என் மலர்
உள்ளூர் செய்திகள்

சங்கரன்கோவில் அருகே மர்ம காய்ச்சலுக்கு குழந்தை பலி
- 3 நாட்களாக குழந்தைக்கு வாந்தி, வயிற்றுப்போக்கு, காய்ச்சல் இருந்ததாக கூறப்படுகிறது.
- குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள் குழந்தை ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
சங்கரன்கோவில்:
சங்கரன்கோவில் அருகே உள்ள ஓடைக்கரைப்பட்டி வடக்குதெருவை சேர்ந்தவர் வீரபாண்டி (வயது29). இவருக்கு மதுஸ்ரீ என்ற 11 மாத பெண் குழந்தை இருந்துள்ளது. 3 நாட்களாக குழந்தைக்கு வாந்தி, வயிற்றுப்போக்கு, காய்ச்சல் இருந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து குழந்தையை அழைத்து கொண்டு வீரபாண்டி கழுகுமலை அரசு மருத்துவமனையில் மாத்திரை வாங்கி கொடுத்துள்ளார்.
சம்பவத்தன்று குழந்தை பேச்சு, மூச்சு இல்லாமல் இருக்கவே வீரபாண்டி குழந்தையை கழுகுமலை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளார்.அங்கு குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள் குழந்தை ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்து அய்யாபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து குழந்தையின் மரணத்திற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story