search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சாராயம் கடத்திய வழக்கில் 4 பேர் கைது
    X

    பறிமுதல் செய்யப்பட்ட சாராயம் மற்றும் கைது செய்யப்பட்டவர்கள்.

    சாராயம் கடத்திய வழக்கில் 4 பேர் கைது

    • திட்டச்சேரி போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
    • மோட்டார் சைக்கிளில் இருந்த மூட்டையில் 110 லிட்டர் சாராயம் பறிமுதல்.

    நாகப்பட்டினம்:

    திருமருகல் அருகே சேஷமூலை பகுதியில் திட்டச்சேரி போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.அப்போது அந்த வழியாக வேகமாக 1 மோட்டார் சைக்கிள் வந்தது.

    அந்த மோட்டார் சைக்கிளை சந்தேகத்தின்பேரில் மறித்து போலீசார் சோதனை நடத்தினர்.சோதனையில் மோட்டார் சைக்கிளில் இருந்த மூட்டையில் 110 லிட்டர் சாராயம் இருந்தது.

    இதை தொடர்ந்து மோட்டார் சைக்கிளில் வந்தவரிடம் விசாரணை நடத்தினர்.

    விசாரணையில் குடவாசல் பருத்தியூர் ரோட்டு தெருவை சேர்ந்த கலைச்செல்வன் (வயது 23), ரஞ்சித் (21) என்பதும், இவர்கள் காரைக்கால் பகுதியில் இருந்து சாராயத்தை மோட்டார் சைக்கிளில் குடவாசல் பகுதிக்கு கடத்தி சென்றதும் தெரிய வந்தது.

    இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து 2 பேரையும் கைது செய்து அவரிடம் இருந்து 110 லிட்டர் சாராயம், கடத்தலுக்கு பயன்படுத்திய மோட்டார் சைக்கிளையும் பறிமுதல் செய்தனர்.

    அதேபோல் உத்தூர் பகுதியில் திட்டச்சேரி போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டபோது மோட்டார் சைக்கிளில் 110 லிட்டர் சாராயம் கடத்திய சிக்கல் பனைமேடு காலனி தெருவை சேர்ந்த அஜித் (வயது 24) தனுஷ் (21) ஆகிய இருவரையும் கைது செய்து 110 லிட்டர் சாராயம் மற்றும் மோட்டார் சைக்கிளை பறிமுதல் செய்தனர்.

    Next Story
    ×