என் மலர்
உள்ளூர் செய்திகள்

சிவகிரி, சங்கரன்கோவிலில் மது விற்ற 2 பேர் கைது
- மணிகண்டன் தனது வீட்டின் அருகே கேனில் மதுவை பதுக்கி வைத்து விற்பனை செய்து வந்தார்.
- போலீசார் செல்வராஜை கைது செய்து அவரிடம் இருந்து 11 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
சிவகிரி:
சிவகிரி அருகே உள்ள விஸ்வநாதபேரி தர்மாபுரியை சேர்ந்தவர் மணிகண்டன்(வயது 24). இவர் தனது வீட்டின் அருகே கேனில் மதுவை பதுக்கி வைத்து விற்பனை செய்து வந்தார். தகவல் அறிந்த சிவகிரி போலீசார் அங்கு விரைந்து சென்று அவரை கைது செய்தனர். அவரிடம் இருந்து மது, மோட்டார் சைக்கிள்களை பறிமுதல் செய்தார்.
சங்கரன்கோவில் அருகே உள்ள பந்தபுளி பிள்ளையார்கோவில் தெருவை சேர்ந்த செல்வராஜ்(63) என்பவர் மது விற்றுக்கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக ரோந்து சென்ற கரிவலம்வந்த நல்லூர் போலீசார் அவரை கைது செய்து, 11 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
Next Story