என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
உள்ளூர் செய்திகள்
![பெட்ரோல் பங்க் ஊழியர் வீட்டில் 10 பவுன் செயின் கொள்ளை பெட்ரோல் பங்க் ஊழியர் வீட்டில் 10 பவுன் செயின் கொள்ளை](https://media.maalaimalar.com/h-upload/2023/01/12/1820808-1735536-2.webp)
X
பெட்ரோல் பங்க் ஊழியர் வீட்டில் 10 பவுன் செயின் கொள்ளை
By
மாலை மலர்12 Jan 2023 4:45 PM IST
![மாலை மலர் மாலை மலர்](/images/authorplaceholder.jpg?type=1&v=2)
- சம்பவத்தன்று கணவன்-மனைவி இரு வரும் வேலைக்கு சென்றனர்.
- புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து 10 பவுன் செயினை கொள்ளையடித்து சென்ற மர்மநபரை தேடி வருகிறார்கள்.
கோவை
கோவை மாவட்டம் அன்னூர் அருகே உள்ள அச்சம்பாளையத்தை சேர்ந்தவர் குணசேகர் (வயது 57). இவர் அந்த பகுதியில் உள்ள பெட்ரோல் பங்கில் வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி ஈஸ்வரி. கடந்த 8-ந் தேதி இவர் தனது 10 பவுன் செயினை கழுத்தில் அணிந்துகொண்டு தனது மகள் ஊருக்கு சென்று வந்தார்.பின்னர் செயினை கழற்றி பீரோவில் வைத்தார். சம்பவத்தன்று கணவன்-மனைவி இரு வரும் வேலைக்கு சென்றனர். அப்போது வீட்டிற்குள் நுழைந்த யாரோ மர்மநபர் பீரோவில் இருந்த 10 பவுன் செயினை கொள்ளையடித்து தப்பிச் சென்றனர். இது குறித்து குணசேகரன் அன்னூர் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து 10 பவுன் செயினை கொள்ளையடித்து சென்ற மர்மநபரை தேடி வருகிறார்கள்.
Next Story
×
X