கடுமையாக சேதமடைந்தன.
- கார் டிரைவர் குடிபோதையில் வாகனத்தை ஓட்டியது விசாரணையில் தெரியவந்துள்ளது.
பனாஜி:
கோவா மாநிலம் பனாஜி அருகே இன்று அதிவேகமாக சென்ற கார் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து, முன்னால் சென்ற 3 கார்கள், மோட்டார் சைக்கிள் மற்றும் ஸ்கூட்டர் மீது மோதி விபத்துக்குள்ளானது. பாண்டா-பனாஜி தேசிய நெடுஞ்சாலையில் இந்த விபத்து நிகழ்ந்தது. விபத்தை ஏற்படுத்திய கார் உள்ளிட்ட 6 வாகனங்களும் கடுமையாக சேதமடைந்தன. ஸ்கூட்டரில் சென்ற கணவன், மனைவி, மோட்டார் சைக்கிளில் சென்ற ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
விபத்து தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து, விபத்தை ஏற்படுத்திய கார் ஓட்டுனரை கைது செய்தனர். அவர் குடிபோதையில் வாகனத்தை ஓட்டியது விசாரணையில் தெரியவந்துள்ளது.
- ரெயில்வேயில் பயணிகளுக்கு நல்ல உணவு வழங்கப்படுகிறதா என்பதைக் கண்டறிய குழு நியமனம்.
- ஐஆர்சிடிசி எடுத்த நடவடிக்கையால் பயணிகளுக்கு எதிர்காலத்தில் நல்ல உணவு கிடைக்கும்.
மும்பை- கோவா இடையேயான சிஎஸ்எம்டி- மட்கான் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரெயிலில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பயணிக்கு வழங்கிய உணவில் மனித விரல் நகம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதனை வீடியோ எடுத்த பயணி சமூக வலைத்தளத்தில் வெளியிட்டார்.
இந்த வீடியோ வைரலானதை அடுத்து, ரெயில்வே அளிக்கும் உணவின் தரத்தால் பாதிக்கப்பட்டதாக பலரும் தங்களின் மோசமான அனுபவத்தை பகிர்ந்தனர்.
இதுகுறித்து இந்திய ரெயில்வே கேட்டரிங் மற்றும் சுற்றுலா கழகத்திற்கு தெரியவந்ததை அடுத்து, சம்பந்தப்பட்ட கேட்டரிங் ஒப்பந்ததாரருக்கு ரூ.25 ஆயிரம் அபராதம் விதித்து நடவடிக்கை எடுத்தது.
மேலும் இதுதொடர்பாக, ஐஆர்சிடிசி கூறுகையில், "ரெயில்வேயில் பயணிகளுக்கு நல்ல உணவு வழங்கப்படுகிறதா என்பதைக் கண்டறிய ஒரு குழு நியமிக்கப்பட்டுள்ளது.
சில நெறிமுறைகள் உருவாக்கப்பட்டன. இதில் அதிகாரி ஒருவர் வந்தே பாரத் விரைவு ரெயிலில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளார். இந்த முறை ஐஆர்சிடிசி ரத்னகிரியில் உள்ள கிச்சனை முழுமையாக சோதனை செய்தது.
ஐஆர்சிடிசி எடுத்த நடவடிக்கையால் பயணிகளுக்கு எதிர்காலத்தில் நல்ல உணவு கிடைக்கும்" என்று நம்பிக்கை தெரிவித்தது.
- கோவா அரசின் இந்த முடிவிற்கு எதிர்கட்சிகளிடம் இருந்து எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
- அண்டை மாநிலங்களில் தேர்தல் நடக்கும் போது விடுமுறை அளிப்பது வழக்கம்.
அண்டை மாநிலமான கர்நாடகாவில் நாளை சட்டசபைத் தேர்தல் நடைபெறுகிறது. இந்நிலையில், கோவாவில் உள்ள கர்நாடகாவை சேர்ந்த வாக்காளர்கள் தேர்தலில் வாக்களிப்பதற்காக, மே 10ம் தேதி (நாளை) அன்று ஊதியத்துடன் கூடிய விடுமுறையை கோவா அரசு அறிவித்துள்ளது.
இது தனியார் நிறுவனங்கள் மற்றும் தொழில்துறை தொழிலாளர்களுக்கும் உள்ளடக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், கோவா அரசின் இந்த முடிவிற்கு எதிர்கட்சிகளிடம் இருந்து எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
இதுகுறித்து கோவா மாநில தொழில்துறை சங்கத் தலைவர் தாமோதர் கோச்கர், இது மாநில அரசின் அபத்தமான முடிவு என்று கூறினார்.
மேலும் அவர் கூறுகையில், "கோவாவில் உள்ள தொழில்துறையினர் இது முற்றிலும் அபத்தமான மற்றும் முட்டாள்தனமான முடிவாக கருதுகிறார்கள். மாநில அரசின் இத்தகைய ஒருதலைப்பட்ச முடிவுகளுக்கு எதிராக சட்டப்பூர்வ தீர்வுகளை பரிசீலித்து வருகிறோம்" என்றார்.
இந்நிலையில், விடுப்பு குறித்து கோவா முதல்வர் அலுவலக மூத்த அதிகாரி ஒருவர் கூறுகையில், "அண்டை மாநிலங்களில் தேர்தல் நடக்கும் போது விடுமுறை அளிப்பது வழக்கம். கடந்த ஆண்டு கோவாவில் தேர்தல் நடந்த அன்று கர்நாடகாவில் விடுமுறை அறிவிக்கப்பட்டது" என்றார்.
- 12 ஆண்டுகளுக்கு பிறகு பாகிஸ்தான் மந்திரி ஒருவர் இந்தியாவுக்கு வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
- சீனா-பாகிஸ்தான் பொருளாதார வழித்தடத்தின் ஒரு பகுதியாக மாற மத்திய ஆசிய நாடுகள் எதிர்பார்த்து கொண்டிருக்கின்றன.
இஸ்லாமாபாத்:
ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பில் உள்ள நாடுகளின் வெளியுறவுத்துறை மந்திரிகள் கூட்டம் இந்தியாவின் கோவாவில் நேற்று நடந்தது.
இதில் பாகிஸ்தான் வெளியுறவு மந்தரி பிலாவல் பூட்டோ உள்ளிட்ட மந்திரிகள் பங்கேற்றனர். அவர்களை இந்திய வெளியுறவு மந்திரி ஜெய்சங்கர் வரவேற்றார்.
12 ஆண்டுகளுக்கு பிறகு பாகிஸ்தான் மந்திரி ஒருவர் இந்தியாவுக்கு வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் இந்திய பயணத்தை முடித்துக் கொண்டு பிலாவல் பூட்டோ பாகிஸ்தானுக்கு திரும்பினார். அப்போது அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது:-
இந்தியாவுக்கான எனது பயணம் வெற்றிகரமாக அமைந்தது. ஒவ்வொரு முஸ்லிமை தீவிரவாதியாக பார்க்கும் பார்வையை நிராகரிக்க உதவியது. இது போன்ற கட்டுக்கதையை உடைக்க நாங்கள் முயற்சி செய்தோம்.
2019-ம் ஆண்டு ஆகஸ்டு 5-ந்தேதிக்கு முந்தைய காஷ்மீர் நிலையை (சிறப்பு அந்தஸ்து) மீட்டெடுப்பதன் மூலம் பேச்சுவார்த்தைக்கு உகந்த சூழலை இந்தியா உருவாக்க வேண்டும் என்பதில் பாகிஸ்தான் உறுதியாக உள்ளது.
சீனா-பாகிஸ்தான் பொருளாதார வழித்தடத்தின் ஒரு பகுதியாக மாற மத்திய ஆசிய நாடுகள் எதிர்பார்த்து கொண்டிருக்கின்றன என்றார்.
முன்னதாக இந்திய வெளியுறவு மந்திரி ஜெய்சங்கர் கூறும்போது, ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் உறுப்பு நாட்டின் வெளியுறவு மந்திரியாக இங்கு வந்த பிலாவல் பூட்டோ அதற்கேற்ப நடத்தப்பட்டார். பாகிஸ்தானின் முந்தைய ஆதாரமான பயங்கரவாதத்தை நியாயப்படுத்துபவர் மற்றும் பயங்கரவாதத்தின் செய்தி தொடர்பாளராகவே அவ ரது நிலைப்பாடுகள் கூட்டத்தில் விமர்சிக்கப்பட்டன என்று கூறினார்.
- ஷாங்காய் ஒத்துழைப்பு கூட்டமைப்பு நாடுகளின் வெளியுறவுத்துறை மந்திரிகள் மாநாடு கோவாவில் நடைபெறுகிறது.
- 12 ஆண்டுக்கு பின் முதல் முறையாக பாகிஸ்தான் வெளியுறவுத்துறை மந்திரி இந்தியா வந்துள்ளார்.
பனாஜி:
இந்தியா, ரஷியா, கிர்கிஸ்தான், கஜகஸ்தான், தஜிகிஸ்தான், உஸ்பெகிஸ்தான், பாகிஸ்தான் ஆகிய நாடுகளை உறுப்பினர்களாக கொண்டு ஷாங்காய் ஒத்துழைப்பு கூட்டமைப்பு செயல்பட்டு வருகிறது.
இதனிடையே, ஷாங்காய் ஒத்துழைப்பு கூட்டமைப்பு நாடுகளின் வெளியுறவுத்துறை மந்திரிகள் மாநாடு இன்றும் நாளையும் (மே 4, 5) கோவாவில் நடைபெற உள்ளது.
ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டிற்கு இந்த ஆண்டு இந்தியா தலைமை வகித்து வரும் நிலையில், உறுப்பு நாடுகளுக்கு மாநாட்டில் பங்கேற்கும்படி இந்தியா அழைப்பு விடுத்திருந்தது. அந்த வகையில் வெளியுறவுத்துறை மந்திரிகள் மாநாட்டில் பங்கேற்கும்படி பாகிஸ்தான் வெளியுறவுத்துறை மந்திரி பூட்டோ சர்தாரிக்கு இந்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் கடிதம் அனுப்பி இருந்தார். இதற்கு பாகிஸ்தான் அரசும் சம்மதம் தெரிவித்துள்ளது.
கோவாவில் நடைபெறும் ஷாங்காய் ஒத்துழைப்பு கூட்டமைப்பு நாடுகளின் வெளியுறவுத்துறை மந்திரிகள் மாநாட்டில் பங்கேற்க பாகிஸ்தான் சம்மதம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், கோவாவில் நடைபெறும் ஷாங்காய் ஒத்துழைப்பு கூட்டமைப்பு நாடுகளின் வெளியுறவுத்துறை மந்திரிகள் மாநாட்டில் பங்கேற்க கராச்சியில் இருந்து தனி விமானம் மூலம் பாகிஸ்தான் வெளியுறவுத்துறை மந்திரி பிலாவல் பூட்டோ சர்தாரி இன்று கோவா வந்தடைந்தார்.
12 ஆண்டுகளுக்கு பின் பாகிஸ்தான் வெளியுறவுத்துறை மந்திரி இந்தியாவுக்கு வருவது இதுவே முதல் முறையாகும் என்பது குறிப்பிடத்தக்கது.
- குற்றவாளிகள் மீது போலீசார் மென்மையான போக்கை கையாண்டதாக மனுதாரர்கள் குற்றம்சாட்டினர்.
- பாதிக்கப்பட்டவர்களில் ஒருவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு வீடியோவை ஷேர் செய்துள்ளார்.
டெல்லியைச் சேர்ந்த ஒரு குடும்பம் சமீபத்தில் கோவாவுக்கு சுற்றுலா சென்றுள்ளனர். அங்கு ஒரு ரிசார்ட்டில் தங்குவதற்காக சென்றபோது அங்குள்ள ஊழியருக்கும் அவர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. பின்னர் அந்த நபர் தனது ஆதரவாளர்களுடன் வந்து சுற்றுலா வந்த டெல்லி குடும்பத்தினரை சரமாரியாக தாக்கி உள்ளனர். வாள் மற்றும் கத்திகளால் தாக்கியதாகவும் கூறப்படுகிறது. இதில் ஒருவர் பலத்த காயமடைந்துள்ளார்.
இந்த தாக்குதல் தொடர்பாக கோவா போலீசார் வழக்குப்பதிவு செய்து, சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் 3 பேரை அடையாளம் கண்டு கைது செயதுள்ளனர். அவர்கள் மீது கொலை முயற்சி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் சிலரை தேடி வருகின்றனர்.
இதற்கிடையே குற்றவாளிகள் மீது போலீசார் மென்மையான போக்கை கையாண்டதாக மனுதாரர்கள் குற்றம்சாட்டினர். இதையடுத்து இந்த வழக்கை விசாரித்த அதிகாரியிடம் விசாரணை நடத்தப்படுகிறது. தாக்குதல் வழக்கு வேறு ஒரு அதிகாரி வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
ரிசார்ட்டில் நடந்த தாக்குதல் தொடர்பாக பாதிக்கப்பட்டவர்களில் ஒருவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு வீடியோவை ஷேர் செய்துள்ளார்.
இந்த தாக்குதல் சம்பவம் அதிர்ச்சிகரமானது மற்றும் சகித்துக்கொள்ளமுடியாதது என்று கோவா முதல்வர் பிரமோத் சாவந்த் கூறியுள்ளார். குற்றவாளிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார்.
- கடந்த 5ம் தேதி முதல் கோவாவின் வனப்பகுதிகளில் காட்டுத் தீ பரவல் ஏற்பட்டுள்ளது.
- கோவாவில் காட்டுத் தீயை கட்டுப்படுத்த இந்திய விமானப்படை களமிறங்கி உள்ளது.
பனாஜி:
கோவாவில் காட்டுத் தீயை கட்டுப்படுத்த இந்திய விமானப்படை களமிறங்கி உள்ளது.
கோவாவின் வனப்பகுதிகளில் கடந்த 5-ம் தேதி முதல் ஆங்காங்கே காட்டுத் தீ பரவல் ஏற்பட்டுள்ளது. தீயணைப்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், கோவாவில் இந்திய விமானப்படையும் தீயணைப்பு பணிகளில் ஈடுபட்டு உள்ளது. எம்.ஐ.-17 ரக ஹெலிகாப்டர் மூலம் காட்டுத் தீ பரவும் பகுதிகளில் தண்ணீர் பீய்ச்சி அடிக்கப்பட்ட காட்சிகள் வெளியாகின.
- ஒரு நீதிபதி, சராசரியாக நாள் ஒன்றுக்கு 50 முதல் 60 வழக்குகளை கையாள்கிறார்.
- சாமானியர்களின் வாழ்க்கை எளிதாக இருக்க மோடி அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.
பனாஜி :
கோவா மாநில தலைநகர் பனாஜியில் 23-வது காமன்வெல்த் சட்ட மாநாடு தொடங்கியது. அதில் மத்திய சட்ட மந்திரி கிரண் ரிஜிஜூ, மாநில கவர்னர் ஸ்ரீதரன் பிள்ளை, முதல்-மந்திரி பிரமோத் சவந்த் மற்றும் 52 நாடுகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
மாநாட்டில், கிரண் ரிஜிஜு பேசியதாவது:-
இன்று நாட்டின் ஒவ்வொரு பகுதியிலும் ஒவ்வொரு குடிமகனும் மத்திய அரசின் நலத்திட்டங்களால் பலன் அடைகிறார். நலத்திட்ட நாடு என்பதால், ஒவ்வொரு தனிமனிதரின் குரலையும் கேட்பது முக்கியம்.
சாமானியர்களின் வாழ்க்கை எளிதாக இருக்க மோடி அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. மக்களுக்காகத்தான் சட்டங்கள் உள்ளன. சட்டங்களே தடைக்கற்களாக மாறும்போது, அவற்றை பின்பற்றுவது சுமையாக இருக்கும். அப்போது, அந்த சட்டங்கள் நீக்கப்பட வேண்டும்.
அந்தவகையில் கடந்த எட்டரை ஆண்டுகளில், 1,486 பழமையான, நடைமுறைக்கு பொருந்தாத சட்டங்களை நீக்கி இருக்கிறோம். 13-ந் தேதி தொடங்கும் பட்ஜெட் கூட்டத்தொடரின் 2-வது பகுதியில் மேலும் 65 சட்டங்களை நீக்க மசோதாவை முன்வைப்போம். நாட்டில் உள்ள கோர்ட்டுகளில் 4 கோடியே 98 லட்சத்துக்கு மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன. அவற்றை குறைப்பது எளிதல்ல. ஏனென்றால், முடிவுக்கு வரும் வழக்குகளை விட 2 மடங்கு புதிய வழக்குகள் வந்து விடுகின்றன.
ஒரு நீதிபதி, சராசரியாக நாள் ஒன்றுக்கு 50 முதல் 60 வழக்குகளை கையாள்கிறார். சில நீதிபதிகள், நாள் ஒன்றுக்கு 200 வழக்குகளை கூட முடித்து வைக்கிறார்கள். இருப்பினும், நிலுவை வழக்குகள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. நிலைமையை சமாளிக்க தொழில்நுட்பத்தை மத்திய அரசு பயன்படுத்தி வருகிறது. இ-கோர்ட்டுகளை தொடங்கி இருக்கிறோம். எங்கள் இறுதி இலக்கு, காகிதமற்ற கோர்ட்டுகள்தான்.
மத்தியஸ்தம் செய்வதை ஊக்குவிக்க மத்தியஸ்த மசோதாவையும் கொண்டுவர உள்ளோம்.
இவ்வாறு அவர் பேசினார்.