என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள் (District)
திருச்செந்தூர் காஞ்சி ஸ்ரீ சங்கரா பள்ளி மாணவிக்கு இந்தியன் வங்கி சார்பில் பாராட்டு
- இந்தியன் வங்கி சார்பில் மாணவிக்கு பாராட்டு விழா நேற்று பள்ளியில் நடைபெற்றது.
- இந்தியன் வங்கி நெல்லை மண்டல மேலாளர் ஜெயபாண்டியன் மாணவியை பாராட்டி கோப்பை மற்றும் ரூ. 15 ஆயிரம் பரிசு தொகையினை மாணவியிடம் வழங்கினார்.
திருச்செந்தூர்:
திருச்செந்தூர் காஞ்சி ஸ்ரீ சங்கரா அகாடமி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவி துர்கா கடந்த 2021-2022 கல்வியாண்டில் தமிழ்ப்பாடத்தில் 100-க்கு 100 மதிப்பெண்கள் பெற்று மாநில அளவில் முதலிடம் பெற்று சாதனை படைத்தார். இதையடுத்து இந்தியன் வங்கி சார்பில் மாணவிக்கு பாராட்டு விழா நேற்று பள்ளியில் நடைபெற்றது.
விழாவுக்கு பள்ளி முதன்மை முதல்வர் செல்வவைஷ்ணவி தலைமை தாங்கினார். முதல்வர் ஜீனத் முன்னிலை வகித்தார். இந்தியன் வங்கி நெல்லை மண்டல மேலாளர் ஜெயபாண்டியன் மாணவியை பாராட்டி கோப்பை மற்றும் ரூ. 15 ஆயிரம் பரிசு தொகையினை மாணவியிடம் வழங்கினார்.
நிகழ்ச்சியில் வங்கி மண்டல வளர்ச்சி அலுவலர் சுஜா மாணவிக்கு சால்வை அணிவித்து கவுரவித்தார். இதில் மாணவியின் தந்தையான ஆறுமுகநேரி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் செல்வகுமார், தாய் ஹேமா மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். சாதனை மாணவியை பள்ளி தாளாளர் ராமமூர்த்தி உள்ளிட்டோர் பாராட்டினர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்