search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தூய்மை பணியாளர்களுக்கு புத்தாடை வழங்கும் நிகழ்ச்சி
    X

    தூய்மை பணியாளர்களுக்கு புத்தாடை வழங்கும் நிகழ்ச்சி

    • முன்னாள் அமைச்சருமான பாலகிருஷ்ணரெட்டி தலைமை தாங்கி, கேக் வெட்டி அனைவருக்கும் வழங்கினார்.
    • ஓசூர் மாநகராட்சியில் பணிபுரியும் தூய்மை பணியாளர்களுக்கு புத்தாடைகள் மற்றும் ஆட்டோ ஓட்டுனர்களுக்கு சீருடைகளும் வழங்கினார்.

    ஓசூர்,

    கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட அ.தி.மு.க.சார்பில், கட்சியின் பொதுசெயலாளர் எடப்பாடி பழனிசாமியின் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.

    ஓசூர்-பாகலூர் ஹட்கோ பகுதியில் உள்ள மேற்கு மாவட்ட அலுவலகத்தில் நடந்த விழாவிற்கு, மேற்கு மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான பாலகிருஷ்ணரெட்டி தலைமை தாங்கி, கேக் வெட்டி அனைவருக்கும் வழங்கினார்.

    தொடர்ந்து, ஓசூர் மாநகராட்சியில் பணிபுரியும் தூய்மை பணியாளர்களுக்கு புத்தாடைகள் மற்றும் ஆட்டோ ஓட்டுனர்களுக்கு சீருடைகளும் வழங்கினார்.

    விழாவிற்கு பகுதி செயலாளர்கள் அசோகா, வாசுதேவன், மஞ்சுநாத், ராஜி மற்றும் மாவட்ட அண்ணா தொழிற்சங்க செயலாளர் சீனிவாசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.மாவட்ட துணை செயலாளர் மதன் வரவேற்றார். மேலும் இதில், மாவட்ட இளைஞர் பாசறை செயலாளர் ராமு, கூட்டுறவு வீட்டு வசதி சங்க தலைவர் நடராஜன், மாவட்ட எம்.ஜி.ஆர்.மன்ற தலைவர் சந்திரன், துணை செயலாளர் சாக்கப்பா, மாவட்ட சிறுபான்மை பிரிவு நிர்வாகிகள் சாச்சு, அரப்ஜான் மற்றும் மாவட்ட ,மாநகர, ஒன்றிய நிர்வாகிகள் கட்சியினர் திரளாக கலந்துகொண்டனர்.

    Next Story
    ×