என் மலர்
செய்திகள்

X
தாம்பரம் காசநோய் ஆஸ்பத்திரி வளாகத்தில் கிடந்த மனித எலும்பு கூடு - போலீசார் விசாரணை
By
மாலை மலர்6 Sept 2018 3:40 PM IST (Updated: 6 Sept 2018 3:40 PM IST)

தாம்பரம் காசநோய் ஆஸ்பத்திரி வளாகத்தில் கிடந்த மனித எலும்பு கூடை கைப்பற்றிய போலீசார் சிகிச்சை பெற்ற நோயாளியா அல்லது கொலை செய்யப்பட்டு வீசப்பட்டாரா? என்று விசாரித்து வருகிறார்கள்.
தாம்பரம்:
தாம்பரம் சாணடோரியத்தில் காசநோய் அரசு ஆஸ்பத்திரி உள்ளது. 100 ஏக்கர் பரப்பளவில் உள்ள இந்த ஆஸ்பத்திரி வளாகத்தின் பின்புறம் செடி கொடிகள் படர்ந்து வனப்பகுதி போல் உள்ளது.
இந்த நிலையில் புதர் பகுதியில் இருந்து மனித எலும்புகளை நாய்கள் கவ்வி கொண்டு வந்தன. இதை பார்த்த நோயாளிகளின் உறவினர்கள் தாம்பரம் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர்.
போலீசார் அங்கு சென்று புதர் மண்டி இருந்த பகுதியில் சோதனை செய்தனர். அப்போது மனித எலும்பு கூடு ஒன்று கிடந்தது. அதை கைப்பற்றி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
எலும்பு கூடாக கிடந்தது ஆணா? பெண்ணா? என்பது தெரியவில்லை. ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்ற நோயாளி புதர் பகுதியில் இறந்து கிடந்தாரா? அல்லது கொலை செய்யப்பட்டு வீசப்பட்டாரா? என்று விசாரித்து வருகிறார்கள்.
தாம்பரம் சாணடோரியத்தில் காசநோய் அரசு ஆஸ்பத்திரி உள்ளது. 100 ஏக்கர் பரப்பளவில் உள்ள இந்த ஆஸ்பத்திரி வளாகத்தின் பின்புறம் செடி கொடிகள் படர்ந்து வனப்பகுதி போல் உள்ளது.
இந்த நிலையில் புதர் பகுதியில் இருந்து மனித எலும்புகளை நாய்கள் கவ்வி கொண்டு வந்தன. இதை பார்த்த நோயாளிகளின் உறவினர்கள் தாம்பரம் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர்.
போலீசார் அங்கு சென்று புதர் மண்டி இருந்த பகுதியில் சோதனை செய்தனர். அப்போது மனித எலும்பு கூடு ஒன்று கிடந்தது. அதை கைப்பற்றி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
எலும்பு கூடாக கிடந்தது ஆணா? பெண்ணா? என்பது தெரியவில்லை. ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்ற நோயாளி புதர் பகுதியில் இறந்து கிடந்தாரா? அல்லது கொலை செய்யப்பட்டு வீசப்பட்டாரா? என்று விசாரித்து வருகிறார்கள்.
Next Story
×
X