search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மண் கடத்திய 6 லாரிகள் பறிமுதல்
    X

    மண் கடத்திய 6 லாரிகள் பறிமுதல்

    • கேட்பாரற்று நின்ற 6 லாரிகளை சோதனை செய்தனர்.
    • அனுமதியின்றி மண் எடுத்து வந்தது தெரிய வந்தது.

    ஓசூர்,

    ஓசூர் டவுன் போலீசார் ஓசூர் - ராயக்கோட்டை சாலை ஒன்னல்வாடி அருகில் ரோந்து சென்றனர். அப்போது அந்த பகுதியில் கேட்பாரற்று நின்ற 6 லாரிகளை சோதனை செய்தனர். இதில் அனுமதியின்றி மண் எடுத்து வந்தது தெரிய வந்தது.

    இதையடுத்து 6 லாரிகள் மற்றும் மண் எடுக்க பயன்படுத்திய பொக்லைன் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    Next Story
    ×