search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    எஸ்.தங்கப்பழம் கல்லூரியில் ரத்தசோகை நோய் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி
    X

    ரத்தசோகை நோய் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்ற போது எடுத்த படம்.

    எஸ்.தங்கப்பழம் கல்லூரியில் ரத்தசோகை நோய் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி

    • டாக்டர் பிரியங்கா ரத்தசோகைக்கான தீர்வுகள் குறித்து பேசினார்.
    • ரத்த சோகைக்கான உணவு முறைகள் குறித்து மாணவிகள் உரையாற்றினர்.

    சிவகிரி:

    வாசுதேவநல்லூர் எஸ்.தங்கப்பழம் கல்வி குழுமத்தில் உள்ள இயற்கை மருத்துவம் மற்றும் யோக அறிவியல் ஆராய்ச்சி மையத்தில் ரத்தசோகை நோய் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு எஸ்.தங்கப்பழம் கல்வி குழுமத்தின் நிறுவனர் எஸ்.தங்கப்பழம், தாளாளர் எஸ்.டி.முருகேசன் ஆகியோர் தலைமை தாங்கி தொடங்கி வைத்தனர். மருத்துவ கல்லூரி முதல்வர் டாக்டர் வினுதா முன்னிலை வகித்தார். இதில் ரத்தசோகை நோய் பற்றியும், அதற்கான இயற்கை மருத்துவ தீர்வுகள் பற்றியும் கல்லூரி விரிவுரையாளர் டாக்டர் பிரியங்கா பேசினார். ரத்த சோகைக்கான யோகா பயிற்சிகள், உணவு முறைகள் குறித்து மருத்துவக்கல்லூரி மாணவிகள் விஜயலெட்சுமி, ராகவிஷெரின், புவனேஷ்வரி ஆகியோர் உரையாற்றினர். நிகழ்ச்சியில் மருத்துவ கல்லூரியின் பேராசிரியர்கள், உதவி பேராசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் கலந்துகொண்டனர். மருத்துவ கல்லூரியின் மாணவ-மாணவிகள், உள்நோயாளிகள் மற்றும் புறநோயாளிகள் ஆகியோர் கலந்து கொண்டு பயன் அடைந்தனர்.

    Next Story
    ×