search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கே.கே.நகரில் நாளை மறுநாள் மின்தடை
    X

    கே.கே.நகரில் நாளை மறுநாள் மின்தடை

    கே.கே. நகரில் நாளை மறுநாள் பராமரிப்பு பணி நடைபெற உள்ளதால் காலை 9.45 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சாரம் வினியோகம் இருக்காது.
    திருச்சி:

    திருச்சி கே.சாத்தனூர் துணை மின் நிலையத்தில் வருகிற 7-ந்தேதி (சனிக்கிழமை) பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதையொட்டி கே.கே.நகர், இந்தியன் பேங்க் காலனி, எஸ்.எம்.இ.எஸ்.சி. காலனி, கிருஷ்ணமூர்த்தி நகர், சுந்தர் நகர், அய்யப்ப நகர், எல்.ஐ.சி. காலனி, பழனிநகர், முல்லைநகர், ஆர்.வி.எஸ். நகர், வயர்லெஸ் சாலை, செம்பட்டு பகுதி, குடித்தெரு, பாரதிநகர், காமராஜர் நகர், ஜே.கே.நகர், சந்தோஷ் நகர், ஆனந்த நகர், கே.சாத்தனூர், ஓலைïர், வடுகப்பட்டி, மன்னார்புரம் ஒரு பகுதி, காஜாநகர், சிம்கோ காலனி ஆகிய பகுதிகளில் 7-ந்தேதி காலை 9.45 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சாரம் வினியோகம் இருக்காது. 

    மேற்கண்ட தகவலை மின்சார வாரிய செயற்பொறியாளர் சிவலிங்கம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.
    Next Story
    ×