search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள் (District)

    கோவையில் பீர் பாட்டிலால் கழுத்தை அறுத்துக் கொண்ட வாலிபர்
    X

    கோவையில் பீர் பாட்டிலால் கழுத்தை அறுத்துக் கொண்ட வாலிபர்

    • நாகராஜ் குடிபோதையில் சங்கனூர் ரோட்டில் நடந்து சென்று கொண்டிருந்தார்.
    • உயிருக்கு போராடிய நாகராஜை மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    கோவை,

    கோவை ரத்தினபுரி அருகே உள்ள பூந்தோட்டத்தை சேர்ந்தவர் நாகராஜ்(வயது45). வெல்டர்.

    இவர் இன்று காலை குடிபோதையில் சங்கனூர் ரோட்டில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது திடீரென நாகராஜ் அங்கு கடந்த பீர் பாட்டிலை உடைத்து தனக்குத்தானே தனது கழுத்தை அறுத்துக் கொண்டார்.

    இதனைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த அந்த வழியாக சென்றவர்கள் அவரை தடுக்க முயன்றனர். அதற்குள் நாகராஜ் ரத்த வெள்ளத்தில் மயங்கி கீழே விழுந்தார். உடனடியாக அங்கு இருந்தவர்கள் இதுகுறித்து துடியலூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

    உடனே போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று உயிருக்கு போராடிய நாகராஜ் மேட்டு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    அங்கு அவரை டாக்டர்கள் தீவிர சிகிச்சை பிரிவுகள் அனுமதித்து சிகிச்சை அளித்து வருகின்றனர் இது குறித்து துடியலூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். நடுரோட்டில் குடிபோதையில் பீர் பாட்டிலால் கழுத்தை அறுத்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.

    Next Story
    ×