search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நாங்குநேரி அருகே வீடு புகுந்து தொழிலாளியை தாக்கிய கும்பல்
    X

    நாங்குநேரி அருகே வீடு புகுந்து தொழிலாளியை தாக்கிய கும்பல்

    • மாசானம் வெளிநாட்டில் பணி புரிந்து விட்டு, தற்போது ஊரில் கூலி தொழில் செய்து வருகிறார்.
    • கடந்த 2 நாட்களுக்கு முன்பும் மாசானம் அந்த பெண்ணுடன் பேசியதாக தெரிகிறது.

    களக்காடு:

    நாங்குநேரி அருகே உள்ள பட்டர்புரம் மெயின்ரோட்டை சேர்ந்தவர் சுடலையாண்டி மகன் மாசானம் (வயது 23). இவர் வெளிநாட்டில் பணி புரிந்து விட்டு, தற்போது ஊரில் கூலி தொழில் செய்து வருகிறார். கடந்த சில ஆண்டுகளுக்கு முன் இவர் வள்ளியூரில் உள்ள ஒரு பள்ளி யில் படித்த போது, அதே பள்ளியில் படித்த பட்டர்புரத்தை சேர்ந்த மாணவியிடம் பேசி பழகி வந்துள்ளார். இதனை அறிந்த அந்த மாணவி யின் தந்தை கண்டித்துள்ளார்.

    இந்நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பும் மாசானம் அந்த பெண்ணுடன் பேசியதாக தெரிகிறது. இதையடுத்து பெண்ணின் தந்தை, அவரது சகோதரர்கள் என 4 பேர் சேர்ந்து, மாசானத்தின் வீட்டிற்குள் புகுந்து, அவரை சரமாரியாக தாக்கி, கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இதுபற்றி அவர் நாங்குநேரி போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி 4 பேரை தேடி வருகின்றனர்.

    Next Story
    ×