என் மலர்tooltip icon

    ஈரான்

    • இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் அமைப்பினர் இடையிலான போர் ஓராண்டை கடந்து நீடித்து வருகிறது.
    • ஈராக்கில் இருந்து இஸ்ரேல்மீது தாக்குதல் நடத்த ஈரான் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியானது.

    தெஹ்ரான்:

    இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் அமைப்பினர் இடையிலான போர் ஓராண்டை கடந்து நீடித்து வருகிறது. ஹமாசுக்கு ஆதரவாக லெபனானில் செயல்பட்டு வரும் ஹிஸ்புல்லா அமைப்பும் இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தி வருகிறது.

    ஹமாஸ் ஆயுதக்குழு, ஹிஸ்புல்லா அமைப்பு, ஈராக்கில் செயல்பட்டு வரும் பயங்கரவாத குழுக்கள், ஏமனில் செயல்பட்டு வரும் ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கு ஈரான் ஆதரவு அளித்து வருகிறது.

    இதற்கிடையே, கடந்த அக்டோபர் 2-ம் தேதி இஸ்ரேல்மீது ஈரான் ஏவுகணைகள், டிரோன்கள் மூலம் தாக்குதல் நடத்தியது.

    இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் கடந்த 26-ம் தேதி ஈரான் தலைநகர் மற்றும் பிற நகரங்களில் உள்ள ராணுவ நிலைகளை குறிவைத்து இஸ்ரேல் திடீர் தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் 5 பேர் உயிரிழந்தனர்.

    இஸ்ரேல் தாக்குதலுக்கு ஈரான் பதிலடி கொடுக்கலாம் என எதிர்பார்க்கப்பட்டது. ஈராக்கில் இருந்து இஸ்ரேல்மீது தாக்குதல் நடத்த ஈரான் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியானது.

    இந்நிலையில், இஸ்ரேலுக்கு தகுந்த பதிலடி கொடுக்கப்படும் என ஈரானின் உயரிய தலைவரான அயத்துல்லா அலி கமேனி மிரட்டல் விடுத்துள்ளார்.

    இதுதொடர்பாக, ஈரான் தலைநகர் தெஹ்ரானில் மாணவர்கள் மத்தியில் பேசிய அயத்துல்லா அலி கமேனி, ஈரான், ஈரான் மண் மற்றும் எதிர்ப்பு கூட்டணிக்கு (ஹமாஸ், ஹிஸ்புல்லா, ஹவுதி, ஈராக்கில் செயல்படும் பயங்கரவாதிகள்) எதிராக மேற்கொண்ட நடவடிக்கைகளுக்காக எதிரிகளான அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுக்கு நிச்சயம் கடுமையான பதிலடி கொடுக்கப்படும் என தெரிவித்தார்.

    • துல்லியமாக ஈரான் நிலைகளை குறிவைத்து இந்த தாக்குதல்களை சில மணிநேரங்களிலேயே நடத்தி முடித்துள்ளது இஸ்ரேல்.
    • மூன்று கட்டங்களாக இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது

    இஸ்ரேல் மீது கடந்த 1 ஆம் தேதி சுமார் 180 ஏவுகணைகளை ஏவி ஈரான் திடீர் தாக்குதல் நடத்தியது. இதற்கு பதிலடி கொடுக்க காத்திருந்த இஸ்ரேல் சுமார் 25 நாட்கள் கழித்து 8இன்று ஈரான் மீது இஸ்ரேல் வான்வழித் தாக்குதல் நடத்தியுள்ளது. துல்லியமாக ஈரான் நிலைகளை குறிவைத்து இந்த தாக்குதல்களை சில மணிநேரங்களிலேயே நடத்தி முடித்துள்ளது இஸ்ரேல்.

     

    இதற்காக 100 க்கும் மேற்பட்ட இஸ்ரேலிய F-35 'Adir' ஸ்டெல்த் ஃபைட்டர்கள் விமானங்கள் 2000 கிலோமீட்டர்கள் பயணித்து ஈரான் வானுக்குள் வந்துள்ளன. ஈரான் அணுசக்தி நிலையங்களுக்கும் எண்ணெய் கிணறுகளுக்கும் எந்த பாதிப்பும் ஏற்படாமல் துல்லியமாக இந்த தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன.

    மூன்று கட்டங்களாக நடந்த இந்த தாக்குதலில் முதற்கட்டமாக ஈரான் பாதுகாப்பு அமைப்பிகள் தாக்கப்பட்டன. இரண்டாவது மற்றும் மூன்றாவது அலை தாக்குதலில் ஈரானின் மிசைல்கள் மற்றும் டிரோன்கள் உள்ள தளவாடங்கள் குறிவைக்கப்பட்டுள்ளன.

    இந்த தாக்குதலில் உள்ள துல்லியத்தன்மை இதை இஸ்ரேல் வெகு காலமாக நன்கு திட்டமிட்டு செயல்படுத்தியுள்ளது புலனாகிறது. இஸ்ரேல் ஈரானுக்கு இடையில் சிரியா, ஈராக் என மற்ற நாடுகள் உள்ளதால் மிகவும் தொலைவில் இருக்கும் ஈரானை ஏவுகணை மூலம் தாக்கினால் அணுசக்தி நிலையங்கள் மீது ஏவுகணைகள் விழலாம். அது சர்வதேச சிக்கலில் முடியும். எனவே பைட்டர் பிளேன்களை 2000 கிலோமீட்டர் அனுப்பி மட்டுமே இந்த தாக்குதலை செயல்படுத்த முடியும் என்று இஸ்ரேல் யோசித்து இந்த தாக்குதலை திட்டமிட்டிருக்கிறது.

    கடந்த 25 நாட்களாக வானிலை மோசமாக இருந்ததால் பைட்டர் பிளேன்கள் குறிவைப்பதில் சிரமம் இருந்ததால் தற்போது இத்தனை நாட்கள் தள்ளி இந்த தாக்குதலை நடாத்தியுள்ளதாக தெரிகிறது. ஆனாலும் இந்த தாக்குதலை ஈரான் திறம்பட சமாளித்துள்ளது. இந்த தாக்குதல்களில் 2 ஈரானிய வீரர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.

    இதற்கிடையே இந்த தாக்குதல்களால் தங்களுக்கு அதிக பாதிப்பு இல்லை எனவும் இஸ்ரேலுக்கு தங்களின் எதிர் தாக்குதலால் பாதிப்பு எனவும் ஈரான் தெரிவித்துள்ளது. இந்நிலையில் அடுத்து ஈரான் என்ன செய்யும் என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

    இஸ்ரேல் தாக்குதலுக்கு எதிர் தாக்குதல் நடத்தினால் ஈரான் பின்விளைவுகளை சந்திக்க வேண்டும் என்று அமெரிக்கா எச்சரித்த நிலையில் ஈரான் தாக்குதலுக்கு சவூதி அரேபியா கண்டனம் தெரிவித்துள்ளது.

    அமெரிக்க அழுத்தத்தால் ஈரான் உடனே தாக்குதல் நடத்தப் பார்க்காது என்றே ஈரான் அதிகார வட்டாரங்களில் இருந்து செய்தி வருவதாக சர்வதேச  ஊடகங்கள் கூறுகின்றன. ஆனாலும் மத்திய கிழக்கில் போர் உருவாகும்  பதற்றம் முன்னெப்போதையும் விட தற்போது அதிகரித்துள்ளது.

    • ஹமாஸ் மற்றும் ஹிஸ்புல்லா அமைப்பிற்கு மறைமுகமாக ஈரான் ஆதரவு தெரிவித்து வருகிறது.
    • ஈரான் கடந்த 1-ந்தேதி இஸ்ரேல் நோக்கி சரமாரி ஏவுகணை தாக்குதல் நடத்தியது.

    பாலஸ்தீனத்தை ஆக்கிரமித்ததாக இஸ்ரேலுடன் மோதலில் ஈடுபட்டு வரும் ஹமாஸ் அமைப்பு கடந்த வருடம் அக்டோபர் 7-ந்தேதி முன்னெப்போதும் இல்லாத மிகப்பெரிய தாக்குதலை நடத்தியது. இஸ்ரேலை நோக்கி ஆயிரக்கணக்காக ராக்கெட்டுகள் சரமாரியாக பாய்ந்தன. ஓர் ஆண்டுக்குள் தரைவழியாக ஊடுருவியும் ஹமாஸ் கிளர்ச்சியாளர்கள் பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்தினர்.

    இந்த தாக்குதல்களில் 1,200-க்கும் மேற்பட்ட இஸ்ரேலியர்கள் கொல்லப்பட்டனர். மேலும் சுமார் 250 பேர் பணய கைதிகளாக பிடிப்பித்துச் செல்லப்பட்டனர். இதனால் கோபமுற்ற இஸ்ரேல் பணயக்கைதிகளை மீட்கவும் ஹமாஸை அழித்தொழிக்கவும் பாலஸ்தீனம் மீது கடந்த ஒரு வருடகாலமாகத் தாக்குதல் நடத்தி வருகிறது. இதில் இதுவரை பல்லாயிரக்கணக்கான பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.

    ஹமாஸ் மற்றும் ஹிஸ்புல்லா அமைப்பிற்கு மறைமுகமாக ஈரான் ஆதரவு தெரிவித்து வருகிறது. ஹமாஸ் தலைவர் ஈரானில் வைத்து கொல்லப்பட்டதற்கு பதிலடியாக ஈரான் கடந்த 1-ந்தேதி இஸ்ரேல் நோக்கி சரமாரி ஏவுகணை தாக்குதல் நடத்தியது. இந்த நிலையில் இஸ்ரேல் அதற்கு பதிலடியாக துல்லியமான தாக்குதலை நடத்தியுள்ளது.

    ஈரானில் உள்ள ராணுவ தளவாடகள் மீது துல்லியமான தாக்குதல்களை நடத்தி வருவதாக இஸ்ரேலிய ராணுவம் கூறும்வேளையில், தெஹ்ரானுக்கு அருகே வெடிகுண்டுகள் வெடிக்கும் சத்தம் கேட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

    இதனிடையே இஸ்ரேல் பாதுகாப்பு படை தரப்பில் கூறியிருப்பதாவது:- இஸ்ரேல் அரசுக்கு எதிராக ஈரானில் இருந்து பல மாதங்கள் தொடர்ச்சியாக நடத்தப்பட்ட தாக்குதல்களுக்கு பதிலளிக்கும் வகையில் இப்போது இஸ்ரேல் பாதுகாப்புப் படைகள் ஈரானில் உள்ள ராணுவ இலக்குகள் மீது துல்லியமான தாக்குதல்களை நடத்தி வருகின்றன. ஈரானில் உள்ள ஆட்சியும், அதன் ஆதரவு பெற்ற அமைப்புகளும் அக்டோபர் 7 முதல் இஸ்ரேலை இடைவிடாமல் தாக்கி வருகின்றன.

    ஈரானிய மண்ணில் இருந்து நேரடி தாக்குதல்கள் உள்ளிட்டவைகளுக்கு உலகில் உள்ள மற்ற இறையாண்மை கொண்ட நாடுகளைப் போலவே, இஸ்ரேலுக்கும் பதிலளிக்கும் உரிமையும் கடமையும் உள்ளது. எங்கள் தற்காப்பு மற்றும் தாக்குதல் திறன்கள் முழுமையாக அணிதிரட்டப்பட்டுள்ளன. இஸ்ரேல் மற்றும் இஸ்ரேல் மக்களை பாதுகாக்க தேவையான அனைத்தையும் செய்வோம்.

    இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

    இதனால் ஈரானுக்கும் இஸ்ரேலுக்கும் இடையில் நேரடி போர் ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக மத்திய கிழக்கு பிராந்தியத்தில் பதற்றம் அதிகரித்துள்ளது.

    • ஈரானின் அனைத்து அரசு துறைகள் மீதும் நடத்தப்பட்ட இந்த சைபர் தாக்குதல்கள் மூலம் முக்கிய ஆவணங்கள் திருடுபோயுள்ளன
    • எரிபொருள் விநியோகம், போக்குவரத்துக்கு உள்கட்டமைப்புகள் பாதிக்கப்பட்டுள்ளன.

    ஈரான் இஸ்ரேல் இடையே போர் ஏற்படும் பதற்றம் அதிகரித்துள்ள நிலையில் ஈரான் மீது சைபர் தாக்குதலை இஸ்ரேல் முன்னெடுத்துள்ளது. ஈரான் அணுசக்தி நிலையம் உட்பட பல்வேறு இடங்களில் நடந்த இந்த சைபர் தாக்குதலால் ஈரான்  அரசின் செயல்பாடுகள் முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

    ஈரான் நாடாளுமன்றம், சட்டப்பேரவை, நீதித்துறை நிர்வாகங்களையும், அணுசக்தி, எரிசக்தி மற்றும் மின் விநியோக கட்டமைப்புகளையும் குறிவைத்து இஸ்ரேல் நடத்திய சைபர் தாக்குதலால் கடுமையான பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. ஈரான் முழுவதும் உள்ள வங்கிகள் மற்றும் ஏடிஎம் மையங்கள் முடயங்கியுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

    இந்த தாக்குதல் குறித்து பேசிய ஈரான் சைபர் கவுன்சில் முன்னாள் செயலாளர் பெரோஸ்பாடி, ஈரானின் அனைத்து அரசு துறைகள் மீதும் நடத்தப்பட்ட இந்த சைபர் தாக்குதல்கள் மூலம் முக்கிய ஆவணங்கள் திருடுபோயுள்ளன. முக்கியமாக  ஈரான் அணுசக்தி மையங்களின் ரகசிய தகவல்கள் திருடப்பட்டுள்ளன. எரிபொருள் விநியோகம், போக்குவரத்துக்கு உள்கட்டமைப்புகள் பாதிக்கப்பட்டுள்ளன. நகராட்சி நிர்வாகம், துறைமுகங்கள் என அனைத்தின் மீதும் இந்த சைபர் தாக்குதல் நடந்துள்ளதாகத் தெரிவித்தார்.

     

    முன்னதாக கடந்த செப்டம்பர் 17 ஆம் தேதி லெபனானில் செயல்படும் ஹிஸ்புல்லா அமைப்பினர் வைத்திருந்த பேஜர்கள், வாக்கி டாக்கிகள் உள்ளிட்ட தொலைத்தொடர்பு சாதனங்கள் ஒரே நேரத்தில் வெடித்துச் சிதறின. இந்த சைபர் தாக்குதலின் பின்னணியில் இஸ்ரேல் உள்ளது என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.

     

    இந்நிலையில் தற்போது ஈரான் அரசு நிர்வாகங்கள் மீதே நடந்துள்ள இந்த சைபர் தாக்குதல் எந்த அளவு தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதைப் பொறுத்திருந்தே பார்க்க வேண்டும். இதற்கிடையே முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக விமானங்களில் பேஜர்கள், வாக்கி டாக்கிகள் உள்ளிட்டவற்றை எடுத்துச்செல்ல ஈரான் அரசு தடை விதித்துள்ளது.

    • ஈரானில் உள்ள அணு சக்தி மையங்களையும், எண்ணெய் கிணறுகளையும் இஸ்ரேல் தாக்கலாம்.
    • அதற்கான தக்க பதிலடி கொடுக்கப்படும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    பாலஸ்தீனம் மீது தாக்குதல் நடத்தி வரும் இஸ்ரேல் கடந்த மாதம் முதல் லெபனான் மீதும் தாக்குதல் நடத்தி போரை விரிவுபடுத்தியுள்ளது. இந்த தாக்குதல்களுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில் யாரும் எதிர்பாராதபோது இஸ்ரேல் மீது 180 ஏவுகணைகளை ஏவியது ஈரான்.

    இதனைத்தொடர்ந்து ஈரான் மீது தாக்குதல் நடந்த அமெரிக்காவுடன் சேர்ந்து இஸ்ரேல் திட்டம் தீட்டி வருகிறது, ஈரானில் உள்ள அணு சக்தி மையங்களையும், எண்ணெய் கிணறுகளையும் இஸ்ரேல் தாக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.

    இந்த நிலையில்தான், மத்திய கிழக்கில் இருக்கும் வளைகுடா அரபு நாடுகள், குறிப்பாக அமெரிக்காவுடன் நெருக்கும் காட்டும் நாடுகளுக்கு ஈரான் புதிய எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளது. அதில், அரபு நாடுகள் தங்களின் வான்வழி மற்றும் ராணுவத் தளங்களை இஸ்ரேலிய தாக்குதலுக்கு பயன்படுத்த அனுமதித்தால் அதை ஏற்றுக்கொள்ள முடியாது.

    அதற்கான தக்க பதிலடி கொடுக்கப்படும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. குறிப்பாக அமெரிக்க படைகள் நிலைநிறுத்தப்பட்டுள்ள ஐக்கிய அரபு அமீரகம், ஜோர்டான், கத்தார் உள்ளிட்ட எண்ணெய் வளமிக்க நாடுகளுக்கு ஈரானின் எச்சரிக்கை ரகசிய சேனல்கள் மூலம் கொண்டு சேர்க்கப்பட்டுள்ளது.

    • ஈரானை தொடர்ந்து லெபனானும் அனைத்து விமானங்களையும் ரத்து செய்தது.
    • இஸ்ரேலின் ஏவுகணைத் தாக்குதல்களை எதிர்கொள்ள தங்கள் ராணுவம் தயாராக உள்ளதாக ஈரான் தெரிவித்துள்ளது

    இஸ்ரேலில் ஒரு இரவு 

    பாலஸ்தீனம் மற்றும் லெபனான் மீது தாக்குதல் நடத்தி வரும் இஸ்ரேல் மீது கடந்த செவ்வாய்க்கிழமை இரவு 180 ராக்கெட்டுகளை சரமாரியாக ஏவியது ஈரான். 1 வருட கால பொறுமைக்கு பின்னர் மேற்கு நாடுகளின் எதிர்ப்பையும் மீறி ஈரான் இந்த தாக்குதலை நடத்தி உள்ளது. இஸ்ரேல் வெகுகாலம் நிலைக்காது, மீண்டும் தாக்குதல் நடத்துவோம் என்று ஈரான் மதத்தவைவர் அயத்துல்லா காமினி கையில் ரைபிள் துப்பாக்கியுடன் பொதுவெளியில் தோன்றி பகிரங்க மிரட்டல் விடுத்தார்.

     

    இந்த தாக்குதலுக்கு பதிலடியாக அமெரிக்காவுடன் இணைந்து ஈரான் எண்ணெய்க் கிணறுகளையும், அணு சக்தித் தலங்களையும் தாக்க இஸ்ரேல் திட்டமிட்டு வருகிறது. ஈரான் மிகப்பெரிய தவறிழைத்துவிட்டது என்றும் அதற்கான விலையை நிச்சயம் செலுத்தும் என்றும் இஸ்ரேல் அதிபர் நேதன்யாகு மிரட்டல் விடுத்திருந்தார்.

    ஈரானில் ஒரு இரவு 

    அந்த வகையில் கடந்த வருடம் அக்டோபர் 7 அன்று ஹமாஸ் இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தியதன் விளைவாக இந்த போர் தீவிரமானதால் தங்களின் மீது அதீ நாளில் இஸ்ரேல் தாக்குதல் நடத்தக்கூடும் என்று ஈரான் அச்சத்தில் உள்ளது.

    எனவே  நேற்றைய இரவு முழுவதும் ஈரானில் அனைத்து விமான சேவைகளும் திடீரென ரத்து செய்யப்பட்டன. நேற்று [ஞாயிற்றுக்கிழமை] இரவு 9 மணியில் இருந்து இன்று [திங்கள் கிழமை] காலை 6 மணி வரை அனைத்து விமானங்களும் ரத்து செய்யப்படுவதாக ஈரான் விமான போக்குவரத்து அமைப்பு தெரிவித்தது.

     

    ஈரானை தொடர்ந்து லெபனானும் பெய்ரூட் விமான நிலையத்தில் இருந்து புறப்படும் அனைத்து விமானங்களையும் ரத்து செய்தது. இந்நிலையில் பாதுகாப்பை உறுதிப்படுத்திய பின்னர் ஈரானில் விமான சேவைகள் மீண்டும் தொடங்கப்பட்டுள்ளன.

    தயார்

    இதற்கிடையே இஸ்ரேலின் ஏவுகணைத் தாக்குதல்களை எதிர்கொள்ள தங்கள் ராணுவம் தயாராக உள்ளதாக ஈரான் தெரிவித்துள்ளது. இதற்கிடையே பெய்ரூட்டில் உள்ள ஹிஸ்புல்லா புலனாய்வுத் தலைமையகம் மீதும், காசா பகுதிகள் மீதும் இஸ்ரேல் மீண்டும் தாக்குதல் நடத்தியுள்ளது. தங்கள் மீதான தாக்குதலுக்கு பதிலடியாக இஸ்ரேலின் ஹைபா [HAIFA] நகர் மீது ஹிஸ்புல்லா ஏவுகணை வீசியுள்ளது. 

    • மத்திய கிழக்கில் போர் ஏற்படும் சூழல் உருவாகி இருக்கிறது.
    • இஸ்ரேல் மீதான தாக்குதல் மிகவும் சரியான முடிவு என்று பேசினார்.

    பாலஸ்தீனம் மற்றும் லெபனான் மீது இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதல்களுக்கு பதிலடி கொடுக்கும் வகையில், கடந்த சில தினங்களுக்கு முன் ஈரான் ஏவுகணை தாக்குத் நடத்தியது. இந்த திடீர் தாக்குதல் காரணமாக மத்திய கிழக்கில் போர் ஏற்படும் சூழல் உருவாகி இருக்கிறது.

    இஸ்ரேல் மீது அதிரடி தாக்குதல் நடத்திய சில தினங்களில் ஈரானின் உயர் தலைவர் அலி கமேனி தெஹ்ரானில் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்த சொற்பொழிவு நிகழ்ச்சியில் உரையாற்றினார். அப்போது அவர் இஸ்ரேல் மீதான தாக்குதல் மிகவும் சரியான முடிவு என்று பேசினார்.

    கிட்டத்தட்ட ஐந்து ஆண்டுகளுக்கு பிறகு பொது வெளியில் கமேனி உரையாற்றுவதை அடுத்து, அவரை காண ஏராளமான பொதுமக்கள் திரண்டிருந்தனர். சொற்பொழிவு நிகழ்ச்சியானது மத்திய தெஹ்ரானில் உள்ள கொமேனி கிராண்ட் மொசாலா மசூதியில் நடைபெற்றது. சொற்பொழிவைத் தொடர்ந்து உயிரிழந்த ஹிஸ்புல்லா தலைவர் ஹசன் நசரல்லாவுக்கு இரங்கல் கூட்டம் நடைபெறுகிறது.

    சொற்பொழிவு நிகழ்ச்சியில் பேசும் போது, "சில இரவுகளுக்கு முன் நமது படைகள் மேற்கொண்ட நடவடிக்கை மிகவும் சட்டப்பூர்வமான, முறையான ஒன்று ஆகும். இஸ்ரேல் மீது ஏவப்பட்ட ஏவுகணைகள் அவர்கள் பாலஸ்தீனம் மற்றும் லெபனான் மக்களுக்கு எதிராக செய்த குற்றங்களுக்கான குறைந்த பட்ச தண்டனை தான்."

    "பிரிவினை மற்றும் தேசத்துரோகத்தை விதைத்து, அனைத்து முஸ்லிம்களுக்கும் பாதிப்பு ஏற்படுத்துவதே நமது எதிரியின் கொள்கைகள் ஆகும். அவர்கள் பாலஸ்தீனியர்கள், லெபனானியர்கள், எகிப்தியர்கள், ஈராக்கியர்களுக்கும் எதிரிகள். அவர்கள் தான் ஏமன் மற்றும் சிரிய மக்களுக்கும் எதிரிகள். நம் எதிரி ஒன்று தான்."

    "சையத் ஹசன் நஸ்ரல்லா இப்போது நம்முடன் இல்லை. ஆனால் அவரது ஆன்மாவும், அவரது பாதை என்றென்றும் நம்மை ஊக்குவிக்கும். அவர் சியோனிச எதிரிக்கு எதிராக தீவிரமாக செயல்பட்டார். அவரது தியாகம் இந்த செல்வாக்கை மேலும் அதிகரிக்கும். நஸ்ரல்லாவின் இழப்பு வீண் போகவில்லை. நமது அசைக்க முடியாத நம்பிக்கையை வலுப்படுத்திக் கொண்டு எதிரிக்கு எதிராக நிற்க வேண்டும்."

    "இரத்தம் சிந்தும் லெபனான் மக்களுக்கு உதவுவதும், லெபனானின் ஜிஹாத் மற்றும் அல்-அக்ஸா மசூதிக்கான போரை ஆதரிப்பது அனைத்து முஸ்லிம்களின் கடமையும் பொறுப்பும் ஆகும். லெபனான் மற்றும் பாலஸ்தீனியர்கள் ஆக்கிரமிப்பை எதிர்த்து தங்களுக்கு ஆதரவாக நிற்பதற்கு கண்டித்து போராட்டம் நடத்தவோ, எதிர்ப்பு தெரிவிக்கவோ எந்த சர்வதேச சட்டத்திற்கும் உரிமை இல்லை."

    "சியோனிஸ்டுகள் மற்றும் அமெரிக்கர்கள் கனவு காண்கிறார்கள் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. அமெரிக்க ஆதரவு இருப்பது மட்டுமே சியோனிசம் தலைதூக்க ஒற்றை காரணம். சியோனிச ஆக்கிரமிப்பு வேரோடு பிடுங்கப்படும். அதற்கு வேர்கள் இள்லை, அது போலியான ஒன்று," என்று தெரிவித்தார்.

    • 1948 உருவான இஸ்ரேலை நாடாக அங்கீகரித்த 2 வது இஸ்லாமிய தேசமும் ஈரான்தான்.
    • 1980 இல் ஈராக்குக்கு எதிரான போரின்போது அமெரிக்கா சார்பில் இஸ்ரேல் ஈரானுக்கு ஆயுதங்களை வழங்கிவந்தது.

    இரு துருவங்கள் 

    பாலஸ்தீனம் மற்றும் லெபனான் தாக்குதல்களுக்குப் பதிலடி கொடுக்கும் விதமாக இஸ்ரேல் மீது ஈரான் 180 ஏவுகணைகள் மூலம் கடந்த செவ்வாய்க்கிழமை தாக்குதல் நடத்தியது. இதனால் மத்திய கிழக்கில் போர் மூளும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

    இன்று எதிரெதிர் துருவங்களாக உள்ள ஈரானும் இஸ்ரேலும் கடந்த காலங்களில் கைகோர்த்து செயல்பட்டிருக்கின்றன. தங்கள் இருவருக்கும் பொதுவான எதிரியாக இருக்கும் ஈராக் நாட்டை எதிர்கொள்ள 1960 களில் இஸ்ரேல் மற்றும் ஈரான் நட்புறவுடன் ஒன்றிணைத்துச் செயல்பட்ட வரலாறும் உண்டு.

    எதிரி ஈராக் 

    1948 உருவான இஸ்ரேலை நாடாக அங்கீகரித்த 2 வது இஸ்லாமிய தேசமும் ஈரான்தான். முதலாவதாகத் துருக்கி இஸ்ரேலை அங்கீகரித்திருந்தது. 1950 களில் தெற்காசியாவிலே அதிக யூதர்கள் வசிக்கும் நாடாகவும் ஈரான் இருந்தது. மற்றைய இஸ்லாமிய நாடுகளுடன் கிடைக்காத உறவு ஈரானுடன் கிடைத்ததால் அதன் எண்ணெய் வளங்களை இஸ்ரேல் அதிகம் சார்ந்திருந்தது. ஈராக்கின் இஸ்லாமிய அடிப்படைவாத அரசை அச்சுறுத்தலாக இஸ்ரேல் பார்த்து வந்த நிலையில் ஷா முகமது ரெசா பஃலவி [Shah Mohammad Reza Pahlavi] தலைமையிலான ஈரான் ஈராக்கின் பகுதிகள் மீது கண் வைத்திருந்தது.

    எனவே ஈரான், ஈராக், அமெரிக்கா ஆகிய மூன்று நாடு உளவு அமைப்புகளும் இணைந்து ஈராக் நாட்டினுள் அந்நாட்டினால் ஒடுக்கப்பட்ட குர்திய இனத்தை சேர்ந்த கிளர்ச்சியாளர்களை ஊடுருவச் செய்தது. இஸ்ரேலின் மொஸாட் உளவு அமைப்பும், ஈரானின்  சவாக் [SAVAK]  உளவு அமைப்பும் ரகசிய பரிமாறிக்கொண்டன.

     

     புரட்சி 

    தொடர்ந்து ராணுவ ரீதியாகவும் வர்த்தக ரீதியாகவும் இஸ்ரேல் ஈரான் உறவு தொடர்ந்த நிலையில் 1979 இல் ஈரானில் ஏற்பட்ட இஸ்லாமிய புரட்சியால் பஃலவியின் ஆட்சி தூக்கியெறியப்பட்டு அயத்துல்லா காமெனி அதிகாரத்துக்கு வந்தார்.

    இதன்பின்னர் இஸ்லாமிய கட்டுப்பாடுகளால் ஈரான் தலைகீழாக மாறியது. ஆனாலும் 1980 இல் ஈராக்குக்கு எதிரான போரின்போது அமெரிக்கா சார்பில் இஸ்ரேல் ஈரானுக்கு ஆயுதங்களை வழங்கிவந்தது.

    குட்டிச் சாத்தான் 

    அனால் 1990 தொடங்கிய கல்ஃப் யுத்தத்தின் பின்னர் பின்னர் ஈராக் பிரச்சனை சற்று சுமூகமான பின்னர் பால்ஸ்தீன விவகாரம் உள்ளிட்டவற்றால் ஈரான் இஸ்ரேலை எதிரியாக பாவிக்கத் தொடங்கியது. இஸ்ரேல் குட்டிச் சாத்தான் என்றும் அமெரிக்கா பெரிய சாத்தான் என்று வர்ணிக்கும் அளவுக்கு மேற்கு நாடுகளுடனான ஈரானின் பகைமை வளர்ந்தது.

    • அணு ஆயுத திட்டம் குறித்த விவரங்களை சேகரிக்கவே இந்த முயற்சி.
    • மொசாட் உளவாளிகள் ரகசிய ஆவணங்களை எடுத்துச் சென்றனர்.

    ஈரான் புலனாய்வு அமைப்புகளில் வெளிநாட்டு உளவாளிகள் ஊடுருவியதாக ஈரான் முன்னாள் அதிபர் மகமுத் அகமதிநெஜத் குற்றம்சாட்டியுள்ளார். இது தொடர்பான நேர்காணலில் அவர், "ஈரான் ரகசிய அமைப்பின் தலைவர் உண்மையில் இஸ்ரேலின் தேசிய புலனாய்வு முகமையான மொசாட்-இன் ரகசிய உளவாளி," என்று தெரிவித்தார்.

    இஸ்ரேல் நடவடிக்கைகளை உளவு பார்க்க நிமயகமிக்கப்பட்ட ஈரான் பாதுகாப்பு அமைப்பின் தலைவரை மொசாட் பயன்படுத்திக் கொண்டது என்று ஈரான் முன்னாள் அதிபர் மகமுத் தெரிவித்தார். இதன் மூலம் ஈரானை சேர்ந்த கிட்டத்தட்ட 20 உளவாளிகள் இஸ்ரேலுக்கு மிக முக்கிய தகவல்களை வழங்கியுள்ளனர். ஈரானின் அணு ஆயுத திட்டம் குறித்த விவரங்களை சேகரிக்கவே இந்த முயற்சி மேற்கொள்ளப்பட்டது என்று அவர் குற்றம்சாட்டியுள்ளார்.

    ஈரானை இஸ்ரேல் உளவு பார்ப்பதாக குற்றச்சாட்டு எழுந்திருப்பது முதல் முறையில்லை. முன்னதாக 2018 ஆம் ஆண்டு இஸ்ரேல் பிதமர் பெஞ்சமின் நேதன்யாகு ஈரானின் மிக முக்கிய அணு ஆயுத திட்டம் குறித்த விவரங்களை இஸ்ரேல் உளவாளிகள் சேகரித்ததாக பகிரங்க குற்றச்சாட்டை முன்வைத்தார்.

    இது தொடர்பாக அவர் வெளியிட்ட ஆவணங்களில், மொசாட் உளவாளிகள் தெஹ்ரானி வேர்ஹவுசுக்குள் நுழைந்து கிட்டத்தட்ட 1 லட்சத்திற்கும் அதிகமான ரகசிய ஆவணங்களை எடுத்துச் சென்றனர். இந்த நடவடிக்கையில், கிட்டத்தட்ட 20-க்கும் மேற்பட்ட உளவாளிகள் சுமார் ஆறு மணி நேரம் ஈடுபட்டனர் என்று கூறப்பட்டது. இந்த ஆவணங்களால் ஈரானின் அணு ஆயுத திட்டம் உலக அரசியலில் புயலை கிளப்பியது. 

    • ஹிஸ்புல்லாவுடன் தொடர்பில் உள்ளோம் என்றும் ஈரான் தெரிவித்துள்ளது.
    • பெய்ரூட் தாக்குதலுக்கும் தங்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று அமெரிக்க நழுவியுள்ளது.

    பெய்ரூட் தாக்குதல் 

    லெபனான் நாட்டில் இயங்கி வரும் ஹிஸ்புல்லாஅமைப்பை குறிவைத்து இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதலில் பொதுமக்கள் உட்பட 700 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்,.118,000 மேற்பட்ட மக்கள் தங்களின் வீடுகளை விட்டு இடம்பெயர்ந்துள்ளனர். இந்த தாக்குதல்களுக்கு ஈரான் அரசு கடும் கண்டனம் தெரிவித்தது. மேலும் போர் நிறுத்தத்துக்கு அமெரிக்கா அழைப்பு விடுத்ததை நிராகரித்து நேற்றைய தினம் தலைநகர் பெய்ரூட்டின் தெற்கு பகுதியில் உள்ள ஹிஸ்புல்லா தலைமையகம் உட்பட மக்கள் வசிக்கும் குடியிருப்பு கட்டடங்கள் மீது இஸ்ரேல் வான்வழித் தாக்குதலை நடத்தியது. இந்த தாக்குதல் ஹிஸ்புல்லா தலைவர் ஹசன் நஸ்ரல்லாவின் மகள் ஜைனப் உயிரிழந்தாக தகவல்கள் வெளியாகின. 

    அயத்துல்லா காமேனி

    மேலும் நேற்று இரவு முதல் நஸ்ரல்லா காணாமல் போன நிலையில் தங்களின் தாக்குதலில் நஸ்ரல்லா உயிரிழந்துவிட்டதாக இஸ்ரேல் ராணுவம் அறிவித்துள்ளது. ஆனால் ஹிஸ்புல்லா தரப்பில் இதுவரை எந்த தகவலும் தெரிவிக்கப்படாமல் இருக்கும் நிலையில் ஈரான் மதத் தலைவர் அயத்துல்லா காமேனியை பாதுகாப்பான இடத்துக்கு ஈரான் அரசு மாற்றியுள்ளது. ஈரானில் பெயர் குறிப்பிடப்படாத அதிக பாதுகாப்புள்ள இடத்துக்கு காமேனி மாற்றப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

     

    ஈரான் 

    மேலும் ஹிஸ்புல்லாவுடன் தொடர்ந்து தொடர்பில் உள்ளோம் என்றும் ஈரான் தெரிவித்துள்ளது. அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து கலந்தாலோசித்து வருவதாகவும் ஈரான் தெரிவித்துள்ளது. இதற்கிடையே ஹிஸ்புல்லா தலைவர் ஹசன் நஸ்ரல்லாவின் மரணதோடு தங்களின் தாக்குதலை முடித்துக் கொள்ளப்போவதில்லை என்று இஸ்ரேல் ராணுவ தளபதி தெரிவித்துள்ளார். ஹிஸ்புல்லாவுக்கு மறக்க முடியாத பாடத்தை கற்றுக்கொடுக்காமல் தாங்கள் பின்வாங்கப்போவதில்லை என்று அவர் தெரிவித்துள்ளார்.

     

    இஸ்ரேல் பதற்றம் 

    ஹிஸ்புல்லா தலைமையகம் மீதும் நஸ்ரல்லாவின் மீதுதான் இந்த தாக்குதல் பல நாட்களாக திட்டமிடப்பட்டதாகவும், சரியான நேரத்திற்காகக் காத்திருந்து தற்போது தாக்குதல் நடத்தியாகவும் இஸ்ரேலிய ராணுவம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே தலைவர் கொல்லப்பட்டதால் எந்நேரமும் இஸ்ரேல் பெரிய அளவிலான தாக்குதலை ஹிஸ்புல்லா நடத்தலாம் என்பதால் மொத்த இஸ்ரேளிலும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு ஹை அலெர்ட் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. இதற்கிடையே இஸ்ரேலின் பெய்ரூட் தாக்குதலுக்கும் தங்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று அமெரிக்க நழுவியுள்ளது. 

    • ஹிஸ்புல்லா மீது முழு சக்தியுடன் தாக்குதல் தொடரும் என நேதன்யாகு அறிவிப்பு.
    • ஹிஸ்புல்லாவின் இரண்டு முக்கிய கமாண்டர்களை இஸ்ரேல் வான் தாக்குதல் மூலம் கொலை செய்துள்ளது.

    இஸ்ரேல் ராணுவம் ஹமாஸ் அமைப்பினரை குறிவைத்து காசா மீது தாக்குதல் நடத்தினர். காசா மீது தாக்குதல் நடத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து இஸ்ரேல் வடக்குப் பகுதியில் உள்ள லெபனானில் இயங்கி வரும் ஹிஸ்புல்லா அமைப்பினர் இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தியது.

    அதனால் இஸ்ரேல் வடக்குப்பகுதியில் உள்ள ஆயிரக்கணக்கான மக்கள் தங்களது வீடுகளில் இருந்து வெளியேறியுள்ளனர்.

    இந்த நிலையில்தான் கடந்த சில நாட்களுக்கு முன்னதாக வடக்குப் பகுதியில் இருந்து வெளியேறிய மக்களை மீண்டும் அதே இடத்தில் பாதுகாப்பாக குடிமயர்த்துவதுதான் இலக்கு என இஸ்ரேல் தெரிவித்தது.

    அந்த அறிவிப்பு வெளியான அடுத்தடுத்த நாளில் ஹிஸ்புல்லா பயன்படுத்தி வந்த பேஜர்கள், வாக்கி டாக்கிகள் வெடித்து சிதறின. அதன்பிறகு ஹிஸ்புல்லா இஸ்ரேல் மீது ஏவுகணை வீசி தாக்குதல் நடத்தியது. இஸ்ரேலும் பதிலடி கொடுத்து வருகிறது.

    ஹிஸ்புல்லா அமைப்பின் இரண்டு முக்கிய கமாண்டர்களை இஸ்ரேல் தாக்கி கொன்றுள்ளது. மூன்று நாட்களாக பரஸ்பர தாக்குதலில் ஈடுபட்டு வரும் நிலையில் ஹிஸ்புல்லா அமைப்பினர் இஸ்ரேலுக்கு எதிராக தாக்குதல் நடத்துமாறு ஈரானை வலியுறுத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

    ஆனால், தற்போது அதற்கான நேரம் இல்லை என இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்த ஈரான் மறுத்து விட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

    ஹமாஸ் அமைப்பின் அரசியல் தலைவர் இஸ்மாயில் ஹனியே ஈரான் மண்ணில் கொல்லப்பட்டபோது, இஸ்ரேலுக்கு தக்க பதிலடி கொடுக்கப்படும் என ஈரான் சூளுரைத்திருந்தது. கொலை செய்யப்பட்ட ஓரிரு நாளில் இஸ்ரேல் மீது 350-க்கும் மேற்பட்ட ஏவுகணைகள் மூலம் தாக்குதல் நடத்தியது. அதன்பின் பெரிய அளவில் தாக்குதல் நடத்தவில்லை.

    இஸ்ரேல் பாதுகாப்புப்படை, ஹிஸ்புல்லா உடனான மோதல் இணையும் வகையிலான எந்தவித காரணத்தையும் ஈரானுக்கு கொடுத்துவிட வேண்டாம் எனக் கூறியதாக இஸ்ரேலின் மூத்த அதிகாரிகள் ஒருவர் தெரிவித்துள்ளார்.

    • ஈரான் முன்னாள் அதிபர் இப்ராகிம் ரெய்சி கடந்த மே மாதம் ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கி உயிரிழந்தார்.
    • மோசமான வானிலையால் விபத்து நிகழ்ந்தது என அந்நாட்டு வெளியுறவுத்துறை தெரிவித்தது.

    டெஹ்ரான்:

    மறைந்த ஈரான் அதிபர் இப்ராகிம் ரெய்சி கடந்த மே மாதம் ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கி உயிரிழந்தார். அவருடன் வெளியுறவு மந்திரி உசைன் அமீர் அப்துல்லாயன் உள்ளிட்ட பலர் உயிரிழந்தனர். கடும் பனி சூழ்ந்த வானிலை காரணமாக விபத்து நிகழ்ந்தது என அந்நாட்டு வெளியுறவுத்துறை தெரிவித்தது.

    இதற்கிடையே, லெபனானில் கடந்த வாரம் பேஜர் மற்றும் வாக்கி டாக்கி கருவிகளால் ஏற்பட்ட வெடிப்பு சம்பவங்களில் சுமார் 40 பேர் பலியாகினர். 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    இந்நிலையில், ஈரான் முன்னாள் அதிபரான இப்ராகிம் ரெய்சியும் பேஜர் ஒன்றை பயன்படுத்தி வந்துள்ளார் என அந்நாட்டு எம்.பி.யான அகமது பக்ஷயேஷ் அர்தேஸ்தானி தெரிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக அகமது கூறுகையில், ஈரான் அதிபர் இப்ராகிம் ரைசி ஒரு பேஜரை பயன்படுத்தினார். அவர் பயன்படுத்திய பேஜரின் வகை ஹிஸ்புல்லா படைகளிடம் இருந்து வேறுபட்டதாக இருக்கலாம். இருப்பினும், ஹெலிகாப்டர் விபத்து தொடர்பான சாத்தியமான காட்சிகளில் ஒன்று அவரது பேஜர் வெடித்திருக்கலாம். பேஜர்களை வாங்குவதில் ஈரான் பங்கு வகித்துள்ளது. ஈரானியப் படைகள் நிச்சயமாக ஹிஸ்புல்லாக்கள் பேஜர்களை வாங்குவதில் ஒரு பங்கைக் கொண்டிருந்தது. எனவே, எங்கள் சொந்த புலனாய்வு அமைப்புகளும் இந்த விஷயத்தை விசாரிக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.

    ×