search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    குன்னூர் அருகே ரேஷன்கடை கதவை உடைத்த கரடி
    X

    குன்னூர் அருகே ரேஷன்கடை கதவை உடைத்த கரடி

    • தெரு நாய்களை பார்த்ததும் ஓட்டம் பிடித்தது
    • அப்பகுதி பொது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

    குன்னூர்,

    நீலகிரி மாவட்டத்தில் தற்போது கிராம மற்றும் நகர பகுதிகளில், வனவிலங்குகளின் நடமாட்டம் அதிகளவில் காணப்படுகின்றன. இதில் உணவு தேடி கரடிகள் தினந்தோறும் வலம் வருவது வாடிக்கையாகி விட்டது.

    இந்நிலையில் குன்னூர் நகரப்பகுதியில் ரெயில் வேக்கு சொந்தமான ரேஷன் கடை ஒன்று உள்ளது. அங்கு அரிசி, சர்க்கரை போன்ற அத்தியாவசிய பொருட்கள் இருப்பு வைக்கப்பட்டு இருந்தன. இதன் அருகாமையில் குன்னூர் பஸ் நிலையம் மற்றும் மலை ரெயில் நிலையமும், அமைந்துள்ளது. இதனிடையே இரவு கரடி ஒன்று பூட்டி இருந்த ரேஷன் கடையின் கதவை உடைத்து உள்ளே செல்லமுயன்ற போது அங்கிருந்த தெரு நாய்கள் வரவே கரடி அங்கிருந்து ஓட்டம் பிடித்தது. இதனால் அங்கிருந்த உணவு பொருட்கள் வீணாகாமல் தப்பியது. இச்சம்பவம் நடந்த இடத்தை வனத்துறை அதிகாரிகள் வந்து ஆய்வு மேற்கொண்டனர். அதில் கரடி வந்து சென்ற காட்சிகள் அங்கிருந்த சிசிடிவி காமிராவில் பதிவாகியிருந்தது. குன்னூர் பஸ் நிலையம் பகுதியில் கரடி ஒன்று சர்வசாதாரணமாக வந்து சென்றது. அப்பகுதி பொது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    Next Story
    ×