search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சங்கரன்கோவிலில் சாப்பிட்டதற்கு பணம் கேட்டவர் மீது எண்ணை சட்டியை தள்ளி விட்ட வாலிபர்
    X

    சங்கரன்கோவிலில் சாப்பிட்டதற்கு பணம் கேட்டவர் மீது எண்ணை சட்டியை தள்ளி விட்ட வாலிபர்

    • பெருங்கோட்டுரைச் சேர்ந்த மாரிச்சாமி என்பவர் கடைக்கு வந்து சிக்கன் சாப்பிட்டு உள்ளார்.
    • எண்ணை கொதித்துக் கொண்டிருந்த சட்டியை சுப்பிரமணியன் மீது மாரிச்சாமி தள்ளி விட்டார்.

    சங்கரன்கோவில்:

    சங்கரன்கோவில் புது மனை பகுதியை சேர்ந்தவர் சுப்பிரமணியன். இவர் திருவேங்கடம் சாலை பகுதியில் சிக்கன் கடை நடத்தி வருகிறார்.

    சம்பவத்தன்று பெருங்கோட்டுரைச் சேர்ந்த மாரிச்சாமி என்பவர் கடைக்கு வந்து சிக்கன் சாப்பிட்டு உள்ளார். சாப்பிட்டதற்கு சுப்பிரமணியன் மாரி சாமியிடம் பணம் கேட்டுள் ளார்.

    ஆத்திரமடைந்த மாரிசாமி நான் யார் தெரியுமா என கேட்டு எண்ணை கொதித்துக் கொண்டிருந்த சிக்கன் சட்டியை சுப்பிரமணியன் மீது தள்ளி விட்டார். இதில் எண்ணை கொட்டி சுப்பிரமணியன் பலத்த காயமடைந்தார். மேலும் மாரிச்சாமி சுப்பிரமணியனுக்கு கொலை மிரட்டல் விடுத்து விட்டு சென்றதாக கூறப்படுகிறது.

    காயமடைந்த சுப்பிர மணியனை அருகில் இருந்தவர்கள் மீட்டு சங்கரன்கோவில் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இதுகுறித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த சங்கரன்கோவில் டவுன் போலீசார் மாரிச்சாமியை தேடி வருகின்றனர்.

    Next Story
    ×