என் மலர்
நேபாளம்
- நேபாளத்தின் பிரதமராக நான்காவது முறையாக கே.பி.சர்மா ஒலி பதவியேற்றார்.
- பிரதிநிதிகள் சபையில் 30 நாளுக்குள் நேபாள பிரதமர் பெரும்பான்மையை நிரூபித்துள்ளார்.
காத்மண்டு:
நேபாளத்தில் கடந்த 2022-ம் ஆண்டு நவம்பரில் நடந்த பாராளுமன்ற தேர்தலில் ஆட்சி அமைப்பதற்கான பெரும்பான்மையை எந்தக் கட்சியும் பெறவில்லை. இதனால் சி.பி.என். மாவோயிஸ்டு கட்சி தலைவர் புஷ்ப கமல் தஹல் என்கிற பிரசந்தா, முன்னாள் பிரதமர் கே.பி.சர்மா ஒலியின் நேபாள கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட 4 கட்சிகளுடன் கூட்டணி அமைத்து 3-வது முறையாக பிரதமராக பதவியேற்றார்.
அதன்பின் கூட்டணி அரசுக்கான ஆதரவை நேபாள கம்யூனிஸ்ட் கட்சி திரும்பப் பெற்றதால், நேபாள காங்கிரசுடன் கூட்டணி அமைத்து பிரதமர் பதவியில் பிரசந்தா நீடித்தார். சில வாரங்களுக்கு முன் நேபாளத்தின் மிகப் பெரிய கட்சிகளான நேபாள காங்கிரஸ் மற்றும் சிபிஎன்-யுஎம்எல் இடையே கூட்டணி ஆட்சி அமைக்க உடன்பாடு ஏற்பட்டது. இவ்விரு கட்சிகளும் கூட்டணி அமைத்து புதிய அரசை அமைக்க ஒப்புக் கொண்டதால், பிரதமர் பிரசந்தா பாராளுமன்றத்தில் பெரும்பான்மையை இழந்தார்.
கடந்த வெள்ளிக்கிழமை நேபாள பிரதிநிதிகள் சபையில் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் பிரதமர் பிரசந்தா தோல்வி அடைந்தார். அவருக்கு ஆதரவாக 63 வாக்குகள் மட்டும் கிடைத்தன. எதிராக 194 வாக்குகள் பதிவாகின.
இதையடுத்து, நேபாளத்தின் புதிய பிரதமராக கே.பி. சர்மா ஒலி சமீபத்தில் பதவியேற்றார். நேபாள அரசியலமைப்பு விதியின்படி, பிரதிநிதிகள் சபையில் 30 நாளுக்குள் பிரதமர் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும். தற்போது கூட்டணி அமைத்துள்ள நேபாளி காங்கிரஸ் கட்சியும், சிபிஎன்-யுஎம்எல் கட்சியும் 167 உறுப்பினர்களைக் கொண்டுள்ளதால் சர்மா ஒலி நம்பிக்கை வாக்கெடுப்பில் எளிதில் வெற்றி பெறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கிடையே, நேபாள பாராளுமன்றத்தில் பிரதமர் சர்மா ஒலி அரசு மீது ஜூலை 21-ம் தேதி நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில், நேபாள பிரதிநிதிகள் சபையில் இன்று நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் பிரதமர் சர்மா ஒலி வெற்றி பெற்றார். அவருக்கு ஆதரவாக 188 வாக்குகள் கிடைத்தன. எதிராக 74 வாக்குகள் பதிவாகின. மூன்றில் இரு பங்கு வாக்குகள் பெற்று அபார வெற்றி பெற்றார் சர்மா ஒலி.
- நேபாளத்தின் பிரதமராக நான்காவது முறையாக கே.பி. சர்மா ஒலி பதவியேற்றார்.
- பிரதிநிதிகள் சபையில் 30 நாளுக்குள் நேபாள பிரதமர் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும்.
காத்மண்டு:
நேபாளத்தில் கடந்த 2022-ம் ஆண்டு நவம்பரில் நடந்த பாராளுமன்ற தேர்தலில் ஆட்சி அமைப்பதற்கான பெரும்பான்மையை எந்தக் கட்சியும் பெறவில்லை. இதனால் சி.பி.என். மாவோயிஸ்டு கட்சி தலைவர் புஷ்ப கமல் தஹல் என்கிற பிரசந்தா, முன்னாள் பிரதமர் கே.பி.சர்மா ஒலியின் நேபாள கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட 4 கட்சிகளுடன் கூட்டணி அமைத்து 3-வது முறையாக பிரதமராக பதவியேற்றார்.
அதன்பின் கூட்டணி அரசுக்கான ஆதரவை நேபாள கம்யூனிஸ்ட் கட்சி திரும்பப் பெற்றதால், நேபாள காங்கிரசுடன் கூட்டணி அமைத்து பிரதமர் பதவியில் பிரசந்தா நீடித்தார்.
இதற்கிடையே, சில வாரங்களுக்கு முன் நேபாளத்தின் மிகப் பெரிய கட்சிகளான நேபாள காங்கிரஸ் மற்றும் சிபிஎன்-யுஎம்எல் இடையே கூட்டணி ஆட்சி அமைக்க உடன்பாடு ஏற்பட்டது. இவ்விரு கட்சிகளும் கூட்டணி அமைத்து புதிய அரசை அமைக்க ஒப்புக் கொண்டதால், பிரதமர் பிரசந்தா பாராளுமன்றத்தில் பெரும்பான்மையை இழந்தார்.
கடந்த வெள்ளிக்கிழமை நேபாள பிரதிநிதிகள் சபையில் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் பிரதமர் பிரசந்தா தோல்வி அடைந்தார். அவருக்கு ஆதரவாக 63 வாக்குகள் மட்டும் கிடைத்தன. எதிராக 194 வாக்குகள் பதிவாகின.
இதையடுத்து, நேபாளத்தின் புதிய பிரதமராக கே.பி. சர்மா ஒலி சமீபத்தில் பதவியேற்றார். நேபாள அரசியலமைப்பு விதியின்படி, பிரதிநிதிகள் சபையில் 30 நாளுக்குள் பிரதமர் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும். தற்போது கூட்டணி அமைத்துள்ள நேபாளி காங்கிரஸ் கட்சியும், சிபிஎன்-யுஎம்எல் கட்சியும் 167 உறுப்பினர்களைக் கொண்டுள்ளதால் சர்மா ஒலி நம்பிக்கை வாக்கெடுப்பில் எளிதில் வெற்றி பெறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், நேபாள பாராளுமன்றத்தில் பிரதமர் சர்மா ஒலி அரசு மீது ஜூலை 21-ம் தேதி நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
- கே.பி.சர்மா ஒலிக்கு நேபாள குடியரசுத் தலைவர் ராம் சந்திரா நாளை பதவிப் பிரமாணம் செய்து வைக்கிறார்.
- மூன்றாவது முறையாக நேபாளத்தின் பிரதமராக கே.பி.சர்மா ஒலி பதவியேற்கவுள்ளார்.
காத்மண்டு:
நேபாளத்தில் கடந்த 2022-ம் ஆண்டு நவம்பர் மாதம் நடந்த பாராளுமன்ற தேர்தலில் எந்தக் கட்சியாலும் ஆட்சி அமைப்பதற்கான பெரும்பான்மையை பெறமுடியாமல் போனது. இதனால் சி.பி.என். மாவோயிஸ்டு கட்சியின் தலைவர் புஷ்ப கமல் தஹல் என்கிற பிரசந்தா, முன்னாள் பிரதமர் கே.பி.சர்மா ஒலியின் நேபாள கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட 4 கட்சிகளுடன் கூட்டணி அமைத்து 3-வது முறையாக பிரதமராக பதவியேற்றார்.
அதன்பிறகு கூட்டணி அரசுக்கான ஆதரவை நேபாள கம்யூனிஸ்ட் கட்சி திரும்ப பெற்றதையடுத்து, நேபாள காங்கிரசுடன் கூட்டணி அமைத்து பிரதமர் பதவியில் நீடித்தார் பிரசந்தா.
தொடர்ந்து ஏற்பட்ட கூட்டணி மாற்றத்தால் பிரதமர் பிரசந்தா 4 முறை நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தி அதில் வெற்றி பெற்றார்.
இதற்கிடையே, நேபாளத்தில் ஜூலை 12-ம் தேதி ஐந்தாவது முறையாக நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த கோரி பிரதமர் பிரசந்தா பாராளுமன்ற செயலகத்திற்கு கடிதம் எழுதினார்.
இந்நிலையில், நேபாள பிரதிநிதிகள் சபையில் இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற்றது. இதில் பிரதமர் பிரசந்தா தோல்வி அடைந்தார். அவருக்கு ஆதரவாக 63 வாக்குகள் மட்டும் கிடைத்தன. அவருக்கு எதிராக 194 வாக்குகள் பதிவாகின.
இதனையடுத்து, நேபாள நாட்டின் புதிய பிரதமராக கே.பி.சர்மா ஒலி ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டுள்ளார். கே.பி.சர்மா ஒலிக்கு நேபாள குடியரசுத் தலைவர் ராம் சந்திரா நாளை 11 மணிக்கு பதவிப் பிரமாணம் செய்து வைக்கிறார்.
கே.பி.சர்மா ஒலி நேபாளத்தின் பிரதமராக 2015 அக்டோபர் 11, முதல் 2016 ஆகஸ்ட் 3, வரையிலும் பின்னர் 2018 பிப்ரவரி 5, முதல் 2021 ஜூலை 13, வரையிலும் பணியாற்றினார். இப்போது மூன்றாவது முறையாக நேபாளத்தின் பிரதமராக கே.பி.சர்மா ஒலி பதவியேற்கவுள்ளார்.
- நேபாளத்தில் 5-வது முறையாக நம்பிக்கை வாக்கெடுப்பு கோரினார் பிரதமர் பிரசந்தா.
- இந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் பிரசந்தா தோல்வி அடைந்தார்.
காத்மண்டு:
நேபாளத்தில் கடந்த 2022-ம் ஆண்டு நவம்பர் மாதம் நடந்த பாராளுமன்ற தேர்தலில் எந்தக் கட்சியாலும் ஆட்சி அமைப்பதற்கான பெரும்பான்மையை பெறமுடியாமல் போனது. இதனால் சி.பி.என். மாவோயிஸ்டு கட்சியின் தலைவர் புஷ்ப கமல் தஹல் என்கிற பிரசந்தா, முன்னாள் பிரதமர் கே.பி.சர்மா ஒலியின் நேபாள கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட 4 கட்சிகளுடன் கூட்டணி அமைத்து 3-வது முறையாக பிரதமராக பதவியேற்றார்.
அதன்பிறகு கூட்டணி அரசுக்கான ஆதரவை நேபாள கம்யூனிஸ்ட் கட்சி திரும்ப பெற்றதையடுத்து, நேபாள காங்கிரசுடன் கூட்டணி அமைத்து பிரதமர் பதவியில் நீடித்தார் பிரசந்தா.
தொடர்ந்து ஏற்பட்ட கூட்டணி மாற்றத்தால் பிரதமர் பிரசந்தா 4 முறை நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தி அதில் வெற்றி பெற்றார்.
இதற்கிடையே, நேபாளத்தில் ஜூலை 12-ம் தேதி ஐந்தாவது முறையாக நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த கோரி பிரதமர் பிரசந்தா பாராளுமன்ற செயலகத்திற்கு கடிதம் எழுதினார்.
இந்நிலையில், நேபாள பிரதிநிதிகள் சபையில் இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற்றது. இதில் பிரதமர் பிரசந்தா தோல்வி அடைந்தார். அவருக்கு ஆதரவாக 63 வாக்குகள் மட்டும் கிடைத்தன. அவருக்கு எதிராக 194 வாக்குகள் பதிவாகின.
இதைத்தொடர்ந்து, நேபாள காங்கிரஸ் சார்பில் அமையும் புதிய கூட்டணி அரசில் கே.பி.சர்மா ஒலி பிரதமராக பொறுப்பேற்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரசந்தா பிரதமரான பின் பாராளுமன்றத்தில் நடத்தப்படும் 5-வது நம்பிக்கை வாக்கெடுப்பு இது என்பது குறிப்பிடத்தக்கது.
- திரிசூலி ஆற்றில் 65 பயணிகளுடன் சென்ற இரண்டு பேருந்துகள் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டன.
- நதியில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடிவதால், இதுவரை யாரையும் கண்டுப்பிடிக்கப்படவில்லை.
நேபாளத்தில் பெய்து வரும் கனமழையால் ஏற்பட்ட நிலச்சரிவில் இரண்டு பேருந்துகள் ஆற்றில் கவிழந்து விபத்துக்குள்ளானது. இதில், 7 இந்தியர்கள் உள்பட 60க்கும் மேற்பட்டோர் மாயமாகியுள்ளனர்.
தலைநகர் காத்மாண்டுவில் இருந்து 100 கிலோமீட்டர் தொலைவில் உள்ள சிட்வான் மாவட்டத்தில் உள்ள நாராயண்காட்- மக்லிங் சாலையில் உள்ள சிமால்டால் பகுதியில் உள்ள திரிசூலி ஆற்றில் 65 பயணிகளுடன் சென்ற இரண்டு பேருந்துகள் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டன. இந்த விபத்து இன்று அதிகாலை 3.30 மணியளவில் ஏற்பட்டதாக தெரியவந்துள்ளது.
காத்மாண்டு நோக்கிச் செல்லும் ஏஞ்சல் பேருந்தில் 24 பேர் இருந்த நிலையில், நேபாளத் தலைநகரில் இருந்து கவுர் நோக்கிச் சென்று கொண்டிருந்த கணபதி டீலக்ஸில் 41 பேர் பயணம் செய்துள்ளனர்.
காணாமல் போன இந்தியர்கள் சந்தோஷ் தாக்கூர், சுரேந்திர சா, ஆதித் மியான், சுனில், ஷாநவாஜ் ஆலம் மற்றும் அன்சாரி என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
நதியில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடிவதால், இதுவரை யாரையும் கண்டுப்பிடிக்கப்படவில்லை என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.
இதற்கிடையே, கணபதி டீலக்ஸ் பேருந்தில் இருந்த 3 பயணிகள் வாகனத்தில் இருந்து குதித்து தப்பியதாக கூறப்படுகிறது.
நேபாள பிரதமர் புஷ்ப கமல் தஹால் 'பிரசந்தா' விபத்து குறித்து வருத்தம் தெரிவித்ததோடு, உடனடி தேடுதல் மற்றும் மீட்பு நடவடிக்கைகளுக்கான உத்தரவுகளை வழங்கினார்.
- தெற்காசியா முழுவதும் ஒவ்வொரு ஆண்டும் இறப்பு மற்றும் அழிவைக் கொண்டு வருகிறது.
- அபாயகரமான வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
நேபாளத்தில் பெய்து வரும் கனமழையால் ஏற்பட்ட திடீர் வெள்ளம் மற்றும் நிலச்சரிவு காரணமாக நாடு முழுவதும் 14 பேர் உயிரிழந்துள்ளனர்.
காணாமல் போன 9 பேரை பேரிடர் குழுக்கள் தேடி வருவதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
அண்டை நாடான இந்தியாவிலும், பங்களாதேஷின் கீழ்பகுதியிலும் ஏற்பட்ட வெள்ளம் பரவலான சேதத்தை ஏற்படுத்தியுள்ளது. இது மில்லியன் கணக்கான மக்களை பாதித்துள்ளது.
இதுகுறித்து நேபாள காவல்துறை செய்தித் தொடர்பாளர் கூறுகையில்," காணாமல் போனவர்களைக் கண்டுபிடிக்க காவல்துறை மற்ற அமைப்புகள் மற்றும் உள்ளூர்வாசிகளுடன் இணைந்து பணியாற்றி வருகிறது" என்றார்.
ஜூன் முதல் செப்டம்பர் மாதம் வரையிலான பருவமழை தெற்காசியா முழுவதும் ஒவ்வொரு ஆண்டும் இறப்பு மற்றும் அழிவைக் கொண்டு வருகிறது. அதேபோல், சமீபத்திய ஆண்டுகளில் அபாயகரமான வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
நேபாளத்தின் சில பகுதிகளில் கடந்த வியாழன் முதல் பலத்த மழை பெய்து வருகிறது. இமயமலை தேசத்தில் பேரழிவு அதிகாரிகள் பல நதிகளில் திடீர் வெள்ளம் ஏற்படும் என்று எச்சரித்துள்ளனர்.
கடந்த மாதம் நேபாளத்தில் நிலச்சரிவு, மின்னல் மற்றும் வெள்ளம் காரணமாக ஏற்பட்ட பயங்கர புயல்களில் சிக்கி 14 பேர் உயிரிழந்தனர்.
இந்தியாவில், வடகிழக்கு மாநிலமான அசாமில் வெள்ளம் சூழ்ந்துள்ளது, கடந்த 24 மணி நேரத்தில் 6 பேர் உயிரிழந்துள்ளனர் என்று அசாமின் பேரிடர் மேலாண்மை ஆணையம் நேற்று தெரிவித்துள்ளது.
- நேபாளத்தில் ஐந்தாவது முறையாக நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த கோரினார் பிரதமர் பிரசந்தா.
- பிரதமர் ஆனபிறகு பாராளுமன்றத்தில் நடத்தப்படும் 5-வது நம்பிக்கை வாக்கெடுப்பு இதுவாகும்.
காத்மாண்டு:
நேபாளத்தில் கடந்த 2022-ம் ஆண்டு நவம்பர் மாதம் நடந்த பாராளுமன்ற தேர்தலில் எந்தக் கட்சியாலும் ஆட்சி அமைப்பதற்கான பெரும்பான்மையை பெறமுடியாமல் போனது. இதனால், சி.பி.என். மாவோயிஸ்டு கட்சியின் தலைவர் புஷ்ப கமல் தஹல் என்கிற பிரசந்தா, முன்னாள் பிரதமர் கே.பி.சர்மா ஒலியின் நேபாள கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட 4 கட்சிகளுடன் கூட்டணி அமைத்து 3-வது முறையாக பிரதமராக பதவியேற்றார்.
அதன்பிறகு கூட்டணி அரசுக்கான ஆதரவை நேபாள கம்யூனிஸ்ட் கட்சி திரும்ப பெற்றதையடுத்து நேபாள காங்கிரசுடன் கூட்டணி அமைத்து பிரதமர் பதவியில் நீடித்தார் பிரசந்தா.
இதற்கிடையே, நேபாளத்தில் மீண்டும் கூட்டணி மாற்றம் ஏற்பட்டது. நேபாள காங்கிரசுடனான கூட்டணியை முறித்த பிரசந்தா, மீண்டும் சர்மா ஒலி தலைமையிலான நேபாள கம்யூனிஸ்ட் கட்சியுடன் கூட்டணி அமைத்திருக்கிறார். கடந்த மார்ச் மாதம் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் பிரதமர் பிரசந்தா வெற்றி பெற்றார்.
நேபாளத்தில் உள்ள உபேந்திர யாதவ் தலைமையிலான ஜனதா சமாஜ்வாடி கட்சியில் ஏற்பட்ட பிளவுக்குப் பிறகு மே 13 அன்று பிரதமருக்கான ஆதரவை வாபஸ் பெற்றது.
இதற்கிடையே, நேபாளத்தில் 4-வது முறையாக கடந்த மே மாதம் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் பிரதமர் பிரசந்தா வெற்றி பெற்றார்.
இந்நிலையில், நேபாளத்தில் ஐந்தாவது முறையாக நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த உள்ளார் பிரதமர் பிரசந்தா. ஜூலை 12 அன்று பிரதிநிதிகள் சபையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்துமாறு பாராளுமன்ற செயலகத்திற்கு கடிதம் எழுதியுள்ளார்.
பிரசந்தா பிரதமர் ஆனபிறகு பாராளுமன்றத்தில் நடத்தப்படும் 5-வது நம்பிக்கை வாக்கெடுப்பு இதுவாகும் என்பது குறிப்பிடத்தக்கது.
- நேபாள பிரதமராக இருக்கும் புஷ்பா கமல் தாஹல் பிரசந்தாவுக்கு ஒலி ஆதரவு வழங்க மறுப்பு.
- நேபாள காங்கிரஸ் கட்சியுடன் சேர்ந்து கூட்டணி ஆட்சி அமைக்க ஒப்பந்தம்.
நேபாள பிரதமராக இருக்கும் புஷ்பா கமல் தாஹல் பிரசந்தாவின் பதவிக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது. நேபாள காங்கிரஸ் கட்சியும், சிபிஎன்- யுஎம்எல் கட்சியும் தற்போது புதிய கூட்டணி ஆட்சி அமைக்க தீர்மானித்துள்ளதுதான் இதற்கு காரணம்.
நேபாள காங்கிரஸ் கட்சித் தலைவர் ஷெர் பகதூர் தெயுபா கம்யூனிஸ்ட் கட்சியான நேபாளம் ஒருங்கிணைந்த மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் (CPN-UML) கட்சியுடன் ஒருங்கிணைந்து தேசிய ஒருமித்த அரசாங்கம் அமைப்பதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளார்.
இதனால் பிரசண்டா ஆட்சி கவிழும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் பிரதமர் பதவியை ராஜினாமா செய்யமாட்டேன். நாடாளுமன்றத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பு கோருவேன் எனத் தெரிவித்துள்ளார்.
நேபாள காங்கிரஸ் கட்சி பாராளுமன்றத்தில் 89 இடங்களும் பெரிய கட்சியாக விளங்குகிறது CPN-UML-க்கு 78 இடங்கள் உள்ளன. மெஜாரிட்டிக்கு 138 இடங்கள் தேவை. ஆனால் இரண்டு கட்சிகளுக்கும் 167 இடங்கள் உள்ளன.
தெயுமா (78 இடங்கள்), ஒலி (72) ஆகியோர் பிரதமர் பதவியை பகிர்ந்து கொள்வதாக முதலில் தெரிவித்தனர். பிரதமர் பிரசண்டா மற்றும் CPN-UML தலைவர் ஒலிக்கும் இடையில் தற்போது நடைபெற்று வரும் கூட்டணி ஆட்சியை தக்கவைத்துக் கொள்வதில் தோல்வி ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பிரதமர் பிரசண்டாவின் கம்யூனிஸ்ட் கட்சி (Maoist Centre) செயலாளர் கணேஷ் ஷா இதுகுறித்து கூறுகையில் "கூட்டணி ஆட்சியை கவிழ்த்து, நாட்டில் நிலையற்ற தன்மையை உருவாக்க சதி செய்யப்படுகிறது. அரசு ஊழலுக்கு முடிவு கட்டி, நல்லாட்சியை அறிமுகப்படுத்தியபோது இந்த சதி நடைபெற்றுள்ளது" என்றார்.
பிரசண்டா தனது ஒன்றரை ஆண்டு பதவி காலத்தின்போது பாராளுமன்றத்தில் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் 3 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
நேபாளம் பாராளுமன்ற அரசியலமைப்பின்படி, பிரதமர் நம்பிக்கை வாக்கெடுப்பு கோர 30 நாட்கள் வரை கேட்க முடியும். இதனால் பிரசண்டாவிற்கு அரசியல் சூழ்சியை மேற்கொள்ள காலஅவகாசம் கிடைக்கும் என கூறப்படுகிறது.
- நேபாளத்தில் கனமழை பெய்து வருகிறது.
- இதனால் அங்கு நிலச்சரிவு ஏற்பட்டு வருகிறது.
காத்மண்டு:
நேபாள நாட்டில் பருவமழை தொடங்கியதில் இருந்து அங்கு கனமழை பெய்து வருகிறது. இதன் தொடர்ச்சியாக நிலச்சரிவுகளும் ஏற்பட்டு வருகின்றன. கனமழை மற்றும் மின்னல் தாக்குதலும் ஏற்பட்டு வருகிறது.
இந்நிலையில், கனமழை மற்றும் நிலச்சரிவுகளில் சிக்கி 9 பேர் பலியாகி உள்ளனர் என தகவல் தெரிவிக்கின்றது. இதில் 3 குழந்தைகளும் அடங்குவர். மேலும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் நிலச்சரிவில் பலியானது அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.
கனமழையால் ஏற்படும் நிலச்சரிவுகளால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை மற்றும் சுற்றுச்சூழலுக்கு பெரிய அளவில் பாதிப்பு ஏற்படுகிறது.
நேபாளத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 9 பேர் உயிரிழந்துள்ளனர் என்றும் பல லட்சம் பேர் பருவகாலத்தின்போது ஏற்படும் மழை தொடர்பான சம்பவங்களால் பாதிக்கப்படுகின்றனர் என தேசிய பேரிடர் மேலாண் கழகம் தெரிவித்துள்ளது.
- ராம் பகதூர் பாம்ஜான் ஒரு மரத்தின் கீழ் 10 மாதங்கள் தவம் இருந்தான் என்று சொல்லப்படுகிறது.
- அந்த சமயத்தில் அவர் உணவு, தண்ணீர், உறக்கம் என எதுவும் இல்லாமல் இருந்தார் என ஆயிரக்கணக்கான மக்கள் நம்புகின்றனர்.
2005 ஆம் ஆண்டு ராம் பகதூர் பாம்ஜான் என்ற சிறுவன் நேபாளத்தில் உள்ள அடர்த்தியான காடுகளில் உள்ள ஒரு மரத்தின் கீழ் 10 மாதங்கள் தவம் இருந்தான் என்றும் அந்த சமயத்தில் அந்த சிறுவன் உணவு, தண்ணீர், உறக்கம் என எதுவும் இல்லாமல் இருந்தான் என்று ஆயிரக்கணக்கான மக்கள் நம்புகின்றனர்.
இதன் காரணமாக அந்த சிறுவனை புத்தரின் மறு அவதாரம் என்று பெரும்பாலான மக்கள் நம்ம ஆரம்பித்தனர்.
இந்நிலையில் 33 வயதாகும் ராம் பகதூர் பாம்ஜான் மீது குழந்தைகளை பாலியல் ரீதியாக துன்புறுத்தியது தொடர்பாக பொக்சோ வழக்கு தொடரப்பட்டது. அந்த வழக்கில் அவர் குற்றவாளி என்று நேபாள நீதிமன்றம் தீர்ப்பு கொடுத்துள்ளது.
ஜூலை 1 ஆம் தேதி தண்டனை விவரங்கள் அறிவிக்கப்படும் என்று நீதிமன்றம் தெரிவித்துள்ளது. இக்குற்றத்திற்கு 14 ஆண்டுகள் சிறை தண்டனை கிடைக்கும் என்று கூறப்படுகிறது.
- 2019-ம் ஆண்டில் இருந்து மலையை சுத்தம் செய்தல் பிரசாரத்தை நேபாளம் மேற்கொண்டு வருகிறது
- ஏப்ரல் 11-ந்தேதியில் இருந்து மொத்தம் 55 நாட்களில் 11 டன் குப்பைகளை அகற்றியுள்ளது.
இமயமலையில் அமைந்து உள்ளது உலகின் மிகப்பெரிய சிகரமான எவரெஸ்ட். இந்த எவரெஸ்ட் சிகரம் 8848.86 மீட்டர் உயரம் கொண்டதாகும். நேபாளத்தில் இருந்து எவரெஸ்ட சிகரத்தில் ஏற உலகின் பல்வேறு இடங்களில் இருந்து சுற்றுலா பயணிகள் மற்றும் மலையேறும் வீரர்கள் வருகை தருவார்கள்.
இவர்கள் மலையேற உதவி செய்யும் ஷெர்பாக்களின் உதவியுடன் மலையேறுவார்கள். பலர் எவரெஸ்டின் உச்சிக்கு செல்ல முயன்று குளிர் தாங்க முடியாமல் உயிரிழப்பது உண்டு. அடிக்கடி பனிச்சரிவு ஏற்பட்டு உயிரிழப்பதும் உண்டு. சில நேரங்களில் உயிரிழந்தவர்களின் உடல்களை மீட்க முடியாது நிலையும் ஏற்படும். இவ்வாறு மீட்க முடியாதவர்களின் உடல்கள் அப்படியே கிடக்கும்.
மேலும், மலையேறும் நபர்களால் எவரெஸ்ட் சிகரத்தில் குப்பைகள் தேங்கும் நிலை ஏற்பட்டது. இதனால் கடந்த 2019-ம் ஆண்டு மலையை சுத்தம் செய்தல் பிரசாரத்தை (Mountain Cleaning Campaign) நேபாள அரசு மேற்கொண்டது.
ஆண்டுதோறும் இந்த பிரசாரத்தை மேற்கொண்டு வருகிறது. இந்த வருடம் கடந்த ஏப்ரல் மாதம் நேபாள நாட்டின் ராணுவ வீரர்கள் இந்த திட்டத்தை தொடங்கினர். 12 பேர் கொண்ட ராணுவ வீரர்கள் 18 பேர் கொண்ட மலையேற உதவி புரியும் குழுவுடன் பயணத்தை மேற்கொண்டது.
55 நாள் பயணத்தின் முடிவில் 11 டன் குப்பைகளை எவரெஸ்ட் சிகரத்தில் இருந்து அகற்றியுள்ளது. மேலும், ஐந்து மனித உடல்கள் மற்றும் ஒரு மண்டை ஓடு ஆகியவற்றையும் அகற்றியுள்ளது.
- ஓட்டல் அறையில் 17 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாக அவர்மீது புகார் எழுந்தது.
- தனக்கு வழங்கப்பட்ட தண்டனையை எதிர்த்து அந்நாட்டு ஐகோர்ட்டில் மேல் முறையீடு செய்தார்.
காத்மண்டு:
நேபாள கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் சந்தீப் லமிச்சேன் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாக குற்றம் சாட்டப்பட்டார். 2022-ம் ஆண்டு ஓட்டல் அறையில் 17 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாக அவர்மீது பாலியல் புகார் எழுந்தது
இந்த பாலியல் வன்கொடுமை வழக்கில் அவரை குற்றவாளியாக அறிவித்த காத்மண்டு நீதிமன்றம், அவருக்கு 8 ஆண்டு சிறைத் தண்டனை விதித்தது.
தனக்கு வழங்கப்பட்ட தண்டனையை எதிர்த்து அந்நாட்டு உயர்நீதிமன்றத்தில் சந்தீப் மேல்முறையீடு செய்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் சந்தீப் லமிச்சேனை விடுதலை செய்தது
எதிர்வரும் டி20 உலகக்கோப்பைக்கான நேபாள் அணி ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தாலும், மே 25 வரை அணியில் மாற்றம் செய்யலாம் என்பதால் சந்தீப் இடம்பெற வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதற்கிடையே, நேபாளத்தில் அமைந்துள்ள அமெரிக்க தூதரகம் சந்தீப் லமிச்சேனின் விசாவை நிறுத்தி வைத்தது. அமெரிக்க தூதரகத்தின் இந்த முடிவு ஏமாற்றம் அளிப்பதாக சந்தீப் லமிச்சேன் தெரிவித்தார்.
இந்நிலையில், நேபாள வீரர் சந்தீப் லமிச்சேனின் அமெரிக்க விசா விண்ணப்பம் 2-வது முறையாக நிராகரிக்கப்பட்டது. இதனால் டி20 உலகக் கோப்பையில் அவர் பங்கேற்க மாட்டார் என தெரிகிறது.