search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கூடுதல் வெள்ள நிவாரண நிதி வழங்கக்கோரி அ.தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம்
    X

    உரிய நிவாரணம் வழங்க கோரி ஆர்ப்பாட்டம்.

    கூடுதல் வெள்ள நிவாரண நிதி வழங்கக்கோரி அ.தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம்

    • சீர்காழி தரங்கம்பாடி பகுதியில் பொதுமக்களுக்கு ரூபாய் 1000 வழங்கும் பணி நடைபெற்று வருகிறது.
    • வீடுகள் பாதிப்புகளுக்கு கூடுதல் நிவாரணம் வழங்க வலியுறுத்தியும் சீர்காழி வட்டாட்சியர் அலுவலகம் அ.தி.மு.க.வின் ஆர்ப்பாடத்தில் ஈடுப்பட்டனர்.

    சீர்காழி:

    மயிலாடுதுறைமாவ ட்டம் சீர்காழி, தரங்கம்பாடி, கொள்ளிடம் சுற்றுவட்டார பகுதிகளில் பெய்த அதீத கனமழை காரணமாக குடியிருப்புகள் மற்றும் விளைநிலங்கள் முற்றிலு மாக தண்ணீரில் மூழ்கி பாதிக்கப்பட்டது.

    கனமழையால் பாதிக்கப்ப ட்ட அனைவருக்கும் தலா ஆயிரம் ரூபாய் நிவாரணம் வழங்குவதாக தமிழக அரசு அறிவித்திருந்தது அதன்படி சீர்காழி தரங்கம்பாடி பகுதியில் பொதுமக்களுக்கு ரூபாய் 1000 வழங்கும் பணி நடைபெற்று வருகிறது.

    இந்நிலையில் ஆயிரம் ரூபாய் நிவாரணம் வழங்குவதை கண்டித்தும் கூடுதல் நிவாரணம் வழங்க வலியுறுத்தியும் பாதிக்க ப்பட்ட விளைநிலங்களுக்கு ஏக்கர் ஒன்றுக்கு 30,000 வழங்க கோரியும் கால்நடைகள் மற்றும் வீடுகள் பாதிப்புகளுக்கு கூடுதல் நிவாரணம் வழங்க வலியுறுத்தியும் சீர்காழி வட்டாட்சியர் அலுவலகம் அ.தி.மு.க.வின் ஆர்ப்பா டத்தில் ஈடுப்பட்டனர்.

    ஆர்ப்பாட்டத்திற்கு மயிலாடுதுறை மாவட்ட அதிமுக செயலாளர் பவுன்ராஜ் தலைமை தாங்கினார்.

    முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் பாரதி, ராதாகிருஷ்ணன், ஒன்றிய செயலாளர்கள் சந்திரசே கரன், ரவிச்சந்திரன், நற்குணன், சிவக்குமார், பேரூர் கழக செயலாளர் போகர்ரவி முன்னிலை வகித்தனர். நகர செயலாளர் வினோத் வரவேற்று பேசினார். அ.தி.மு.க. அமைப்பு செயலாளர் முன்னாள் அமைச்சருமான ஓஎஸ் மணியன் கலந்து கொண்டு பேசினார்.

    ஆர்ப்பாட்டத்தில் நிர்வாகிகள் மாமல்லன், திருமாறன், மனோகரன், ஏவி.மணி பார்த்தசாரதி, பேராசிரியர்ஜெயராமன், அஞ்சம்மாள், ரமாமணி, வழக்கறிஞர்கள் தியாகரா ஜன், பாலாஜி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×