என் மலர்
உள்ளூர் செய்திகள்

புயல் எச்சரிக்கையால் அரசு ஊழியர்களின் மறியல் போராட்டம் ஒத்திவைப்பு
- புயல் எச்சரிக்கையால் அரசு ஊழியர்களின் மறியல் போராட்டம் ஒத்திவைக்கப்பட்டது.
- இதனால் மிக அதி கனமழை பெய்யுமென வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
கடலூர்:
தமிழ்நாடு அரசுப் பணியாளர் சங்கத்தின் சிறப்பு தலைவர் கு.பாலசுப்பிரமணியன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது. தமிழ்நாடு அரசுப் பணியாளர் சங்கத்தின் சார்பில், பழைய ஒய்வூதியத்திட்டத்தை அமல்படுத்த வேண்டுமென்ற 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் 9-ந் தேதியன்று, சென்னை, திருச்சி, சேலம், கடலூர், மதுரை ஆகிய இடங்களில் மறியல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது.
தற்போது தமிழகத்திற்கு புயல் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனால் மிக அதி கனமழை பெய்யுமென வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. ஆகவே, நாளை நடக்க இருந்த மறியல் போராட்டம் தள்ளி வைக்கப்படுகிறது. அதன்படி வரும் 14-ந் தேதி சென்னை, திருச்சி, சேலம், கடலூர் மதுரை ஆகிய இடங்களில்மறியல் போராட்டம் நடக்கும். இவ்வாறு அறிக்கையில் உள்ளது.
Next Story