search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஆயுதப்படை காவலர்கள், குடும்ப உறுப்பினர்களுக்கு  2 மருத்துவர்கள் நியமனம்
    X

    ஆயுதப்படை காவலர்கள், குடும்ப உறுப்பினர்களுக்கு 2 மருத்துவர்கள் நியமனம்

    • மருத்துவர்கள் அனுப்பப்படுவதில்லை என குற்றாச்சாட்டு இருந்தது.
    • மருத்துவ பணி தொய்வு ஏற்படாமல் தொடர்ந்து கண்காணிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    கிருஷ்ணகிரி, பிப்.21-

    கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர் டாக்டர். ராஜஸ்ரீ வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:-

    கிருஷ்ணகிரி மாவட்ட ஆயுதப்படை காவலர் குடியிருப்புக்கு மருத்துவர்கள் அனுப்பப்படுவதில்லை என குற்றாச்சாட்டு இருந்தது.

    எனவே, ஆயுதப்படை காவலர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கு மருத்துவ பணி மேற்கொள்ள கடந்த 16-ந் தேதி முதல் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் உள்ளிருப்பு மருத்துவ அலுவலர் டாக்டர் செல்வி, டாக்டர்கள் ராஜலட்சுமி ஆகியோர் வாரத்திற்கு 2 நாட்கள், ஆயுதப்படை காவலர் குடியிருப்பில் வெளிநோயாளர் பிரிவுக்கு சென்று, காவலர் மற்றும் காவலர்களின் குடும்பத்தினருக்கு மருத்துவ சிகிச்சை அளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

    எனவே, ஆயுதப்படை காவலர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்களுக்கு மருத்துவ பணி தொய்வு ஏற்படாமல் தொடர்ந்து கண்காணிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதனை ஆயுத படை காவலர்கள் மற்றும் குடும்பத்தினர் பயன்படுத்தி கொள்ள கேட்டுக்கொள்கிறேன்.

    இவ்வாறு தனது செய்திக்குறிப்பில் மருத்துவக் கல்லூரி முதல்வர் ராஜஸ்ரீ தெரிவித்துள்ளார்.

    Next Story
    ×